ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நாடி ஜோதிடம் - அறிமுகம்
 
 

ஜோதிடம் என்பது ஒரு தெய்வீக அறிவியல் ஆகும். மேலும் இது ஒரு வேதாந்தம் ஆகும். இந்து மதம் இதனை வேதங்களின் கண் என்று குறிப்பிடுகிறது. இது கீழ்க்கண்டவற்றினைச் செயல்படுத்துகிறது,

(1). ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி அறிய!

(2). ஒருவர் வாழ்வில் வரும் நல்ல மற்றும் கெட்ட பற்றி காலம் அறிய!

(3). மங்களகரமான மற்றும் அமங்கலமான காலம் முதலியன அறிய!

ஜோதிடத்தின் மூலமாக கிட்டத்தட்ட நம் வாழ்வின் அனைத்து தரப்பு நிகழ்வினையும் நாம் அறிய முடியும். துரதிர்ஷ்டவசமாக அண்மை காலத்தில் சுய பாணியுடைய (self-styled) ஜோதிடர்கள் சிலரின் தவறான போக்கின் காரணமாக, பொதுமக்கள் மத்தியில் ஜோதிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை மறும் இது ஒரு போலியான அறிவியல் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இது தவறான ஜோதிடர்களின் தவறே ஒழிய ஜோதிட சாஸ்த்திரத்தின் தவறல்ல. நம்மால் நங்கு அறியப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் கூட எப்போதும் சரியாக அமைவது இல்லை. சில நேரங்களில் தவறலாம்.

மனித பழக்கமானது சில சமயம் தவறாக பிழை செய்வதுதான். ஒரு பெரிய விஞ்ஞானி கூட சில முறை தவறு செய்யலாம்.. இதேபோல் ஒரு மருத்துவர் கூட சில சமயம் தவறிழைக்கலாம். மேலும் தவறான நோய் கண்டறிதல் மற்றும் தவறான மருந்தை ஒரு மருத்துவர் நிர்வகிப்பதின் மூலம் ஒரு நோயாளி கொலை கூட செய்யப்படலாம். இதேபோல் ஒரு வழக்கறிஞர் தவறிழைப்பதின் மூலம் தனது வாடிக்கையாளருக்கு நிதி இழப்பினை ஏற்ப்படுத்தலாம். ஒரு பொறியாளரின் தோல்வி பெரும் இழப்பை கூட ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் ஏமாற்றுபவர்கள் அல்ல, இது அவர்கள் தொழிலில் ஏற்படும் தோல்விகளே தவிர ஏமாற்றுதல் அல்ல!. அதே தர்க்கம் ஒரு ஜோசியரின் கணிப்புகளிலும் பொருந்தும்.

பலர் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்க முடியாது எனக் கருதுகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெறப்பட்ட நடைமுறை அனுபவங்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மனிதர்களை பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகள் சிலரிடையே பாதிப்பினை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பைத்தியம் என்ற வார்த்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலம் முன்னரே நிலவு மற்றும் மன ஸ்திரமின்மைக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் வலிப்பு போன்ற பல நோய்களுக்கும், நிலவுக்கும் ஒரு நேரடி தொடர்பு உள்ளது என்பதும் தெளிவாகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களானது சந்திர சுழற்சியின் முறையில் நடக்கிறது. தியானப் பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று நன்கு மன ஒருமை செய்ய முடிகிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் நடைமுறையில் நாம் சரி பார்க்க முடியும். மேலும் மருத்துவ தாவரங்கள் நிலவின் பாதிப்பு காரணமாக வளர்வதினைக் காணலாம். நாம் நிலவு ஒளியின் கீழ் ஒரு திறந்த நிலத்தில் ஓய்வு எடுத்தால் மன அமைதி மற்றும் சாந்தமான மனதினை உணர முடியும்.

தாவரங்கள் பூமியில் இருந்து நீர் மற்றும் பிற கனிமங்களை எடுத்து சூரிய ஒளி வளரும். தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். சரியான சூரிய ஒளி இல்லாமல் இருந்தால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். பகல் நேரத்தின் போது அனைத்து உயிரினங்களும் செயலில் இருக்கும், இரவு நேரத்தில் அனைத்து பிறவிகளும் தூங்கிய நிலையில் இருக்கும். பகல் மற்றும் இரவு ஒரு அச்சில் பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. பருவங்கள் சூரியனை சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. ஏனெனில் பருவங்கள், பல மாற்றங்கள் மூலமாக மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர வாழ்க்கை நடைபெறுகிறது.

குளிர் நாடுகளில் மக்களின் நிறம் வெள்ளையாகவும் மற்றும் வெப்ப நாடுகளில் கருப்பு நிறமாகவும் உள்ளனர். இந்த மாற்றங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளின் காரணமாகவும் நடைபெறுகின்றன. இதே முறையில் எல்லா கிரகங்களும் பூமியில் உள்ள மனிதர்களைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களுக்கும் உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற சில சிறப்பு குணங்கள் உண்டு. இந்த இரசாயன மாற்றங்கள் போன்று, கிரகங்களின் கதிர்கள் அவர்கள் இருக்கும் நிலையைப் பொருத்து மாறுகின்றன.

ஒரு நபருக்கு சில விஷயம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று முன்பே தெரியும் என்றால். அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மனம் மற்றும் உடல் ஆகியவற்றினை தயார் நிலைப்படுத்தி வெற்றியை எளிதாகக் கொள்ள தைரியமாக ஏற்பாடு செய்துகொள்வார். அவர் அதை சந்திக்க தயாராக இல்லாத போது அதே நிகழ்வு திடீரென நடந்தால், அவரால் எதிர் கொள்வது கடினம். எனவே குறைந்த பட்சம் நமக்கு எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று குறைந்தது சில அறிகுறிகளாவது தெரிய வேண்டும். பொதுவாக, குறிப்பாக எதிர்காலத்தில் நடக்க போகிறது. என்பது ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஒரு நபரின் கையில் அவரது எதிர்கால தெரியும் என்றால், அவருக்கு எந்த விதமான ஏமாற்றமும் வராது .ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிரகங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைக் குறைக்கவாவது செய்வார்.

ஒரு பலவீனமான நபர் உடற்பயிற்சி செய்து சரியான மருந்து மற்றும் சுகாதார டானிக்குகள் எடுத்து வலுவானவராக ஆகலாம். அதே முறையில், கிரகங்களை அமைதிப்படுத்துதல் செய்து, கோள்களின் செல்வாக்கை மாற்றி மோசமான விளைவுகளை தடுத்து நல்ல முடிவுகள் அதாவது ஆயுளை அதிகரிக்கச் செய்யலாம். பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜோதிடம் ஒரு நிலைக்கு மட்டும் வழிகாட்டி அல்ல, இது மற்ற அறிவியல் துறைக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. மேலும். ஜோதிடமானது வானிலை முன்னறிவிப்பு, உடலியல், உளவியல், புவியியல், கட்டிடக்கலை, மருத்துவ அறிவியல் போன்ற துறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக