செவ்வாய், 20 செப்டம்பர், 2016


atharva-veda-8
கட்டுரையை எழுதியவர்;தன்வந்தரிநாடிஜோதிடம்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1530;
நான்கு வேதங்களில் மிகவும் மர்மம் நிறைந்தது அதர்வண வேதம். ஏனெனில் ஆதிகால மருத்துவ, விஞ்ஞான உண்மைகள், மாய மந்திர பில்லி சூனியங்கள் நிறைந்தது இந்த வேதம். துரதிருஷ்டவசமாக இதில் குறிப்பிடப்படும் மூலிகைகள், தாயத்துக்கள் ஆகியன வழக்கத்தில் இருந்து போய்விட்டதால் என்ன என்றே தெரியவில்லை. ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வரும் சோமக் கொடி பற்றியே நமக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜில்காமேஷ் (சுமேரிய/ பாபிலோனிய) காவியத்தைப் படித்துப் புரிந்து கொண்டுவிடலாம். அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களை அறிவது கடினம். நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்க முடியும்.


ரிக்வேதத்தில் 107 மூலிகை பற்றி வரும் பாடல் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அதில் 107 மூலிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நம் வசமுள்ள சரக, சுஸ்ருத சம்ஹிதைகளையும், தமிழ் சித்த மருத்துவ நூல்களையும் வேதங்களையும் வைத்துக்கொண்டு கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்து ஆராய வேண்டும்.


சோம பானத்தைப் போதையூட்டும் மருந்து என்று வெளிநாட்டுக்காரர்கள் பிதற்றியுள்ளனர். ஆனால் பாண்டியர் தமிழ் கல்வெட்டோ அதை மனோசுத்த மருந்து என்கிறது. நம்மவர்கள் கீதை, குறள், ராமாயணம், மஹாபாரதம் எதையுமே படிக்காமல், சங்க இலக்கிய 30,000 வரிகளைப் படிக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் பல அபத்தங்களை எழுதி வருவது வருந்ததக்கது. முதலில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். வெளி நாட்டுக்காரர் சொல்வதைவிட்டுவிட்டு, நம்மவர் அது பற்றி என்ன சொன்னார்கள் என்று முதலில் அறிய வேண்டும்; நம்ப வேண்டும். அப்படிச் செய்தால் புரியாத புதிர்கள் விடுபடும். மர்மங்கள் துலங்கும்!


atharva__veda__samhita_

இதோ ஜங்கிடா மர்மங்கள்:-

ஜங்கிடா என்பது ஒரு மூலிகை என்றும் பல வியாதிகளுக்குக் கைகண்ட மருந்து என்றும் கீத், மக்டொனல் இருவரும் எழுதிய வேதப் பொருளகராதி (வேதிக் இண்டெக்ஸ்) கூறுகிறது. அவர்களே இது என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று ஒப்புகொண்டுவிட்டு கௌசிக சூத்திரத்தில் வரும் குறிப்பில் இதை காலண்ட் என்பவர் “டெர்மினாலியா அர்ஜுனா” -- என்ற தாவரம் என்று சொல்வதாகவும் குறித்துள்ளனர். டெர்மினாலியா அர்ஜுனா என்பது மருத மரம் ஆக்கும்.

மூன்று மருத மரங்களும் மூன்று மாணிக்கங்களும் என்ற எனது கட்டுரையில், ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனம்), திருவிடை மருதூர் (மத்யார்ஜுனம்), திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) ஆகிய தலங்களில் உள்ள மருத மரங்கள் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

ஆனால் தேவி சந்த் என்பவர் எழுதிய அதர்வண வேத புத்தகத்தில் ஒரு இடத்தில் ஜங்கிடா என்பது கடவுளைக் குறிக்கும் என்று எழுதிவிட்டு பிற இடங்களில் மூலிகை என்று மொழி பெயர்க்கிறார். சாயணர் என்ற  பெரிய மகான் தான் 700 வருடங்களுக்கு முன் துணிந்து வேதங்களுக்குப் பொருள் எழுதினார். அவர் இந்த ஜங்கிடா என்பது காசி மாநகரத்தில் உள்ள ஒரு மரம் என்கிறார்.

 Terminalia_arjuna-1
மருத மரம் (விக்கிபீடியா படம்)

இது இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்களைக் குணப்படுத்தும் என்று தெரிகிறது. மருத மரம் குறித்து வெளியான பல மருத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் இது இருதய மற்றும் ரத்த நாளம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் என்று எழுதியுள்ளனர். ஆயினும் அவர்களுடைய ஆய்வுகள் முடிவானவை அல்ல. எதிரும் புதிருமாக முடிவுகள் வந்தால் மருத்துவ உலகம் அதை ஏற்காது. வேறு சிலர் ஜங்கிடா என்பதை வேறு சில மூலிகைகளுடன் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுதியுள்ளனர்.

வேதங்களில் குறிப்பிடப்படும் நூற்றுக்கணக்கான மூலிகைகள், நோய்களின் பெயர்கள் எல்லாம் ஊகத்தின் பெயரிலேயே எழுதப்பட்டுள்ளதால் யார் சொல்வதையும் உண்மை என்றோ தவறு என்றோ சொல்ல முடியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதையுமே கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் வகையில் எழுதிவிட்டு சோம பானம் என்பது மட்டும் என்ன என்று “கண்டுபிடித்துவிட்டதாக” சில வெளி நாட்டினரும் அதைக் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லும் நம்மூர் பகுத்தறிவுகளும் நகைப்புக்குரியவர்கள் என்பது வேதங்களைப் படித்தோர் அறிவர். இனம் இனத்தோடு சேரும். மது, மாது, மாமிசம், போதைப் பொருளில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் எப்படிப் புரியும்? மாக்ஸ்முல்லர் போன்ற பலர் இந்தியாவுக்கு வரமலேயே நம் வேதங்கள் பற்றி எழுதினர்!! நியுயார்க்கிற்குப் போகாமலேயே மேலூர் கொட்டாம்பட்டி முனிசாமி “உலகிலேயே உயரமான கட்டிடங்கள்” என்று புத்தகம் வெளியிட்டால் அதை தமாஷ் இலக்கிய வகையில் சேர்க்கலாம் அல்லவா!!


 terminalia arjuna
Marutha maram= Terminalia arjuna

மேலும் இந்தியா வந்த வெளிநாட்டினருக்கும் உதவியோர் அரைகுறை ஆங்கிலம், அரைகுறை வேத சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே. ஆகையால் அவர்கள் மொழிபெயர்ப்பும் அரைகுறையே. ரமணர், ராம கிருஷ்ணர், காஞ்சி மஹா சுவாமிகள், சிருங்கேரிப் பெரியவர் போன்ற உத்தமோத்தமர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பினால் போதும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதங்களை உள்ளது உள்ளபடி காப்பது நமது கடமை. மனித இனத்தின் முதல் புத்தகம் அது. சுமேரிய எகிப்திய இலக்கியங்களை எல்லாம் படித்தோர்கூட வேதங்களை ஊகிக்கத்தான் முடிகிறது, பொருள் சொல்ல முடியவில்லை. ஆயினும் வேதங்களால் பலன் இல்லாமல் இல்லை.

டெலிவிஷனும். மொபைல் போனும் எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியாது ஆயினும் அவைகளைப் பயன்படுத்திப் பயன் அடைகிறோம். இது போல வேதங்களையும் நம்பிக்கையுடன் ஓதினால் பலன் உண்டு.

Flowers_with_Sykes's_warbler_I_IMG_1880
 மருத மரம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்கிறார்: கண் தெரியாதவன் ஒருவன் கையில் விளக்கைக் கொண்டு சென்றான். எல்லோரும் கேட்டார்கள், உனக்கோ கண் தெரியாது, எதற்கப்பா விளக்கு? என்று. அவன் சொன்னான், “உண்மைதான் எனக்குக் கண் தெரியாது. இருட்டில் நீங்கள் என்மீது விழுந்து விடக் கூடாதல்லவா? அதற்காகத்தான். இது போலவே நாமும் அர்த்தம் தெரியாதபோதும் வேதம் என்னும் ஒளி விளக்கை ஏந்திச் செல்வோம். அதன் பொருள் தெரிந்த மகான்கள் யுகந்தோறும் அவதரித்து நம்மை வழிகாட்டிச் செல்வர்” (பெரியவர் சொன்ன சொற்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இல்லை. நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன்) by.www.danvantarinadi.com.

திங்கள், 19 செப்டம்பர், 2016

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதை






அகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில் அவற்றைக் கோர்த்து தன்னுடைய தோளிலே சுமந்தவாறு தென் திசையை நோக்கிப்புறப்பட்டான்.நீண்ட நடையால் களைப்புற்ற இடும்பன் சிறிதுநேரம் இளைப்பாற எண்ணி காவுதடியை இறக்கிவைத்தான். சற்றுநேரம் இளைப்பாறிய இடும்பன், மீண்டும் புறப்பட ஆய்த்தமாகி காவுதடியை மீண்டும் தூக்கமுயன்றபோது மலைகள் அசையவில்லை. காவுதடியும் மலைகளும் இம்மியளவும் அசையாததால் வெறுப்புற்று நின்றபோது அங்கு ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். இவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணி கோபங்கொண்டு போர் தொடுத்தான் அந்தச் சிறுவனோடு. போரின் இறுதியில் தோற்றுவீழ்ந்தான். இவற்றை அறிந்துகொண்ட அகத்தியர் உடனே விரைந்து வந்தார். வந்து நிற்கின்ற சிறுவன் முருகன் என்று உணர்ந்து வணங்கினார்.அன்று தொட்டு முருகனுக்கு காவுதடி தூக்கும் வழக்கம் உருவாயிற்று. காவுதடி காவடியாகவும் மருவிற்று.

நந்தி



சிலாதர் எனும் சிவனடியார் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்துவதால் வருந்திய இறைவன் பிளைப்பேறுக்கு வரம் அருளினார். அதன் பலனாக எட்டு வயது ஆயுளுடைய நந்தி பிறந்தார். தனது ஆயுளை அறிந்துகொண்ட நந்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்து கயிலைக்கு காவலனாகும் பேறடைந்தார்.உருத்திர கணங்களின் தலைவராகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார். இறைவனே முன்னின்று நடத்தும் திருமணப்பேறையும் பெற்றுக்கொண்டார். அதிகார நந்தி எனும் சிறப்புப்பெயருக்கு உரியவரானார்.
நந்தியின் வகைகள்
ஆகம விதிமுறைக்கமைந்த சிவாலயங்களில் இருக்கக்கூடிய அதிகூடிய நந்திகளின் எண்ணிக்கை ஐந்து என்று முன்னமே கூறியிருந்தேன்.அவைபற்றி இங்கு பார்ப்போம்.போக நந்தி,பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்(விடை)நந்தி,தரும நந்தி என்பனவே அவ்வைந்துமாகும்.

ஒருமுறை போகங்களின் பதியாகிய இந்திரன் சிவபெருமானுக்கு நந்தியாக வந்து வாகனமாக பக்திசெலுத்தினான். அதனால் அந்த நந்தியை போகநந்தி என்பர்.இதனை கோயிலுக்கு வெளியே காணலாம். இது போகங்களைத் துறந்து அதாவது ஆலயத்திற்கு வரும்போது சுக துக்கங்களைத் துறந்து வரும்படி குறித்துநிற்கின்றது.

பிரம்மதேவன் தனது படைக்கும் தொழிலை மேற்கொள்ளமுதல் சிவபெருமானிடம் சென்று உபதேசம் பெற்றார். அப்போது நந்தியாகமாறி இறைவனைத் தாங்கி நின்றார். இதனால் இந்த நந்தியை பிரம்மநந்தி என்பர்.பிரகார மண்டபத்தில் சுதையால் செதுக்கப்பட்டு காணப்படும்.

ஆன்மநந்தி என்பது கொடிமரத்துக்கு அருகில் மூலமூர்த்தியை நோக்கியவாறு காணப்படும். ஆன்மாக்கள் எல்லாவற்றிலும் இறைவனாகிய சிவபெருமான் நிறைந்துயிருப்பதால் ஆன்மாவின் வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதோச காலபூசைக்குரியது.

மால் என்றால் திருமால்.விடை என்றால் நந்தி. திருமால் விடையாகமாறி சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் உருவாயிற்று. திரிபுரங்களையும் எரிக்க சிவபெருமான் புறப்பட்டபோது இடையிலே இறைவனின் தேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அப்போது திருவிளையாடல் நாயகனாகிய சிவபெருமானை கீழேவிழாது தாங்கிட திருமால் நந்தி(விடை)யாக மாறி சிவபெருமானை தாங்கி வாகனமாகி நின்றார். இவ்வாறு திருமால் நந்தியாக மாறிய நந்தியை மால்விடை என்பர். இதனை கொடிமரத்துக்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் காணலாம்.

கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகிலிருப்பது தருமநந்தி என அழைக்கப்படும். ஊழிகால இறுதியில் இறைவனாகிய சிவபெருமானிடத்தில் எல்லாமே ஒடுங்கிவிடும். தர்மத்தைத் தவிர. இந்த தர்மம் நந்தியாகமாறி இறைவனை தாங்கிநிற்கும்.by.www.danvantarinadi.com.

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 42)ஞானம் 1


இது மச்ச முனி வலைப்பூவில் வெளியான கட்டுரையின் மீள்பதிவேயாகும்.இன்று பிரதோஷம் என்பதால் இச் சிறப்புப் பதிவு.

 ஞானம் என்றால் என்ன????(பாகம்1)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.

எனது நண்பர் ஒருவர் (பெயர் மாணிக்கம்) என்னிடம்”நான் பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த பூமியில் நிறைய இன்பங்கள் இருக்கின்றன. அவற்றை அனுபவிக்கவே நான் இங்கே வந்துள்ளேன்.என்னால் தியானம் எல்லாம் செய்ய முடியாது. தியானம் ஏன் செய்ய வேண்டும்” இப்படிக் கேட்டார். 

இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான ஆளை சந்தித்துவிட்டேன் என்று எண்ணினேன். இதற்கு பதிலாக ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தேன்.அவர் மீண்டும் என்னைப் பார்த்து “நீங்கள் இரண்டாம் நிலையில் உள்ளீர்கள்,முதல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்” என்றார்.நான் அதற்கு ஆதிபராசக்தி படத்தில் வருவது போல காளியாத்தா!!! மாரியாத்தா!!! என்று முழு சிரத்தையுடன் சொன்னால் போதும் இறைவனை அடையலாம் என்றேன்.அவருக்கு இது முழு திருப்தி!!!!
இது போதுமா????? போதாது எனில், எது சரி?????.எப்படி இறைவனைக் காணலாம்.அவருடன் அளவளாவலாம்.இறைவன் ஏற்படுத்திய விதிகளை அவரே தளர்த்துவாரா????இறைவனுடன் எப்படிப் பழகலாம்???இறைவனுடன் இறைவனுக்கு வேலைக்காரன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு மகன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகலாமா???? இறைவனுடன் இறைவனுக்கு சீடன் போலப் பழகலாமா???? கேள்விகள் பல???? விடைகள் கீழே கிடைக்கலாம்!!!!!

இந்த பட ஒளிக்காட்சியை காணுங்கள்!!!!


என் நண்பரோ பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.நந்தனாரோ பிறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.அப்படிப் பிறந்தாலும் இறைவா உனை மறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.எது சரி!!!

சரியை மார்க்கம்.(தாசமார்க்கம்)
எளிய நல் தீபம் இடல் மலர்கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே
                         (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று தீபம் இடுதல்,கோவில் நந்தவனத்தில் மலர் கொய்து,மாலையாக கோர்த்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்,கோவிலை தண்ணீர் கொண்டு மெழுகி சுத்தம் செய்தல்,தூர்த்து சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்திப் பாடுதல், மற்றும் உள்ள கோவில் காரியங்கள் அத்தனையும் செய்தல், திருமஞ்சனம்,இறைவனுக்கு வேண்டிய அபிஷேக ஆராதனைக்கு வேண்டியவைகளை செய்து,கோயில் தளிகைக்கான பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்தல்,இறைவனின் அடியார் மற்றும் இறை திருவடிவம் கண்டு பணிதல் ஆகியவை அனைத்தும் சரியை மார்க்கம் ஆகும்.


இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருநாவுக்கரசர். இந்த சரியை மார்க்கத்தை தாச மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு எஜமானனுக்கும் ஒரு வேலைக்காரனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது தாச மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

கிரியை மார்க்கம்.(சற்புத்திர மார்க்கம்)
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
                      (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு பூசனைகள் செய்தல், இறைவன் புகழையும்,அவன் நாமங்களையும், பக்தி கீதங்களையும் வாசித்தல், இறைவனைப் போற்றுதல், மந்திரங்களைச் செபித்தல், குற்றங்களற்ற நல்ல தவம் புரிதல், வாய்மையுடன் இருத்தல், உடலிலும் மனத்திலும் அழுக்கின்றி இருத்தல், மன நேசிப்புடன் தகப்பனுக்கு சோறிட்டு கவனிப்பது போல், கோவில் தளிகையிட்டு இறைவனுக்கு நீர்விளாவி கவனிப்பது ஆகியவை கிரிகை மார்க்கமாகும்.
இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருஞான சம்பந்தர். இந்த கிரியை மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு தகப்பனுக்கும் ஒரு மகனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

அடுத்து இதே தலைப்பில் சித்தர் விஞானம் 43ல் ஞானம் என்றால் என்ன????(பாகம் 2)ல் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம் .

யாக்கை (உடல்) நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடகொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
-திருமூலர்
ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த இனிய உணவினைத் தமது மனைவியிடம் சொல்லி செய்து வைத்து உண்டார். தனது மனைவியோடு அன்றிரவு இனிமையாகப் பேசி காலங்கழித்தார். பின்பு படுத்தவுடன் இடப்பக்கம் வலிக்கிறதே என்று தன் மனைவியிடம் முறையிட்டார். காலையில் கண் விழித்த மனைவி பார்த்ததும் அவர்(கணவர்) இறந்திருந்தார்.
இப்பாடல் மனித வாழ்வின் நிலையற்றத் தன்மையை மிகவும் அழகாக சித்தரிக்கிறது.ஓடி ஆடி பாடுகின்ற மனிதனின் உயிர் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும், சொந்தங்களையும் இப்புவியிலே விட்டு கூட்டை விட்டுப் பிரிந்து செல்லும் பறவை போல ஒரு நாளில் பிரிந்து விடுகிறது.

பரமனை பற்றுங்கள்

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்
உங்கள் வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெற விரும்பினால், சிவபெருமானைப் பற்றுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும்.www.danvantarinadi.com

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நாடி ஜோதிடம் - அறிமுகம்
 
 

ஜோதிடம் என்பது ஒரு தெய்வீக அறிவியல் ஆகும். மேலும் இது ஒரு வேதாந்தம் ஆகும். இந்து மதம் இதனை வேதங்களின் கண் என்று குறிப்பிடுகிறது. இது கீழ்க்கண்டவற்றினைச் செயல்படுத்துகிறது,

(1). ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி அறிய!

(2). ஒருவர் வாழ்வில் வரும் நல்ல மற்றும் கெட்ட பற்றி காலம் அறிய!

(3). மங்களகரமான மற்றும் அமங்கலமான காலம் முதலியன அறிய!

ஜோதிடத்தின் மூலமாக கிட்டத்தட்ட நம் வாழ்வின் அனைத்து தரப்பு நிகழ்வினையும் நாம் அறிய முடியும். துரதிர்ஷ்டவசமாக அண்மை காலத்தில் சுய பாணியுடைய (self-styled) ஜோதிடர்கள் சிலரின் தவறான போக்கின் காரணமாக, பொதுமக்கள் மத்தியில் ஜோதிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை மறும் இது ஒரு போலியான அறிவியல் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இது தவறான ஜோதிடர்களின் தவறே ஒழிய ஜோதிட சாஸ்த்திரத்தின் தவறல்ல. நம்மால் நங்கு அறியப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் கூட எப்போதும் சரியாக அமைவது இல்லை. சில நேரங்களில் தவறலாம்.

மனித பழக்கமானது சில சமயம் தவறாக பிழை செய்வதுதான். ஒரு பெரிய விஞ்ஞானி கூட சில முறை தவறு செய்யலாம்.. இதேபோல் ஒரு மருத்துவர் கூட சில சமயம் தவறிழைக்கலாம். மேலும் தவறான நோய் கண்டறிதல் மற்றும் தவறான மருந்தை ஒரு மருத்துவர் நிர்வகிப்பதின் மூலம் ஒரு நோயாளி கொலை கூட செய்யப்படலாம். இதேபோல் ஒரு வழக்கறிஞர் தவறிழைப்பதின் மூலம் தனது வாடிக்கையாளருக்கு நிதி இழப்பினை ஏற்ப்படுத்தலாம். ஒரு பொறியாளரின் தோல்வி பெரும் இழப்பை கூட ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் ஏமாற்றுபவர்கள் அல்ல, இது அவர்கள் தொழிலில் ஏற்படும் தோல்விகளே தவிர ஏமாற்றுதல் அல்ல!. அதே தர்க்கம் ஒரு ஜோசியரின் கணிப்புகளிலும் பொருந்தும்.

பலர் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்க முடியாது எனக் கருதுகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெறப்பட்ட நடைமுறை அனுபவங்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மனிதர்களை பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகள் சிலரிடையே பாதிப்பினை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பைத்தியம் என்ற வார்த்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலம் முன்னரே நிலவு மற்றும் மன ஸ்திரமின்மைக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் வலிப்பு போன்ற பல நோய்களுக்கும், நிலவுக்கும் ஒரு நேரடி தொடர்பு உள்ளது என்பதும் தெளிவாகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களானது சந்திர சுழற்சியின் முறையில் நடக்கிறது. தியானப் பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று நன்கு மன ஒருமை செய்ய முடிகிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் நடைமுறையில் நாம் சரி பார்க்க முடியும். மேலும் மருத்துவ தாவரங்கள் நிலவின் பாதிப்பு காரணமாக வளர்வதினைக் காணலாம். நாம் நிலவு ஒளியின் கீழ் ஒரு திறந்த நிலத்தில் ஓய்வு எடுத்தால் மன அமைதி மற்றும் சாந்தமான மனதினை உணர முடியும்.

தாவரங்கள் பூமியில் இருந்து நீர் மற்றும் பிற கனிமங்களை எடுத்து சூரிய ஒளி வளரும். தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். சரியான சூரிய ஒளி இல்லாமல் இருந்தால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். பகல் நேரத்தின் போது அனைத்து உயிரினங்களும் செயலில் இருக்கும், இரவு நேரத்தில் அனைத்து பிறவிகளும் தூங்கிய நிலையில் இருக்கும். பகல் மற்றும் இரவு ஒரு அச்சில் பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. பருவங்கள் சூரியனை சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. ஏனெனில் பருவங்கள், பல மாற்றங்கள் மூலமாக மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர வாழ்க்கை நடைபெறுகிறது.

குளிர் நாடுகளில் மக்களின் நிறம் வெள்ளையாகவும் மற்றும் வெப்ப நாடுகளில் கருப்பு நிறமாகவும் உள்ளனர். இந்த மாற்றங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளின் காரணமாகவும் நடைபெறுகின்றன. இதே முறையில் எல்லா கிரகங்களும் பூமியில் உள்ள மனிதர்களைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களுக்கும் உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற சில சிறப்பு குணங்கள் உண்டு. இந்த இரசாயன மாற்றங்கள் போன்று, கிரகங்களின் கதிர்கள் அவர்கள் இருக்கும் நிலையைப் பொருத்து மாறுகின்றன.

ஒரு நபருக்கு சில விஷயம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று முன்பே தெரியும் என்றால். அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மனம் மற்றும் உடல் ஆகியவற்றினை தயார் நிலைப்படுத்தி வெற்றியை எளிதாகக் கொள்ள தைரியமாக ஏற்பாடு செய்துகொள்வார். அவர் அதை சந்திக்க தயாராக இல்லாத போது அதே நிகழ்வு திடீரென நடந்தால், அவரால் எதிர் கொள்வது கடினம். எனவே குறைந்த பட்சம் நமக்கு எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று குறைந்தது சில அறிகுறிகளாவது தெரிய வேண்டும். பொதுவாக, குறிப்பாக எதிர்காலத்தில் நடக்க போகிறது. என்பது ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஒரு நபரின் கையில் அவரது எதிர்கால தெரியும் என்றால், அவருக்கு எந்த விதமான ஏமாற்றமும் வராது .ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிரகங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைக் குறைக்கவாவது செய்வார்.

ஒரு பலவீனமான நபர் உடற்பயிற்சி செய்து சரியான மருந்து மற்றும் சுகாதார டானிக்குகள் எடுத்து வலுவானவராக ஆகலாம். அதே முறையில், கிரகங்களை அமைதிப்படுத்துதல் செய்து, கோள்களின் செல்வாக்கை மாற்றி மோசமான விளைவுகளை தடுத்து நல்ல முடிவுகள் அதாவது ஆயுளை அதிகரிக்கச் செய்யலாம். பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜோதிடம் ஒரு நிலைக்கு மட்டும் வழிகாட்டி அல்ல, இது மற்ற அறிவியல் துறைக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. மேலும். ஜோதிடமானது வானிலை முன்னறிவிப்பு, உடலியல், உளவியல், புவியியல், கட்டிடக்கலை, மருத்துவ அறிவியல் போன்ற துறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.


நாடி ஜோதிட விதிகள் - நாடி ஜோதிடம்




நாடி ஜோதிடத்தின்படி பொதுவாக, ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலங்களை எப்போது அனுபவிப்பார் என்பதை, நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தைக் கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை தருகிறதோ, அப்பொழுது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

பழைய ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் ஒரு கிரகமாகப்பட்டது, தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி.

நாடிமுறை ஜோதிடத்தில் சுமார் 23 விதிகள் உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டால் நாடி முறையில் பலன் சொல்வது சுலபம்.
www.danvantarinadi.com