திங்கள், 19 செப்டம்பர், 2016

யாக்கை (உடல்) நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடகொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
-திருமூலர்
ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த இனிய உணவினைத் தமது மனைவியிடம் சொல்லி செய்து வைத்து உண்டார். தனது மனைவியோடு அன்றிரவு இனிமையாகப் பேசி காலங்கழித்தார். பின்பு படுத்தவுடன் இடப்பக்கம் வலிக்கிறதே என்று தன் மனைவியிடம் முறையிட்டார். காலையில் கண் விழித்த மனைவி பார்த்ததும் அவர்(கணவர்) இறந்திருந்தார்.
இப்பாடல் மனித வாழ்வின் நிலையற்றத் தன்மையை மிகவும் அழகாக சித்தரிக்கிறது.ஓடி ஆடி பாடுகின்ற மனிதனின் உயிர் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும், சொந்தங்களையும் இப்புவியிலே விட்டு கூட்டை விட்டுப் பிரிந்து செல்லும் பறவை போல ஒரு நாளில் பிரிந்து விடுகிறது.

பரமனை பற்றுங்கள்

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்
உங்கள் வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெற விரும்பினால், சிவபெருமானைப் பற்றுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும்.www.danvantarinadi.com

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நாடி ஜோதிடம் - அறிமுகம்
 
 

ஜோதிடம் என்பது ஒரு தெய்வீக அறிவியல் ஆகும். மேலும் இது ஒரு வேதாந்தம் ஆகும். இந்து மதம் இதனை வேதங்களின் கண் என்று குறிப்பிடுகிறது. இது கீழ்க்கண்டவற்றினைச் செயல்படுத்துகிறது,

(1). ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி அறிய!

(2). ஒருவர் வாழ்வில் வரும் நல்ல மற்றும் கெட்ட பற்றி காலம் அறிய!

(3). மங்களகரமான மற்றும் அமங்கலமான காலம் முதலியன அறிய!

ஜோதிடத்தின் மூலமாக கிட்டத்தட்ட நம் வாழ்வின் அனைத்து தரப்பு நிகழ்வினையும் நாம் அறிய முடியும். துரதிர்ஷ்டவசமாக அண்மை காலத்தில் சுய பாணியுடைய (self-styled) ஜோதிடர்கள் சிலரின் தவறான போக்கின் காரணமாக, பொதுமக்கள் மத்தியில் ஜோதிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை மறும் இது ஒரு போலியான அறிவியல் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இது தவறான ஜோதிடர்களின் தவறே ஒழிய ஜோதிட சாஸ்த்திரத்தின் தவறல்ல. நம்மால் நங்கு அறியப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் கூட எப்போதும் சரியாக அமைவது இல்லை. சில நேரங்களில் தவறலாம்.

மனித பழக்கமானது சில சமயம் தவறாக பிழை செய்வதுதான். ஒரு பெரிய விஞ்ஞானி கூட சில முறை தவறு செய்யலாம்.. இதேபோல் ஒரு மருத்துவர் கூட சில சமயம் தவறிழைக்கலாம். மேலும் தவறான நோய் கண்டறிதல் மற்றும் தவறான மருந்தை ஒரு மருத்துவர் நிர்வகிப்பதின் மூலம் ஒரு நோயாளி கொலை கூட செய்யப்படலாம். இதேபோல் ஒரு வழக்கறிஞர் தவறிழைப்பதின் மூலம் தனது வாடிக்கையாளருக்கு நிதி இழப்பினை ஏற்ப்படுத்தலாம். ஒரு பொறியாளரின் தோல்வி பெரும் இழப்பை கூட ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் ஏமாற்றுபவர்கள் அல்ல, இது அவர்கள் தொழிலில் ஏற்படும் தோல்விகளே தவிர ஏமாற்றுதல் அல்ல!. அதே தர்க்கம் ஒரு ஜோசியரின் கணிப்புகளிலும் பொருந்தும்.

பலர் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்க முடியாது எனக் கருதுகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெறப்பட்ட நடைமுறை அனுபவங்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மனிதர்களை பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகள் சிலரிடையே பாதிப்பினை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பைத்தியம் என்ற வார்த்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலம் முன்னரே நிலவு மற்றும் மன ஸ்திரமின்மைக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் வலிப்பு போன்ற பல நோய்களுக்கும், நிலவுக்கும் ஒரு நேரடி தொடர்பு உள்ளது என்பதும் தெளிவாகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களானது சந்திர சுழற்சியின் முறையில் நடக்கிறது. தியானப் பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று நன்கு மன ஒருமை செய்ய முடிகிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் நடைமுறையில் நாம் சரி பார்க்க முடியும். மேலும் மருத்துவ தாவரங்கள் நிலவின் பாதிப்பு காரணமாக வளர்வதினைக் காணலாம். நாம் நிலவு ஒளியின் கீழ் ஒரு திறந்த நிலத்தில் ஓய்வு எடுத்தால் மன அமைதி மற்றும் சாந்தமான மனதினை உணர முடியும்.

தாவரங்கள் பூமியில் இருந்து நீர் மற்றும் பிற கனிமங்களை எடுத்து சூரிய ஒளி வளரும். தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். சரியான சூரிய ஒளி இல்லாமல் இருந்தால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். பகல் நேரத்தின் போது அனைத்து உயிரினங்களும் செயலில் இருக்கும், இரவு நேரத்தில் அனைத்து பிறவிகளும் தூங்கிய நிலையில் இருக்கும். பகல் மற்றும் இரவு ஒரு அச்சில் பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. பருவங்கள் சூரியனை சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக உருவாகின்றன. ஏனெனில் பருவங்கள், பல மாற்றங்கள் மூலமாக மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர வாழ்க்கை நடைபெறுகிறது.

குளிர் நாடுகளில் மக்களின் நிறம் வெள்ளையாகவும் மற்றும் வெப்ப நாடுகளில் கருப்பு நிறமாகவும் உள்ளனர். இந்த மாற்றங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளின் காரணமாகவும் நடைபெறுகின்றன. இதே முறையில் எல்லா கிரகங்களும் பூமியில் உள்ள மனிதர்களைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களுக்கும் உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற சில சிறப்பு குணங்கள் உண்டு. இந்த இரசாயன மாற்றங்கள் போன்று, கிரகங்களின் கதிர்கள் அவர்கள் இருக்கும் நிலையைப் பொருத்து மாறுகின்றன.

ஒரு நபருக்கு சில விஷயம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று முன்பே தெரியும் என்றால். அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மனம் மற்றும் உடல் ஆகியவற்றினை தயார் நிலைப்படுத்தி வெற்றியை எளிதாகக் கொள்ள தைரியமாக ஏற்பாடு செய்துகொள்வார். அவர் அதை சந்திக்க தயாராக இல்லாத போது அதே நிகழ்வு திடீரென நடந்தால், அவரால் எதிர் கொள்வது கடினம். எனவே குறைந்த பட்சம் நமக்கு எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று குறைந்தது சில அறிகுறிகளாவது தெரிய வேண்டும். பொதுவாக, குறிப்பாக எதிர்காலத்தில் நடக்க போகிறது. என்பது ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஒரு நபரின் கையில் அவரது எதிர்கால தெரியும் என்றால், அவருக்கு எந்த விதமான ஏமாற்றமும் வராது .ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிரகங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைக் குறைக்கவாவது செய்வார்.

ஒரு பலவீனமான நபர் உடற்பயிற்சி செய்து சரியான மருந்து மற்றும் சுகாதார டானிக்குகள் எடுத்து வலுவானவராக ஆகலாம். அதே முறையில், கிரகங்களை அமைதிப்படுத்துதல் செய்து, கோள்களின் செல்வாக்கை மாற்றி மோசமான விளைவுகளை தடுத்து நல்ல முடிவுகள் அதாவது ஆயுளை அதிகரிக்கச் செய்யலாம். பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜோதிடம் ஒரு நிலைக்கு மட்டும் வழிகாட்டி அல்ல, இது மற்ற அறிவியல் துறைக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. மேலும். ஜோதிடமானது வானிலை முன்னறிவிப்பு, உடலியல், உளவியல், புவியியல், கட்டிடக்கலை, மருத்துவ அறிவியல் போன்ற துறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.


நாடி ஜோதிட விதிகள் - நாடி ஜோதிடம்




நாடி ஜோதிடத்தின்படி பொதுவாக, ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலங்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலங்களை எப்போது அனுபவிப்பார் என்பதை, நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தைக் கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை தருகிறதோ, அப்பொழுது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

பழைய ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் ஒரு கிரகமாகப்பட்டது, தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி.

நாடிமுறை ஜோதிடத்தில் சுமார் 23 விதிகள் உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டால் நாடி முறையில் பலன் சொல்வது சுலபம்.
www.danvantarinadi.com
ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!

                                மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.
பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், 'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.
இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

ஜீவநாடி!


நாடிசோதிடம் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் அகத்தியர் ஆவணத்தில் இருப்பதாகக் கேள்விப்படுவதாலும், பலர் அதனை நம்பாததாலும், பலருக்கும் அதில் விருப்பம் இல்லாததாலும் அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆயினும் ஜீவ நாடி என்னும் அற்புத நாடி குறித்துச் சில மட்டும் அன்பர்களின் பார்வைக்கு... 

நாடியில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக ஜீவநாடியைக் கூறலாம். இதை ஒரு அதிசய நாடி என்று கூறினும் தவறில்லை. ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பாகும். அந்நோக்கிலேயே முனிவர்கள் இதனை இயற்றியுள்ளனர்.

ஜீவநாடி பார்ப்பதற்கு எந்த மனிதரின் கைரேகையும் தேவையில்லை. மேலும் பார்க்க வந்திருப்பவர் தம்மைப் பற்றிய எந்த விவரங்களையும் சோதிடரிடம் கூறவேண்டியதும் இல்லை.

மற்ற நாடிகளில், ஓலையில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். (டிவி. நியூஸ் மானிட்டர் போல). அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும், அவருடைய பிரச்னைகளுக்குத் தகுந்தவாறு, ஒவ்வொரு மாதிரியான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மை எனக் கூறலாம்.

எல்லோரிடமும் இத்தகைய ஓலைச் சுவடிகள் இருக்காது. இதனை வைத்திருக்கும் சோதிடர்கள் மிகவும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்பவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், பணம், பொருள், புகழ் போன்றவற்றிற்கு அதிக ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சுயநலமில்லாமல், சேவை மனப்பான்மையுடன் தான் இந்தத் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள்முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, மேலும் செயலிழந்து விடும். தவறாக நடந்து கொண்டால், அந்த நாடியை வைத்திருப்பவர்களுக்குத் தண்டனையும், முனிவர்களின் சாபமும் தான் கிடைக்கும். எனவே தான் இத்தகைய நாடிகள், பரவலாக சோதிடர்களிடம் காணப்படுவதில்லை


இந்த ஜீவ நாடியின் சிறப்பு என்னவென்றால், தனி நபரின் சிக்கல்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் சிக்கல்களுக்குக் கூட வழிகாட்டுவதுதான். இதன் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். நடந்தது, நடக்கின்றது, நடக்கப் போவது என அனைத்தையும், தனிநபர்களுக்கு மட்டுமல்லாது, நாட்டுக்கும் கூடக் கண்டறியலாம். ஆனால் அதற்குச் சம்பந்தப்பட்ட முனிவரின் அருளாசி தேவை, இல்லையெனில் பலன்கள் சரியாக அமையாது.


நாடிசோதிடத்தில் ஆர்வமுடைய, பிரபல நகைச்சுவை நடிகர், இயக்குநர், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், தனது கார் டயர் பஞ்சர் ஆகும் என்ற தகவல்கூட நாடியில் வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். அந்த அளவிற்குத் துல்லியத் தன்மை வாய்ந்தது இந்த ஜீவ நாடி. இந்த நாடியினைப் பார்ப்பதற்கும், விதி அமைப்பும், சம்பந்தப்பட்ட முனிவரின் அருளாசியும் இருந்தாலன்றிச் சாத்தியமில்லை.


மேலும் மற்ற நாடிகளைப் போல் ஒரே இடத்தில் படிக்க வேண்டி அல்லது பற்பல இடங்களுக்கும், அதாவது சில குறிப்பிட்ட செய்திகளைத் தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட சில இடங்களுக்குச் சில ஆலயங்களுக்குச் சென்றும் படிக்க வேண்டி வரும். அந்தஅளவிற்குத் தெய்வீகத்தன்மை வாய்ந்தது இந்த ஜீவ நாடி. ஜீவ நாடியின் மூலம் பல்வேறு அதிசயச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிவந்துள்ளதாகவும் திரு விக்கரவாண்டி இரவிச்சந்திரன், தமது 'முனிவர்களின் சுவடிகளும், முற்பிறவி உண்மைகளும்' என்ற நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.



ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்
இப் பாரதத்ததுப் பெரு நகர் ஆங்கெண் ஔர் விரிசலும்
காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்.
வலுவிழந்தார்ப் போலே வாட்டமது கொண்டார்ப் போலே
நின்றிடினும் கூட்டமது காண ஔர்வழி
உலகுக்கு ஒளி ஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்
ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவ முக்தரும்
யோகியரும் சித்தாதிப் பெருமுனியோரும் விண்டுரைத்தவாறு
தவ ஒளியாலே ஔர் பலன் துல்லியமாய் எழுந்துபேச
துரிதத்தினால் துரியாதீதம் கடந்து மறு கண்ணும் ஔர்வழி கண்டு
வையகத்தார்க்கு உறவென்னும் ஔர் நிலை பதவி உகந்தே கூட்டவே
பாரதத்தின் பெருமை ஒளி பாருலகோர்க்குக் கண்ணொளியும்
நிறைபலம் காணச் செய்யும் விதியது இனியாகுமப்பா!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியத் துணைக் கண் டத்தின் முதல் பெண் மருத் துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1968).
அவருடைய வாழ்க்கை வரலாறு போராட்டம் நிறைந்த கரடு முரடானது! பள்ளியில் படிக்கும் பொழுது கூட மாணவர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். மாணவர்கள் கண்களில் ஒரு பெண்மணி பட்டு விடக்கூடாதாம்.
பள்ளி முடிந்தவுடன் இந்தப் பெண் வெளியில் சென்றதற்குப் பிறகுதான் மாணவர்கள் வெளியே வர வேண்டுமாம்.
அடுத்து கல்லூரியில் சேர்வதற்கு புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு ஆணை தேவைப்பட்டது. எல்லா நிலைகளிலும் கல்வியில் முதல் இடம் பெற்று, சென் னைக்கு வந்து மருத்துவப் படிப்பையும் முடித்தது அசாதாரண செயலே!
வெறும் மருத்துவராகத் தன் காலத்தைக் கழிக்காமல் பொதுப் பணிகளிலும் ஆர்வம் செழிக்க வாழ்ந்தார். அவரின் ஆற்றல் மேலும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒரு மனதாக சென்னை சட்டமன்றத்தின் மேலவைக்குத் தேர்வானார். பின்னர் அதன் துணைத் தலைவராகவும் ஆனார். இந்தியாவிலேயே இந்த வகையில் மிளிர்ந்த முதல் பெண்மணி இவர்தான்!
எத்தனையோ சாதனை கள் அவருக்கு உரியன என்றாலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றம் என்பது தான் மணி மகுடமாக என் றென்றும் ஒளி வீசித் திகழக் கூடியதாகும்.
குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த பெண்களைத் தேவ தாசி என்ற பெயரில் பொட் டுக் கட்டிக் கோவிலுக்கு விட்டு விடுவார்கள். வெளி உலகுக்குக் கடவுளின் அடிமை என்றாலும் நடை முறையில் வேறுவிதமாகவே நடத்தப்பட்டனர்.
இதனை ஒழித்துக் கட்டக் கடுமையாகப் போராடும்படி நேர்ந்தது.  மசோதாவைத் தாக்கல் செய்தவர் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி.
அதனை எதிர்த்து காங்கிரஸ்காரரான திருவா ளர் சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் தெரியுமா?
மனித குலம் தோன் றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர் பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவ தில்லை. தாசிகளை ஒழித் தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும்.
ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல். இன்று தேவ தாசித் தொழிலை நிறுத் தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று பேசிய தும் சுட்டிக் காட்டத் தகுந் தது. இந்தச் சட்டத்தை வரவேற்று தந்தை பெரியார் குடிஅரசில் சிறப்புத் தலையங்கமே தீட்டினார். 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அம்மையாரின் பெயரை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சொல் லிக் கொண்டே இருக்கும். - மயிலாடன்