சனி, 3 செப்டம்பர், 2016

பத்தினி சாபம் பலிக்குமா?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அந்த மாதிரி. ஆறு சகோதரர்கள். ஆறு பேருக்குமான சுமார் 10-12 குழந்தைகள் இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு நாற்பதைத் தாண்டியும் திருமணம் ஆகவில்லை. அப்படியே ஆனவர்களில் இரண்டு பேருக்கு பல வருடங்களாக குழந்தை கிடையாது. மீதமிருள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் அவை ஆண் வாரிசுகளாக இல்லை. வேறு குடும்பத்துக்கு வாழ்க்கப்பட்டுப் போன பெண்களுக்கும் இது பொருந்துவதாக இருக்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் ஓஹோவென விளங்கிய அந்தக் குடும்பம் 50 ஆண்டுகளில் உருக்குலைந்து போயிருக்கிறது.
அந்த ஆறு பேரும் சின்ன வயதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அதனால் அந்தப் பெண் மனமுடைந்து, இந்தக் குடும்பம் வாரிசில்லாமல் மூடிப் போகட்டுமென சபித்து விட்டு தற்கொலை செய்து கொண்டாராம். கேட்பதற்கு நம்பும்படியாக இல்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. பத்தினி மனதாரச் சபித்தால் பலிக்குமென்ற நம்பிக்கை நமக்கு இன்னுமிருக்கிறது. கண்ணகி மதுரையை எரித்த கதையை இன்னும் பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.
அப்படி ஒரு கதைதான் மைசூர் ராஜ வம்சத்தின் கதை. அந்த வம்சத்தின் கடைசி மன்னர் ஸ்ரீகாந்த தத்தா நரசிம்மராஜ உடையார் டிசம்பரில் காலமானது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனது 21 ஆவது வயதில் 1974 இல் மகுடம் தரித்தவர் இப்போது அறுபது வயதில் மரணித்த புள்ளியில் அந்த வம்சமே முடிவுக்கு வந்திருக்கிறது. அரியணைக்கு மட்டுமல்லாது பலாயிரணக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்கும் யார் வாரிசென்று முடிவு செய்யால் முடிவுக்கு வந்திருக்கிறது அவரது வாழ்க்கை.
மைசூர் அரச வம்சத்தை நிழல் போலத் தொடர்ந்து வந்த தலக்காட்டு சாபம் மறுபடியும் பலித்து விட்டதென வரலாற்றாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். காவிரி ஆற்றின் கரையில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குக் கீழே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் தலக்காடு. நதிக்கரை நாகரீகத்தில் ஓங்கிச் சிறந்த ஊர்களில் ஒன்று. தமிழத்தில் பூம்புகார் போல கர்நாடகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அதற்குண்டு. அந்த இடத்தில், கிழக்கு நோக்கிப் பாயும் காவிரி ஆறு திடீரென தெற்காகத் திரும்பி மறுபடியும் கிழக்கே திரும்பிப் போகும். கிட்டத்தட்ட U வடிவத்தில் ஆறு ஓடுவதால் மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்த ஊராகவே தலக்காடு இருந்தது.
ஆற்றுக்கு இடது கரையில் அமைந்திருப்பது தலக்காடு. நதியில் அக்கக்கரையில் தலக்காட்டுக்கு எதிரே உள்ள ஊர் மலாங்கி. பதினோராம் நூற்றாண்டில் தலக்காடு சோழர் வசமிருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது தலக்காட்டிற்கு ராஜராஜபுரம் என்ற பெயரும் இருந்ததாம். அதன் பிறகு சோழர்கள் கையிலிருந்து கன்னட ஹெளசல்ய அரசன் விஷ்ணுவர்த்தன் அதை மீட்டதாகவும், பிறகு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்தப் பிராந்தியம் விஜயநகரப் பேரரசால் ஆளப்பட்டது.
விஜயநகரப் பேரரசின் சார்பில் அங்கே நிர்வாகம் செய்ய ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஒரு பிரதிநிதி இருந்தார். காவிரியின் பாதையில் மைசூருக்குக் கீழே இருக்கிறது ஸ்ரீரங்கப்பட்டினம். இங்கே காவிரி இரண்டாகப் பிரிந்து போய் மறுபடியும் ஒன்று கூடுமாகையால் இதை ஒரு குட்டித் தீவோடு ஒப்பிடலாம். திருச்சி ஸ்ரீரங்கம் கூட அப்படித்தானே! ஒரே பெயர் கொண்டுள்ள இந்த இரண்டு தீவுகளிலும் பிரசித்த பெற்ற ரங்கநாதர் ஆலயம் உண்டு என்பதைத் தனியாகக் குற்ப்பிட வேண்டியதில்லை. இந்த ஸ்ரீரங்கப்பட்டினம் ஆங்கிலேயருக்கு தீராத தலைவலியைக் கொடுத்த திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது தனிக்கதை.
1610 இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக ஆட்சி செய்துகொண்டிருந்தவர் திருமலைராஜா என்பவர். ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் கொண்டு விளங்கிய அவருக்குக் கீழே அடங்கிக் கப்பம் கட்டும் பாளையக்காரர்களில் ஒருவராக மைசூர் ராஜ உடையார் இருந்தார். விஜயநகர சாம்ராஜ்ஜியம் தேய்ந்து கொண்டிருந்த சமயம் அது. எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் மைசூர் பாளையக்காரர் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார்.
திருமலைராஜா இந்தச் சமயத்தில் நோய்வாய்ப்பட்டார். முதுகில் கட்டி வந்து தொந்தரவு செய்தது. தீராத வியாதியை அந்த வைத்தியநாதனே தீர்க்கட்டும் என்று முதல் மனைவியை அழைத்துக்கொண்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பயணிக்கிறார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் நிர்வாகத்தை தனது இரண்டாவது மனைவி அலமேலம்மாவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார் அவர். ஆனால் தலக்காடு சென்றவவுடன் அவரது நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக மோசமாகிறது. மரணத்தின் விளிம்பில் உள்ள திருமலைராஜாவின் சங்கதி கேட்ட அலமேலம்மாவும் தலக்காட்டுக்குப் பயணிக்கிறார். அவர் அங்கு வந்து சேர்வதற்குள் திருமலைராஜாவின் உயிர் பிரிந்து விடுகிறது.
கழுகுப் பார்வையோடு காத்திருந்த ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தைக் கைப்பற்றி தன் வசமாக்கிக் கொள்கிறார். மைசூர் மகாராஜாக்களின் ராஜவம்சம் அங்கே உதயமாகிறது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குத் திரும்ப முடியாத அலமேலம்மாவா தலக்காட்டுக்கு அக்கரையில் உள்ள மலாங்கியில் தங்கியிருக்கிறார். ஸ்ரீரங்கப்படிண ராணியாகிய அலமேலம்மா தனது ராஜ அலங்கார நகைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாயகித் தாயாருக்குச் சாத்தி வழிபடுவது வழக்கம். அவர் தலக்காடுக்கு அந்த நகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றிடுந்தார்.
இப்போது உடையாருக்கு அந்த நகைகள் தேவைப்பட்டன. அவர் மலாங்கிக்கு தன் சிப்பாய்களை அனுப்புகிறார். அலமேலு தரமாட்டேன் என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார். மறுபடியும் ஆட்களை அனுப்புகிறார் உடையார். இம்முறை வெறும் கையோடு திரும்பக் கூடாதென்ற உத்தரவு. அலமேலம்மா மூக்குத்தியை மட்டும் கொடுக்கிறார். மற்ற நகைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடுகிறார். வெறும் கையோடு திரும்பினால் உடையாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமென அஞ்சிய சிப்பாய்கள் துரத்துகிறார்கள்.
தன் பலம் கொண்ட மட்டும் நகைப்பெட்டியோடு ஓடிய அலமேலம்மா காவிரியில் குதித்து விடுகிறார். அதற்கு முன் மனமுடைந்து சாபம் கொடுக்கிறார்: “ஓ ரங்கா, நான் உன் பக்தை என்பது உண்மையானால், தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்”
பத்தினி சாபமல்லவா, நானூறு ஆண்டுகளாகத் துரத்துகிறது. அதன் பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலக்காடு நகரம் நிஜமாலுமே மண் மேடாகிப் போனது. ஆற்றங்கரையில் இருந்து காற்றில் பறந்து வந்த மணல் துகள்கள் வருடத்திற்கு 5 முதல் 10 அடி மணல் அந்த நகரத்தை மூடத் துவங்கியது. படிப்படியாக மக்கள் அவ்வூரை விட்டு வெளியேறத் துவங்கினர். இன்றைக்கு பல மீட்டர் ஆழத்திற்கு மண் மூடிக் கிடக்கிறது. சுமார் 30 கோவில்கள் முற்றிலுமாக மணலுக்கு அடியில் புதைந்து விட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தோண்டித் தோண்டி கல்வெட்டுகளை ஆராந்து கொண்டிருக்கிறார்கள். அவை கன்னடத்திலும், தமிழிலும் இருக்கின்றனவாம்.
இன்னொரு பக்கம் மலாங்கி. U அல்லது V வடிவில் ஆறு வந்து குத்தும் இவ்விடத்தில் அபாயகரமான சுழிகள் உருவாயின. அதன் கரையை ஆறு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டே போனது. இந்த இரண்டாவது சாபத்தைக் காட்டிலும், மைசூர் ராஜவம்சத்திற்கு வாரிசில்லாமல் போகுமென்ற மூன்றாவது சாபமே முக்கியமானதும், கவனிக்கப்பட வேண்டியதும் ஆகும். உண்மையில் அலமேலம்மாவின் தற்கொலையும், சாபமும் உடையாரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
பழைய விஜயநகர மரபின் படி அவர் தசரா கொண்டாட்டங்களை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் நடத்தினார். (தலைநகர் மைசூருக்கு மாறியது பிற்பாடு) அவரது மகன்களில் ஒருத்தன் தசராவின் ஒன்பதாவது நாள் இறந்து போனான் என்கிறார்கள். நொறுங்கிப் போன உடையார் அலமேலம்மாவைக் கும்பிட ஆரம்பித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு தசரா கொண்டாட்டங்களின் போதும், தசரா இல்லாத சமயங்களிலும் மைசூர் உடையார்கள் சபித்துச் சென்ற அலமேலுவை வணங்கிய வண்ணமே இருந்தார்கள்.
இருந்தாலும் சாபம் தொடர்ந்தது. பட்டத்து ராணியின் வயிற்றில் ஆண் வாரிசுகள் உதிக்கவே இல்லை. ஆசை நாயகிகளுக்கு குழந்தைகள் பிறக்கும். ஆனால் முறையான வாரிசென யாருமில்லை. ராஜாவுக்கு குழந்தை இருக்காது. அவர் சொந்தத்தில் யாரைவாது தத்து எடுத்து வாரிசாக ஏற்றுக் கொள்வார். அப்படி வாரிசாகி அரியணைக்கு வரும் ராஜாவுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தைக்கு வாரிசு இருக்காது. இப்படித்தான் 400 வருடத்திற்கும் மேலாகத் தொடந்திருக்கிறது.
எத்தனை ஆடம்பரங்களில் திளைத்தாலும் மைசூர் ராஜாக்கள் அலமேலம்மாவின் சாபத்துக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கிறார்கள். இலட்சக் கணக்கான மக்கள் திரளும் மைசூர் தசரா திருவிழாவின் போது அரண்மனை வளாகத்தினுள் அமைந்து அலமேலம்மா கோவிலின் மூடிய கதவுகளுக்குள் கங்கணத்தைக் கழட்டி அவளது காலடியில் வைத்து வணங்கிய பிறகே வெளியே வருவார்கள். ஒன்று விட்ட அரசர்கள் வாரிசில்லாமல் போவார்கள் என்பதறிந்து அவர்கள் சொந்தத்தில் ஒரு பையனைத் தத்தெடுப்பார்கள்.
ஆனால் ஸ்ரீகாந்த தத்தா நரசிம்மராஜ உடையார் மட்டும் தத்தெடுக்காமல் தனக்கு எப்படியும் ஒரு ஆண் வாரிசு தரித்து விடுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தார். தன் கனவில் அலமேலம்மா வந்ததாகவும், தன் முன்னோர் செய்த பாவத்தை மன்னித்து சாபத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டதாகவும் நிறையப் பேரிடம் நம்பிக்கையோடு அவர் சொல்லிக்கொண்டிருந்தார். டிசம்பரில் அந்த நம்பிக்கை அவரோடு சேர்ந்து மண்ணில் புதைந்து விட்டது.
மறைந்த மன்னரின் மனைவிக்கும், சகோதரிகளுக்குமான சண்டையின் முடிவில் சிருங்கேரி மடாதிபதியின் துணையோடு அறிவிக்கப்படவிருக்கும் இன்னொரு சபிக்கப்பட்ட மகாராஜாவுக்காக் காத்திருக்கிறது மைசூர்.

கேட்பது பெண்கள் குணம்; வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை!!!

queen
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:–லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1245; தேதி 23 ஆகஸ்ட் 2014
மனு ஸ்மிருதி எழுதிய மனு கொஞ்சம் ஓரச் சார்புடையவர் போலத் தோன்றுகிறது!! பெண்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்!! அவை என்ன என்ன என்பதில் நகைகளையும், துணிமணிகளையும் சேர்த்துவிட்டார் மனு! இந்த சுவையான விஷயத்தை சிறிது ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்
என்று உலகநாதர் உலகநீதியில் சொன்னால் அது சரி என்று படுகிறது. ஏனெனில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதமே போற்றுகிறது. ஆனால் சகோதரியும், மனைவியும் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று மனு தர்மம் கூறுகிறது. இது எந்த வகையில் நியாயம்?
ஒரு நாள் வைர நெக்லஸ், மறு நாள் டிசைனர் ஷூ, டிரஸ், குக்ஸி பை என்று விலை மதிப்பு மிக்க பொருட்களைக் கேட்டால்……………………………………………
இதோ மனு தர்ம சாஸ்திரம் எழுதிய மனு சொல்கிறார்:
யத்ர நார்யாத் பூஜ்யந்தே தத்ர ரமதே தேவதா
யத்ரைதஸ்து ந பூஜ்யந்தே சர்வதத்ரத் அபலா க்ரியா (மனு 3—56)
இதே ஸ்லோகம் மஹாபாரதத்திலும் உளது!
பொருள்: எங்கே பெண்கள் துதிக்கப் படுகிறார்களோ (வாழ்த்தப் படுகிறார்களோ) அங்கே இறைவன் மகிழ்கிறான். எங்கே பெண்கள் போற்றப் படவில்லையோ அங்கே புண்ய காரியங்கள் பலனளிக்காமல் போய்விடும்.
இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் மனு மேலும் சொல்கிறார்:
எங்கே பெண்கள் துன்பப் படுகிறார்களோ அந்தக் குடும்பம் நாசமடையும்–(மனு 3—56)
அப்பாமார்கள், அண்ணன்மார்கள், கணவன்மார்கள், மைத்துனர்கள் ஆகியோருக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் வீட்டுப் பெண்களை மதிக்க வேண்டும், போற்றவேண்டும்—-(மனு 3—55)
பெண்கள் சாபம் விழுந்த வீடுகள் அடியோடு அழியும் —-(மனு 3—58)
ஆகையால் ஆண்கள் நல்லபடி வாழ வேண்டுமானால் விழாக்காலத்திலும் வீட்டு விஷேச காலங்களிலும் எப்போதும் பெண்களை நகைகள், துணிமணிகள், உணவு வகைகள் மூலம் மகிழ்விக்கவேண்டும்—-(மனு 3—59)
ஒரு ஆசார்யார் (குரு), பத்து உபாத்யர்களுக்கு மேல்;
ஒரு தந்தை 100 ஆசார்யார்களுக்கு மேல் பெருமை உடையவர்;
ஒரு தாயோ ஆயிரம் தந்தைகளை விடப் பெருமை வாய்ந்தவள் —–மனு 2-145
love letter
பேரழகி ராஜகுமாரி லோபாமுத்திரை
இதற்கெல்லாம் மூல காரணம் உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் உளது. அகஸ்தியர் என்பவர் மிகவும் குள்ளம். அவருக்கு விதர்ப்ப நாட்டு பேரழகி, இளவரசி லோபா முத்ராவின் மீது கொள்ளை ஆசை! கல்யாணத்துக்கு மனுப் போட்டார். அவளோ ராஜகுமாரி. ஐயன்மீர்! ராஜா போல உடை உடுத்திக் கொண்டு வாரும், அத்தோடு ஒரு ராஜகுமாரியை மகிழ்விக்கும் அளவுக்கு நகை நட்டுக்களையும் கொண்டுவாரும் என்று சொல்லிவிட்டாள். அகஸ்தியர் அரண்மனை தோறும் ஏறிஏறிப் பார்த்தார்; பலன் இல்லை. இல்வலன் என்ற அசுரனிடம் கேட்டார். அவன் தம்பி வாதாபியை “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சாப்பிட்டு ஏப்பம் விட்டதால் அவன் பயந்து கொண்டே பணத்தைக் கொடுத்து, ஐயா, இங்கே இருந்து போய் விடுங்கள் என்று அனுப்பிவைத்தான். அகஸ்தியர் ராஜா போல படுக்கை அறையுள் நுழைந்தார். லோபாமுத்திரை, அகஸ்தியர் மூலம் ததாஸ்யு என்ற பெறும் கவிஞரைப் பெற்றுக் கொடுத்தாள். இது மஹாபாரத வனபர்வத்தில் உள்ள கதை.
லோபாமுத்ராவின் மீது அகஸ்தியர் கண் ஏன் விழுந்தது? அது ஒரு தனிக் கதை. அகஸ்தியரின் முன்னோரின் ஆவிகள் ஒரு பாழுங் கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு புத்திரனைப் பெற்றால்தான் அவர்கள் கடைத்தேறுவார்கள் என்பதை அறிந்த அகஸ்தியர் உலகிலுள்ள எல்லா அழகிகளின் அம்சங்களை ஒன்று சேர்த்து விதர்ப்ப நாட்டு மஹாராணியின் குழந்தையாக ((லோபாமுத்ரா))) கருவுற, தனது தவ வலிமையால் வழிவகுத்தார்.
ஆண் குழந்தையைப் பெற்று அவர்கள் மூலம் பிதிர் காரியங்களைச் செய்யவேண்டும் என்பது (பிதிர் கார்யம்= நீத்தாருக்கு செலுத்தப்படும் நீர்க்கடன்) தொன்று தொட்டு நிலவும் நம்பிக்கை. ஐயன் வள்ளுவனும் இதற்குச் சான்று பகர்வான். சங்கதமிழ் புலவர்களும் இதை ஆதரித்துப் பாடி இருக்கிறார்கள் (காண்க புறம் 222, புறம் 9 பாடல்கள்).
parijatha,V&A,By T Suba

சத்யபாமா, கைகேயி, சீதை
பாரிஜாத மலர் வேண்டும் என்று கேட்ட உடனே கிருஷ்ணர், சுவர்க்கலோகம் சென்று இந்திரனுடன் சண்டை போட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வந்ததும் பெண்களை மகிழ்விக்கவே!!
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– பாரிஜாத மரம்!!
கைகேயி சொன்னவுடன், ராம பிரான் காடேகியதும் பெண்ணின் வேண்டுகோள் அன்றோ! பொன் மானைப் பிடித்துக் கொண்டு வா என்று ராமனிடம் அடம்பிடித்த சீதையை மகிழ்விக்க ராமனும் ஓடவில்லையா?
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– சிவனுறை கயிலாயத்தையே பெயர்க்க முயன்ற அசுரன் ராவணன் வீழ்ந்துபட்டான்.
SOCIAL Chinese 165281A Chinese New Year
திரௌபதி கோரிக்கை
சௌகந்திக மலர் எனக்கு உடனே வேண்டும் என்று திரவுபதி ஒரு அன்புக் கட்டளை இட்டாள். ஓடினான், ஓடினான், பீமன்- காட்டின் ஓரத்திற்கே ஓடினான். வழியில் அவனுடைய அண்ணன் அனுமன் சண்டைக்கு அழைக்கவே அனுமன் பெருமை தெரிந்தது. மாபாரதப் போரில் கொடியில் உட்கார்ந்து கொண்டு உனக்கு வெற்றி தேடித் தருவேன் என்று அனுமன் வாக்குறுதி கொடுத்தான்.
சௌகந்திக மலர்ப்பொய்கையில், அதைக் காத்து நிற்கும் யக்ஷர்களைக் கொன்று குவித்து மலர் பறித்தான் பீமன். குபேரனுக்கு கொள்ளை மகிழ்ச்சி! ஏன்? யக்ஷர்கள் மீது அகஸ்தியர் இட்ட சாபம் அன்றோடு முடிந்தது
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– மாபாரதப் போரில் தர்மம் வென்றது. யக்ஷர்கள் மீதான சாபம் நீங்கியது.
மற்றொரு சமயம் தண்ணீர் வேண்டும் என்று திரவுபதி கேட்கவே, காட்டுக்குள் போன நான்கு சகோதர்களையும் ஏரிக்கரை பூதம் (யக்ஷன்) நாலு பேரையும் விழுத்தாட்டியது. இறுதியில் தர்மன் சென்று ஏரிக்கரைப் பேயின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி நான்கு சகோதர்களையும் உயிர்ப்பித்து மீட்டு வந்தான்.
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: யக்ஷப் பிரஸ்னம் என்னும் பேயின் கேள்வி—பதில் தொகுப்பு. (இதுபற்றி ஏற்கனவே விரிவான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். படித்து மகிழ்க)
hindu girl, bali

மைத்ரேயி- காத்யாயனி கோரிக்கை
இரண்டு பெண்டாட்டிக்கார ரிஷி யாக்ஞவல்கியர், “பெண்களே, சொத்து சுகங்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு காடேகப் போகிறேன். உங்களுக்கு யாது வேண்டும்?” — என்று கேட்க, மைத்ரேயி தத்துவ உபதேச விஷயங்களே தேவை என கோரிக்கை விடுத்தாள். காத்யாயனி செல்வம் முழுதும் பெற்றாள்.
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: தத்துவ உபதேசம் (காண்க: பிருஹத் ஆரண்யக உபநிஷதம்)
பெண்கள் கோரிக்கை இத்தோடு நிற்கவில்லை: க்ஷத்ரிய குலப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக, வில்லை முறித்தான் ராமன். வில்வித்தையில் வென்றான் அர்ஜுனன். ஆக பெண்கள் என்றால்= கோரிக்கைகள்!!!!
radha or queen
ஆனால் பெண்கள் போட்ட அததனை கோரிக்கை மனுக்களும் மனித குலத்துக்கு நன்மையே செய்ததால், மனு சொல்கிறான். அவர்கள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுங்கள் என்று!!
மனு வாழ்க!! மனுதர்மம் போற்றும் பெண்கள் வாழ்க, வாழ்க!!!
woman

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?

  1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்


இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?

குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,

பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;

பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;

மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.

சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?

முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம்.

இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.

சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.

சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.

மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.

மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.

எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.

குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.

நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்.


இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்க‍ங்களும்! – ஒரு பார்வை

 

 

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்க‍ங்களும்! – ஒரு பார்வை
நாம் சிறுவயதில் இருக்கும்போது ராமாயணம் போன்ற இதிகாச கதைக ளையும், பல ஆன்மீக கதைகளையும் நமக்கு
சொல்லி அவற்றில் உள்ள‍ நீதியை நமக்கு எடுத்து ரைப்பார்கள். அதே நேரத்தில் அந்த கதைகளில் சாப ங்களும், அந்த சாபங்கள் யாரால் யாருக்கு வழங்க ப்பட்ட‍து என்பன போன்ற தகவல்களையும் நமக்கு சொல்லியிருப்பார்கள். மேலும் அந்த சாபங்களிலிரு ந்து விடுபட விமோசனம் என்ன‍ என்பதையும் கதை களில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு நமக்கு சொல்லியிருப்பார்கள். அந்த சாபங்கள் எத்த‍னை வகைப்படும் என்பதையும், அவை ஒவ்வொன்றை பற்றிய விளக்க‍ங்களையும் பார்ப்போம்.
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கி றது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பதிமூன்று (13) சாபங்கள் என்னென்ன‍ என்பதை யும், ஒவ்வொன்றைப்பற்றிய விளக்க‍ங்களையும் தற்போது பார்ப் போம்.
1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்
சாபம் சாபங்கள் பல வகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக ப்பார்க்க லாம்

1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவ ரை இழிவாகப் பேசு வதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்க ளை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டிய வர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற் படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டா கும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திரு மணத் தடை ஏற்படும்.
5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத் துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலா ரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந் தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன் றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக் காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற் படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனை யை க் கொடுக்கும்.
8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோ ண்டினாலும் நீர் கிடைக்காது.
9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தைவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களா ல், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவி னர்கள் பிரிந்துவிடுவர்.
11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களை யும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களு க்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்கா மல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்க ளை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்க ள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போ தும் அழிக்கமுடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையா ன மனிதனையும் அழித்துவிடும்.

குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

 

 1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்

மதுரையில் ஒரு குடும்பம். அம்மாவிடம் பக்தி கொண்ட குடும்பம். அந்தக் குடும்பத் தலைவா் 40 வயதில் இறந்து போனார். அவா் மனைவியும் இரண்டு பெண்களும் அம்மாவிடம் வந்து அருள்வாக்கு கேட்டார்கள்.
”உன் கணவன் வம்சத்தில் 40 வயதுக்கு மேல் மூத்தமகன் உயிரோடு இருக்க மாட்டான் மகனே!” என்றாள்.  அம்மா ஏம்மா இப்படி? என்று அழுதார். ”  அப்படி ஒரு சாபம் உண்டு மகளே!”  என்றாள் அம்மா.
ரயில் விபத்து- வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்த பெண் பிணத்தின் கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்றிக் கொண்டு சிலா் ஓடிவிடுகிறார்கள். ஈவிரக்கமற்ற இந்த மனித மிருகங்களுக்கு ஆவிகளின் சாபம் வந்து சேருமாம். அம்மாதான் ஒரு முறை சொன்னார்கள்.
கும்பகோணம் மகாமகத்தின் போது ஒரு முறை கூட்ட நெரிசல் காரணமாகக் குளத்தில் மூழ்கிப் பலா் இறந்து போனார்கள். சில போக்கிரிகள் சில பெண்களைக் கழுத்தை நெருக்கி மூழ்கச் செய்து நகைகளைக் களவாடிக் கொண்டார்களாம். இவா்களுக்கு ஆவிகளின் சாபம் தான் வந்து சேரும்.
அரசாங்கக்
கருவுலத்தில் உள்ள அதிகாரி ஒருவா், அவருக்கு 3 பெண்கள். ஒருத்தி கன்னி கழியாமலே சித்தபிரமை பிடித்து எங்கேயோ ஓடிப்போனாள். அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? என்று இதுவரை தெரியவில்லை. இன்னொரு பெண் வாழா வெட்டியாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள். இன்னொரு பெண் விதவையாக வந்துவிட்டாள். ஏன் இப்படி? ஏன் இந்தக் குடும்பத்துக்கு மட்டும் இப்படி ஒரு சோகம்?
கல்வித்துறையில் ஒரு பெரிய அதிகாரி! அவா் பிள்ளைகளில் ஒருவன் ஊமை, ஒருவன் குருடு, ஒரு பிள்ளை இளம்பிள்ளை வாதத்தால் கைகால் இழந்து முடமாகிப் படுத்த படுக்கையிலேயே இருந்தான். மலசலம் எல்லாம் படுக்கையிலேயே…. அந்தக் குடும்பத்தில் இது நிரந்திர சோகம்!
தமிழ்நாட்டில் அன்றைய நிலையில் வாழ்ந்த கோடீஸ்வரா் ஒருவா். அவா் கோடீஸ்வரரான பின்புலம் என்ன தெரியுமா? அக்கம்பக்கத்தில் இருந்த விதவைப் பெண்கள் தங்கள் சேமிப்புப் பணத்தையெல்லாம் அவரிடம் வட்டிக்குக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த மூலதனத்தை வைத்து வட்டிக்குக் கொடுத்துக் கொழுத்த பணக்காரா் ஆனார். முதுமைப் பருவத்தில் அந்த விதவைகள் கொடுத்த பணத்தைக் கேட்ட போது ஏமாற்றினாராம். சிலரை விஷம் வைத்துச் சாகடித்தார் என்றும் சொல்வார்களாம். கடைசியில் அவருக்கும் மதுமை வந்தது.  புத்தி பேதலித்தது.  தன் மலத்தில் தானே புரண்டு கிடந்தார். இந்தச் சனியன் எப்போது மண்டையைப் போடுமோ? என்று அவா் குடும்பத்தார் காத்துக் கிடந்தனா்.  அவரைக் கவனித்துப் பணிவிடை செய்ய நாதியில்லை….
சினிமா தயாரிப்பாளா் ஒருவா், அரசியல் செல்வாக்கு, சினிமாவில் செல்வாக்குப் படைத்தவா். அங்கங்கே கடன் வாங்கிப் படம் எடுத்துக் கோடி கோடியாகச் சம்பாதித்தார். வங்கியில் கடன் வாங்கினார். திருப்பிச் செலுத்தாமல் தள்ளிப்
போட்டார். வங்கி அதிகாரிகள் கேஸ் போடுவோம் என்றார்கள். போட்டுக்கோ.. என்றார். கேஸ் போட்டால் என்ன… மூன்று நான்கு வருடங்கள் இழுத்தடிப்போம். அதற்குள் அங்கங்கே பணம் புரட்டி (Rotation) தொழில் செய்து மேலும் பணம் அள்ளலாம் என்று நெருக்கமானவா்களிடம் சொல்வாராம்.
சில படங்கள் தோல்வி. கையில் ஒரு காசுமில்லை.  கடன் கொடுப்பார் யாருமில்லை.  சொத்துக்கள் இருந்தன.  விற்றுவிட்டால் இதை மறுபடியும் வாங்க முடியுமா? இந்த நிலையில் கந்து வட்டிக்காரா்களிடம் வஞ்சம் புகுந்தார். அவா்களோ மீட்டா் வட்டி வாங்கும் புண்ணியவான்கள். கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கந்து வட்டிக்காரன் கழுத்தை நெரித்தான். கடைசியில் தற்கொலையில் முடிந்து போனாராம்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்றார் வள்ளுவா். சில சினிமா பிரபலங்களின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டு.
நாகா் கோயிலைச் சோ்ந்த பெண்மணி ஒருவா் அவருக்கு ஒரே ஒரு பையன். நல்ல புத்திசாலி. அம்சமாக அழகாக இருப்பானாம். பொத்திப் பொத்தி வளா்த்தார்களாம். ஒரு விபத்தில் சிக்கிச் செத்துப் போனானாம். பாவம் அந்தப் பெண்மணி! நிலைகுலைந்து போனார். அவரால் அந்தச் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன அமைதி தேடி கோயில் கோயிலாகப் போனார். அமைதிதான் கிட்டவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று காரணம் புரியாமல் தவித்தார். தத்தளித்தார்.
ஒரு நாடி சோதிடரிடம் சென்றாராம். அவா் சொன்னாராம், போன பிறவியில் இவள் ஒரு மருத்துவராக இருந்தாள். ஏழைப் பிராமணன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வைத்தியத்துக்கு வந்தான். இவள் கேட்ட தொகையை அவனால் கொடுக்க முடியவில்லை. பணத்தை வைத்தால்தான் வைத்தியம் என்றாள். ஈவிரக்கமே இல்லாமல் நடந்து
கொண்டாள். பாவம் அந்தப் பிராமணன். குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறுநாள் குழந்தை செத்துப் போய்விட்டது.! அப்போது அவன் இட்ட சாபம்! இந்தப் பிறவியில் பிள்ளையை பறிகொடுக்க வேண்டியதாயிற்று….
எத்தனை டாக்டா்கள் இதைப் படித்துப் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்? ஊழ்வினை என்றால் என்ன? அது எப்படி வருகிறது? அதன் வகைகள் என்ன? என்பதெல்லாம் இன்றைய பாடத்திட்டங்களில் இல்லையே… இன்றைய உலகில் உள்ள பாவங்கள் ஏழு! என்கிறார் காந்தியடிகள்.
ஒழுக்கம் இல்லாத கல்வி! அவற்றுள் ஒன்று!
சாபங்கள் சக்தி! வாய்ந்தவை.! அவை பலிக்கும்! அடுத்தவன் வயிறெரிந்து சாபமிட்டால் அது நம்மைப் பாதிக்கும் என்பதை இன்றைய தலைமுறை பலா் நம்பவில்லை.
ஒரு பிரச்சனை வந்து நெருக்கும்போது தான் படித்தவா் யோசிக்கிறார்! விடை காணாமல் தவிக்கிறார்.. சோதிடா்களை நாடி ஓடுகிறார்.
இப்போது பாருங்கள்! பெட்டிக் கடைகளில் எத்தனை எத்தனை சோதிடப் பத்திரிகைகள்! வாரந்தோறும் பத்திரிகைகள் ராசி பலன்களை வெளியிடுகின்றன. ஆன்மிக மலா்கள் என்று ஒரு இணைப்பு சோ்த்து வெளியிடுகின்றன. டி.வி.க்களில் தினமும் ராசி பலன்கள்! பரிகாரம் தேடிப் படித்த கூட்டம் கோயில்களை மொய்ப்பதைப் பார்க்கிறோம்.
”இருமுடிக்குப் பலன் கொடுத்துவிட்டு அப்படியாவது திருந்துவானா என்று பார்க்கிறேன். எவனும் திருந்தவில்லை.” என்று அன்னை வேதனையோடு சொல்கிறாள்.
குடும்ப அழுக்கு
அம்மாவிடம் வந்து சோ்ந்த 35 வருடங்களில் ஆன்மிகம் சம்பந்தமான சில உண்மைகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. தேவரகசியங்கள் எனச் சில உண்டு என்பது தெரிந்தது. ஏவல், பில்லி, சூனியம் எல்லாம் உண்டு என்று தெரிந்தது.
கருமச் சட்டத்தின் வலிமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு காரணங்களால் குடும்பங்கள் அல்லல் படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சாபங்களுக்குச் சக்தி உண்டா? சாபங்கள் பலிக்குமா? சாபங்களுக்கு சக்தி உண்டு என்றும், சாபங்கள் பலிக்கும் என்று அம்மா மூலமாகவும், பக்தா்கள் சொன்ன அனுபவங்கள் மூலமாகவும் நான் தெரிந்து கொள்ள முடிந்தது. சக்தி ஒளியில் சாபம் பலிக்குமா? என்ற தொடா் கட்டுரை எழுத முடிந்தது.  
அண்மையில் ராணி வாரப் பத்திரிகை (03.10.2010)யில் ஒரு சோதிடா் ‘மண்ணில் உலவும் மா்மங்கள்‘ என்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் சாபங்கள் பற்றி எழுதியிருந்தார்.
பெண் சாபம்
பெண் சாபம் ஏற்பட்டால் வம்ச நாசம் ஏற்படுமாம். பெண்ணை ஏமாற்றுதல், சகோதரி போன்றவா்களை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியைக் கைவிடுவது ஆகியவற்றால் ஏற்படுவதாம்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, பிணத்தை தாண்டுவது, பிணத்தின் இறுதிக் காரியங்களைச் செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவா்களை முக்கியமானவா்கள் பார்க்கவிடாமல் செய்வது இவற்றால் பிரேத சாபம் வருமாம்.
பிரம்ம சாபம்
பிரம்ம சாபத்தால் படிப்பு இல்லாமல் போகுமாம் நமக்கு வித்தை கற்றுக் கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாகப் பயன்படுத்துவது, மற்றவா்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது இவ்வாறான காரணங்களால் பிரம்ம சாபம் ஏற்படுமாம்.
சா்ப்ப சாபம்
சா்ப்ப சாபத்தால் திருமணத்தடை, செவ்வாய் தோஷம், ராகு-கேது, கால சா்ப்ப தோஷங்கள் ஏற்படுமாம். பாம்புகளைத் தேவையின்றிக் கொல்வதாலும்,
அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சா்ப்ப சாபம் உண்டாகும்.
பிதிர் சாபம்
பித்ரு சாபத்தால் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, பாலாரிஷ்ட தோஷத்தால் குழந்தைகள் இறந்து போவது நிகழுமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கா்மங்களைச் செய்யாமல் மறப்பது, தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோர்களை உதாசீனப்படுத்துவது, அவா்களை ஒதுக்கி வைப்பது போன்ற காரணங்களால் பிதிர் சாபம் ஏற்படுமாம்.
கோ சாபம்
கோ சாபம் என்பது பசுவின் சாபம். அதனால் வளா்ச்சி இல்லாமல் போகும்.  பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீா் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
பூமி சாபம்
பூமி சாபத்தால் நரக வேதனை அடைய வேண்டி வருமாம். ஆத்திரத்தில் பூமியைச் சதா காலால் உதைப்பது, பாழ்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவது, அடுத்தவா் பூமியைப் பறிப்பது போன்றவற்றால் பூமி சாபம் ஏற்படுமாம்.
கங்கா சாபம்
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீா் கிடைக்காது. சந்ததிகள் தண்ணீா் சம்பந்தமான நோயால் அவதிப்படுவார்களாம். பலா் அருந்தக் கூடிய நீரைப் பாழ் செய்வதும். ஓடும் நதியை அசுத்தம் செய்வதும் கங்கா சாபத்தை ஏற்படுத்துமாம்.
விருட்ச சாபம்
விருட்ச சாபம் (மரங்களின் சாபம்) இதனால் கடன், நோய், காயம் ஏற்படுமாம். பச்சை மரத்தை வெட்டுவது, பழம் தரும் மரத்தைப் பட்டுப் போகச் செய்வது, மரத்தை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவது இவற்றால் விருட்ச
சாபம் ஏற்படுமாம்.
ஒரு செடியிலிருந்து இலை பறிக்கவும், கிளை வெட்டவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சித்தா்கள் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி சாந்தப்படுத்தி விட்டே அவற்றைச் செய்வார்களாம்.
சில மரங்களை வெட்டும் போது அதில் குடியிருக்கும் நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள் வெளியேற வேண்டி இருக்கும். அவை சாபம் கொடுக்குமாம். இதற்கு மேல் இவற்றை விளக்க இங்கே இடமில்லை.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது, திருவிழாக் காலங்களில் தெய்வ ஊா்வலங்களின் போது கலவரம், சாதிச் சண்டை ஏற்படுவது இவற்றால் தெய்வ சாபம் ஏற்படும்.
ரிஷி சாபம்
கலியுகத்தில் ஆசாரிய புருஷா்களை அவமதிப்பது, உண்மையான பக்தா்களை அவமதிப்பது, ரிஷிகளின் விக்கிரகங்களை அவமதிப்பது
என்பன ரிஷி சாபத்தில் அடங்கும்.
முனி சாபம்
எல்லைத் தெய்வங்கள், சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் மறப்பது முனி சாபத்துக்கு ஆளாகும்.
தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம் இவற்றால் உறவினா்கள் பிரிந்து செல்லுதல், வம்ச அழிவு, செய்வினைக் கோளாறு போன்றவை நிகழுமாம்.
குல தெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூசித்த குல தெய்வங்களைப் பூசிக்காமல் மறப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.
இவைகள் எல்லாம் நமக்குத் தெரிய வரும் போது ஒவ்வொரு குடும்பமும் மேற்கண்ட சாபங்களில் ஏதாவது ஒரு சாபத்துக்கு ஆட்பட்டிருக்கும் என்றே அறிய முடிகிறது. நிச்சயம் இருக்கும் என்றே நம்பிக்கை உண்டாகிறது.
எனவே உண்மை உணா்வுடன் விரதம் இருந்து சுயக்
கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பயபக்தியோடும், சிரத்தையோடும் இருமுடி செலுத்துங்கள்! அதன் பலனை அனுபவத்தில் உணா்வீா்கள்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

                     நந்தினி விரதம் (கோவத்ஸ பூஜை)  

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் 
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய

 
 
(ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை)
'கோமாதா' என்று தாய்க்குச் சமமாகப் போற்றப்படும் பசுக்களின் சிறப்பு வார்த்தைகளில் அடங்குவதில்லை. சாத்வீகத் தன்மைக்கு உதாரணமாகப் போற்றப்படும் பசு, மனிதர் பெறவேண்டிய செல்வங்களுள் முக்கியமான ஒன்று. அக்காலத்தில், அதிகப் பசுக்களை வைத்திருப்பவர், பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். 'மாடு' என்றாலே செல்வம் என்றும் பொருள். வேள்விகள், ஹோமங்கள் நடக்கும் முன்பாக, கோபூஜை செய்து துவங்குவது நம் சம்பிரதாயம். திருக்கோவில்களில், விடியலில், திருவனந்தல் தரிசனத்தின் போது, இறைவனின் திருமுன், பசுவையும் கன்றையும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்த பின்பே, சேவார்த்திகள் இறைவனை  தரிசிக்கின்றனர். இறைவனே, கோமாதாவின் திருமுகத்தில் விழிப்பதாக ஐதீகம்.
கன்றோடு சேர்ந்த பசு, சுபசகுனங்களில் ஒன்று. கோசாலை, ஆலயத்திற்கு சமமான பெருமை வாய்ந்தது. கோசாலையில் செய்யப்படும் யாகங்கள், ஹோமங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பசுவை, யார் ஆராதிக்கிறார்களோ, அவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளையும் பெறுகிறார்கள். பசுவிற்கு 'அக்னிஹோத்ரி' என்றும் பெயர் உண்டு. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், அக்னியை எப்படி, சிறிதும் சோர்வின்றி ரட்சிக்க வேண்டுமோ, அப்படியே, பசுவையும் ரட்சிக்க வேண்டும்.
பசுவிற்கு ஒரு பிடி அகத்திக்கீரை தருபவன், எண்ணற்ற யாகங்களைச் செய்த புண்ணியப் பலனை அடைகிறான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பசுவுக்கு தினமும் ஒரு பிடி புல் தருபவர், மரணத்திற்குப் பின் கட்டாயம் சொர்க்க வாசம் அடைகிறார். தாய்ப்பால் கிடைக்க இயலாத குழந்தைகளுக்கு, பசுவின் பாலே தரப்படுகின்றது. பஞ்சகவ்யம் எனப் போற்றப்படும், பசுஞ்சாணம், பால், தயிர், நெய், கோமியம் ஆகியவை தெளித்தே, யாகசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பசுவின் சாணமும், கோமியமும், சிறந்த கிருமி நாசினிகள். கிருச்ச விரதம் முதலான விரதங்கள் எடுக்கும் முன்பாக, பஞ்சகவ்யம் கட்டாயம் அருந்த வேண்டும்.
பசுஞ்சாணத்தில் ஸ்ரீலக்ஷ்மியும், கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, அக்காலத்தில், விடியலில், சாணம் கரைத்த நீரைத் தெளித்து வீடு வாசலை மெழுகித் தூய்மை செய்தார்கள். சாணம் கிருமிநாசினியாதலால், பூச்சிகள் வீட்டினுள் சேராமல் தடுக்கும். பசுஞ்சாணத்தால் தட்டிய வரட்டிகளையே, ஹோமங்களில் உபயோகிப்பது வழக்கம். மிக நுண்ணிய மந்திர ஒலிகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது பசுவரட்டி.

பசுவின் உடலில், எண்ணற்ற தேவதைகள் வாசம் செய்கின்றனர். பசுவின், முகத்தின் மத்தியில் சிவனாரும், வல, இடக் கண்களில் முறையே சூரிய சந்திரரும், வலப்புற நாசியில், முருகனும், இடப்புற நாசியில், கணபதியும், காதுகளில் அஸ்வினி தேவர்களும், கழுத்தின் மேல்புறம் ராகுவும், கீழ்ப்புறம் கேதுவும், கொண்டைப்பகுதியில் பிரம்மாவும், முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதியும் விஷ்ணுவும், முன்வலக்காலில் பைரவரும், முன் இடக்காலில், ஹனுமனும், பின்கால்களில் முறையே, பராசரர், விஸ்வாமித்திரரும், பின்கால்களின் மேற்புறம், நாரதரும் வசிஷ்டரும், பிருஷ்ட பாகத்தின் கீழ்ப்புறம் கங்கையும், மேற்புறம் ஸ்ரீலக்ஷ்மியும், முதுகுப்புறம், குபேரர், வருணன், அக்னி, பரத்வாஜர் ஆகியோரும், வயிற்றுப் பகுதியில் சனகாதியரும் பூமாதேவியும், வாலின் மேல், கீழ்ப்பகுதியில் முறையே, நாகராஜரும், ஸ்ரீமானாரும், வல, இடக் கொம்புகளில், வீமன், இந்திரனும், நான்கு குளம்புகளிலும், விந்திய மலை, இமயமலை, மந்திர மலை, த்ரோணமலை முதலியவையும், பால்மடியில், அமுதக்கடலும் வாசம் செய்கின்றன.
ஆகவே, பசுவை வணங்கினால், எல்லாத் தேவர்களையும் தொழுத பலன் கிடைக்கும்.  தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, நந்தா, சுரபி(காமதேனு), பத்திரை, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன். இவற்றின் சந்ததியரே, இப்பூவுலகில் நாம் காணும் பசுக்கள் என்று புராணம் கூறுகிறது. இவை, இன்றளவும் கோலோகத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். தானங்களில் கோதானம் மிக முக்கிய இடம் பெறுகிறது. மகாபாபிகளும், பஞ்சகவியம் அருந்தி ஒரு வேளை உபவாசமிருந்தால், அவர் செய்த பாவம் நசியும் என்று அக்னி புராணம் கூறுகிறது.
பசுவின் கால் தூசியில், மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். மாடுகள், மேய்ச்சல் முடிந்து திரும்பும் சமயம்'கோதூளிகா வேளை' என்று போற்றப்படுகிறது. அந்தச் சமயமே, அனைத்து இல்லங்களுக்கும் தேவி எழுந்தருள்கிறாள். ஆகவே, அந்த நேரம் தவறாது விளக்கேற்ற வேண்டும். மாலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை கோதூளிகா வேளையில் துவங்குவது சிறந்தது.
 
 
இத்தகைய மகிமை பொருந்திய பசுக்களை போற்றும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, ஐப்பசி கிருஷ்ணபட்ச துவாதசியில் கடைப்பிடிக்கப்படும், நந்தினி விரதம் எனப்படும் கோவத்ஸ பூஜை. இம்மாதம், 11/11/2012ல் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இந்த விரதம் தோன்றக் காரணமான புராணக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது, விஷ்ணு புராணத்தில், பிருதுசக்கரவர்த்தியின் சரிதமாகக் கூறப்படுகின்றது.
வானத்தில் வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் துருவ சக்கரவர்த்தியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. தான் செய்த அருந்த்வத்தின் பயனால், ஸ்ரீமந் நாராயணினின் அருளைப் பெற்று, உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்ற பெயருடைய மங்கையை திருமணம் செய்து கொண்டான். அவனுடைய சந்ததியில், அங்கன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு வெகு காலமாக வாரிசு இல்லை. அவன் பட்டமகிஷி, மிருத்துவின் புதல்வியாகிய, சுருதை என்பவள். அங்கன், ரிஷிகளின் ஆலோசனைப்படி, புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அதன் பலனாக, அவனுக்கு வேனன் என்ற ஒரு பிள்ளை பிறந்தான். அவன், தன் பாட்டனாராகிய மிருத்துவின் குண விசேஷத்தைக் கொண்டிருந்தான். கொடுங்கோலனாகவும், யாகங்கள், ஓமங்கள் முதலியவற்றைச் செய்வதைத் தடுப்பவனாகவும் இருந்தான். தானங்கள் கொடுப்பதையும் தடுத்து, 'தானே, யக்ஞங்களாலும், பிறவற்றாலும் தொழப்படவேண்டியவன்' என்று  நாடு முழுவதும் பறையறிவித்தான்.
ரிஷிகளும், முனிவர்களும், இவ்வாறெல்லாம் செய்வது தவறு, என்று எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அவனது செய்கைகளால், கோபமே வராத முனிவர்களுக்கும் கோபம் வந்தது. அவர்கள், தங்கள் கையிலுள்ள, தர்ப்பைப் புல்லால் அவனை அடித்தார்கள். அவன் எரிந்து, இறந்து கீழே விழுந்தான். உடனே, எங்கும் தூசியும் தும்புமாக நாற்திசைகளிலும் பறந்து வியாபித்தது. இதைக் கண்ட ரிஷிகள், அங்கிருந்த மக்களிடம் வினவ, அவர்கள், "ரிஷிகளாகிய நீங்கள், உங்கள் சுபாவத்தைக் கைவிட்டதாலேயே இவ்வாறு நேர்ந்தது" என்று கூறினார்கள்.
இந்த பெரும் சங்கடத்தை நீக்க, ரிஷிகள் எல்லோரும் கலந்து ஆலோசித்து, உடனே ஒரு புத்திரனை வேனனுக்கு உண்டாகுமாறு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காக, எரிந்த வேனனுடைய உடலின் தொடையைக் கடைந்தனர். அப்போது, அவன் பாவ குணங்களெல்லாம் உருவெடுத்து, கறுப்பாக, விகாரமாக‌ ஒரு உருவம் தோன்றியது. அவனே 'பகுகா' என்ற பெயருடைய வேனனின் புதல்வன். அவனை, ரிஷிகள், 'நீஷீத' (அமர்) என்று சொன்னார்கள். அதனால், 'நிஷாதன்' என்பதும் அவன் பெயாராயிற்று. அவன் குலம் நாட்டுக்கு வெளியே, மலை, வனாந்தரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அவன் சந்ததியினரே, நிஷாத இனத்தவரான, விந்திய மலை வேடர்கள்.
அதன் பிறகு, ஒரு நற்புத்திரனை உண்டாக்கும் விதமாக, வேனனுடைய, வலது கையைக் கடைந்தனர் ரிஷிகள். அதிலிருந்து, தேஜோமயமாக, அக்னியைப் போன்று ஜொலிக்கும் ரூபத்துடன், பிருது மாமன்னன் தோன்றினான். அவன் தோன்றிய உடனேயே, வானத்திலிருந்து, அசகவம் என்ற வில்லும் திவ்யமான பாணங்களும் அவன் கையில் சேர்ந்தன. எல்லா புனித நதிகளும், சமுத்திரங்களும், தத்தம் புனித நீரினால், பிருதுமன்னனை அபிஷேகித்து, திவ்ய ரத்தினங்களைக் கொடுத்து வணங்கி நின்றன. பிருது மன்னனின், வலக்கரத்தில் சக்ர ரேகை இருந்ததால், அவர், ஸ்ரீமந் நாராயணனின் அம்சம் என்று அனைவரும் மகிழ்ந்தனர்.
அப்போது வேனனுடைய இடது கரத்திலிருந்து, தீப்பிழம்பாக, ஸ்ரீலக்ஷ்மியின் அம்சத்துடன், ஒரு பெண் தோன்றினாள்.  அவளுக்கு 'அர்ச்சி' என்று பெயரிடப்பட்டது.
 
 
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.
பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.
அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.
பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.
தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.
 
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.
பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.
அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.
பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.
தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.

இதனால், பிருதுவின்  பத்தினி, பூமாதேவி என்று கூறுகிறது மனுஸ்மிருதி. பூமிக்கு இதனாலேயே, பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நிகழ்வை ஒட்டியே, கோவத்ஸபூஜை நடத்தப்படுகிறது.
பூஜை செய்யும் முறை:
இதை முக்கியமாக, வடஇந்தியர்கள், குஜராத்தியர் செய்கிறார்கள். குழந்தைகள் சுகமாக இருக்கவும், சந்ததி பெருகவும், இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், முழு உபவாசமிருந்து, கன்றுடன் கூடிய பசுவை நீராட்டி, அலங்கரிக்கிறார்கள்.
அதற்கு, பூஜை செய்து, பயத்தம் பருப்பினால் செய்யப்பட்ட பண்டங்கள், முளைவிட்ட பாசிப்பயறு முதலியவை அளிக்கிறார்கள். பின், தம் குலம் தழைக்க வேண்டுதல் செய்து, பசுவை வலம் வந்து நமஸ்கரிக்கிறார்கள். அன்று முழுவதும், பால், தயிர், நெய் முதலிய பால் பொருட்களை உண்பதைத் தவிர்க்கிறார்கள்.
கோபூஜையின் போது சொல்ல வேண்டிய, வேண்டுவனவற்றை எல்லாம் தரும், காமதேனுவாகிய சுரபியைத் துதிக்கும், கவாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும். இதை சாதாரண நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.
நாமும், ஐப்பசி கிருஷ்ண பக்ஷ  துவாதசியன்று, கன்றுடன் கூடிய கோமாதாவைப் பூஜித்து, விருப்பங்கள் நிறைவேறப்பெற்று,
வெற்றி பெறுவோம்!!!!!!