சனி, 11 ஜூன், 2016

செய்தி வழங்கல்

சித்தர் கர்ம யோக சாஸ்திரம் – அறிமுகவுரை
ஊழ்வினையை அடிப்படையாகக்கொண்டு இவ்வுலகில் பிறந்த மானிடர்கள் ஒழுக்க நெறிகொண்ட புண்ணியத்தை பெருக்குகின்ற கடமைகளைச்செய்வதன் மூலம் உயர்வு பெறலாம் என்னும் நெறியை உணர்த்துவதே கர்ம யோக சாஸ்திரமாகும்.
“கர்ம யோகம்” மட்டும் ஒரு ஆன்மாவின் வினை வலிமையை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்யக்கூடியதாகும். உடல்நிலையை வலிமைப்படுத்தி அதன் மூலம் சுவாச நிலையைக்கட்டுப்படுத்தி மூன்றாம் கண்ணாக விளங்கும் நெற்றிக்கண்ணைத்திறந்து உயர்வு பெறத்தக்க மார்க்கம் வாசி யோகம் என்பதாகும். ஆனால், வாசி யோகத்தை திறம்படப்பயின்று அதனை செயலாக்கம் செய்து வெற்றி காண்பது மிகவும் கடினமான செயலாகையால் கர்மயோக வழியில் கடமைகளின் மூலமே ஞானக்கண்ணைத்திறக்க வழிவகை செய்யும் மார்க்கமே கர்ம யோகமாகும்.
கலியுகத்தில் பலதரப்பட்ட மக்களால் மதம், மொழி போன்ற எந்தவித வித்தியாசங்களுக்கும் கட்டுப்படாமல்; அதிக சிரமங்கள் இல்லாமல் எளிமையாகப்பின்பற்றி உயர்வடையும் மார்க்கங்களை “சித்தர் கர்ம யோக சாஸ்திரம்” கூறுகின்றது. சித்தர்கள் பின்பற்றி தீவினைகளை நீக்கி நல்வினைகளைப்பெற்று நினைத்ததெல்லாம் பெற்ற சிறப்புடைய அபூர்வ யோக முறை ”சித்தர் கர்ம யோகமாகும்” என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராக விளங்கக்கூடிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
சித்தர் கர்ம யோகம் - வகைகள்
சித்தர் கர்ம யோகமானது செய்தல், செய்வித்தல் என்னும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன: (1) தன்பால் கர்ம யோகம் (2) பிறபால் கர்ம யோகம்
(1)தன்பால் கர்ம யோகம்
தன்பால் கர்ம யோகமானது தனக்கும் தன்னைச்சார்ந்த ரத்தத்தொடர்புடைய உறவினர்களுக்கும் கடமையாற்றுவதாகும். தன்னை உயர்த்திக்கொள்ள முதலில் தன்னுடைய ஓழுக்கத்தை வளர்த்துக்கொண்டு, தர்மநெறிகளுக்குட்பட்டு தான் வாழவேண்டும். தன்னைச்சார்ந்த தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, மனைவி, குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தோர் போன்றவர்களை நல்வழிப்படுத்தி, தர்மத்திற்குட்பட்டு அவரவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளைக்குறைவில்லாமல் செய்து அவர்களையும் தர்மக்கடன்களார்க்கச்செய்து அவர்களின் வாழ்விலும் உயர்வான நல்வினைகளைச்சம்பாதிக்கச்செய்து உயர்வான வாழ்வை அடையச்செய்வதாகும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச் சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
(2)பிறபால் கர்ம யோகம்
பிறபால் கர்ம யோகமானது உறவல்லாத பிற ஆன்மாக்களுக்கு கடமையாற்றுவதாகும். தான் ஒழுக்கத்தில் சிறந்து ஓங்கி தர்ம நெறிக்குட்பட்ட வாழ்க்கை நடத்துவதைப்போன்று தம்மால் முடிந்தவரை அவற்றை நம்மோடு நட்பு கொண்டவர்களுக்கும் உபதேசித்து அவரவர் கடமைகளை முறையாகச்செய்வித்து அவரவர்களின் வாழ்விலும் உயர்வான நல்வினைகளை சம்பாதிக்கச்செய்து உயர்வாழ்வை அடையச்செய்வதாகும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
கர்ம யோகம்- முதல்படி
கர்ம யோகத்தின் முதல்படி மனதை ஒருமுகப்படுத்துவதாகும். மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம் எனப்படும். அலைபாயும் மனதைக்கட்டுப்படுத்தி மனதில் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள தியானம் உதவும். மனத்தெளிவு பெற்ற பின் மனம் என்னும் கழனியில் முதல் வித்தாக பக்தி என்னும் வித்தை விதைக்க வேண்டும். பக்தியின் வித்தாக தாம் விரும்பும் ஏதாவதொரு தெய்வத்தை குருவாக ஏற்று வழிபாடு செய்து கொண்டு வரவேண்டும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
கர்ம யோகம் - இரண்டாம் படி
கர்ம யோகத்தின் இரண்டாம் படி மனிதநேயமாகும். குருவருள் துணைக்கொண்டு தன்னைப்போன்று இறைவனால் படைக்கப்பட்ட பிற உயிர்களின் உயர்வுகளையும் தாழ்வுகளையும் எண்ணிப்பார்த்தல்; தர்மத்தின் ரூபமாகிய பிற உயிர்களிடத்து இருக்கின்ற உயர்வுகளை மனதில் பதிந்து கொள்ளுதல்; தன் கடமைகளை கர்ம யோகம் மூலம் எவ்வாறு பிறரிடம் செயலாற்றுவது என்பதை அறிந்து தெளிந்து செயலாற்றுதல் போன்றவைகள் கர்ம யோகத்தின் இரண்டாம் படி என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
கர்ம யோகம் - முன்றாம் படி
ஒரு மனிதன் கர்ம யோகத்தைப்பின்பற்றி வாழ்க்கையை நடத்தும் பொழுது ஊழ்வினையானது வாழ்க்கையில் பல சோதனைகளை ஏற்படுத்தி அவனை கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் பொழுது குருவருள் துணைக்கொண்டு கர்ம யோகத்தை குறையில்லாமல் செய்ய மனிதனாகப்பிறந்து உயர்வான கடமைகளையாற்றிக்கொண்டு தர்ம சொரூபம் கொண்ட உயர்வான ஆற்றலை சேமித்து வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களை நேரில் கண்டு அவர்களின் ஆசீர்வாதங்களை அடிக்கடி பெற்றுக்கொண்டு வந்தால் ஊழ்வினையின் வீரியம் குறைந்து கர்ம யோகம் முழுமை பெற்று அதன் முழுபலனைக்கொடுத்து உயர்வு ஏற்படுத்தும். குருமார்களின் நேரடி ஆசீர்வாதங்களைப்பெறும் பொழுது அவர்கள் சேமித்து வைத்துள்ள நல்லூழ் ஆற்றலின் ஒரு பகுதியானது ஆசீர்வாதம் பெற்றுக்கொள்பவரின் ஆன்மாவிற்குப்பகிர்ந்தளிக்கப்படுவதால் ஊழ்வினையிலுள்ள தீவினைகள் குறைக்கப்பட்டு கர்ம யோகத்தின் முழுபலனை ஒரு மானிடன் அடைய இறையருள் கூட்டுவிக்கின்றது. எனவே, கர்ம யோகத்தின் மூன்றாம் படி மிக முக்கியமான படியாகும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசிக்கின்றார்.
கர்ம யோகம் - சப்த தீட்சைகள்
அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய ஸ்ரீ கோரக்கச்சித்தருக்கு தன்னுடைய ஓலைச்சுவடி நூலான “ சித்தர் கர்ம யோக தீட்சை “ காண்டத்தில் ஏழு விதமான கர்ம யோக தீட்சை (உபதேசம்) மார்க்கங்களைக் கூறியிருக்கின்றார். அவையாவன:
ஓங்கார தீட்சை
சடாட்சர தீட்சை
போக பஞ்சாட்சர தீட்சை
தூல பஞ்சாட்சர தீட்சை
சூக்கும பஞ்சாட்சர தீட்சை
காரண பஞ்சாட்சர தீட்சை
முக்தி பஞ்சாட்சர தீட்சை
மேற்கண்ட ஏழு வகையான மந்திர தீட்சைகளையும் (உபதேசங்களையும்) குரு முகாந்திரமாக முறையாகப்பெற்றுக்கொள்பவர்கள் காகபுஜண்டரின் பூரண குருவருள் பெற்று முறையானக்கர்மங்களை இவ்வுலகில் செய்து முடிவில் பிறவாப்பெருநிலையாக விளங்கும் முக்தியையும் அடைவார்கள் என்று காகபுஜண்டர் தன்னுடைய சீடருக்கு உபதேசிக்கின்றார்.
கற்பக விருட்சமாம் காகபுஜண்டர் தன்னுடைய பூலோகச்சீடர்களுள் ஒருவராக விளங்கக்கூடிய பாஸ்கரன் குருஜிக்கு கனவின் மூலம் முறையாக ஏழு தீட்சைகளையும் பரிபூரணமாக வழங்கி ஸ்பரிச தீட்சை கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். தாம் உபதேசித்தருளிய ஏழு தீட்சை மார்க்கங்களையும் நாடி வந்து வணங்கிக்கேட்கும் பக்தர்களுக்கு பரிபூரணமாக அளிக்குமாறும் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடரான பாஸ்கரன் குருஜிக்கு ஆணையிட்டுள்ளார். நாம் இப்பொழுது ஒவ்வொரு தீட்சை மார்க்கமாக விளக்கங்களைக்காண்போம்.
முதலாம் தீட்சை - ஓங்கார தீட்சை
ஓம் என்னும் பிரணவப்பொருளில் அடங்கியுள்ள மந்திரப்பிரம்மம், கிரியாப்பிரம்மம், தத்துவப்பிரம்மம், பீஜப்பிரம்மம் மற்றும் முகப்பிரம்மம் என்கிற பஞ்ச பிரம்மங்களின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) ஓங்கார தீட்சை எனப்படும்.
இரண்டாம் தீட்சை - சடாட்சர தீட்சை
“ சரவணபவ “ என்னும் அட்சரங்களில் அடங்கியுள்ள சகாரம், ரகாரம், வகாரம், ணகாரம், பகாரம் மற்றும் வகாரம் என்னும் ஆறு சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) சடாட்சர தீட்சை எனப்படும்.
மூன்றாம் தீட்சை - போகப்பஞ்சாட்சர தீட்சை
பிருத்துவி பஞ்சாட்சர சக்திகளாகவும்; முழுமையான மனச்செம்மையை ஏற்படுத்தும் சக்திகளாகவும் விளங்கக்கூடிய கீழ்க்கண்ட இருபத்தைந்து வகையான போகப்பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) போகப்பஞ்சாட்சர தீட்சை எனப்படும். அவையாவன:
வ.எண்

போகப்பஞ்சாட்சரத்தின் பெயர்

பஞ்சாட்சர எழுத்துக்கள்
1
அற போகப்பஞ்சாட்சரம
சி




2
காம போகப்பஞ்சாட்சரம்
சி




3
ஆடை போகப்பஞ்சாட்சரம்
சி




4
அணி போகப்பஞ்சாட்சரம்
சி




5
போசன போகப்பஞ்சாட்சரம்
சி




6 தாம்பூல போகப்பஞ்சாட்சரம்
சி




7 பரிமள போகப்பஞ்சாட்சரம்
சி




8 பாட்டு போகப்பஞ்சாட்சரம்

சி ய வ ம ந
9 ஆடல் போகப்பஞ்சாட்சரம்
சி ய ந வ ம
10 பதுமநிதி போகப்பஞ்சாட்சரம்
சி ய ந ம வ
11 மகாபதுமநிதி போகப்பஞ்சாட்சரம்
சி ய ம ந வ
12 மகாநிதி போகப்பஞ்சாட்சரம்
\
சி ய ம வ ந
13 கச்சபநிதி போகப்பஞ்சாட்சரம்
சி ந வ ய ம
14 முகுந்தநிதி போகப்பஞ்சாட்சரம்
சி ந வ ம ய
15 குந்தநிதி போகப்பஞ்சாட்சரம்

சி




16 நீலநிதி போகப்பஞ்சாட்சரம்

சி ந ய ம வ
17 சங்கநிதி போகப்பஞ்சாட்சரம்
சி ந ம வ ய
18 அணிமாசித்தி போகப்பஞ்சாட்சரம்
சி ந ம ய வ
19 மகிமாசித்தி போகப்பஞ்சாட்சரம்
சி ம வ ய ந
20 கரிமாசித்தி போகப்பஞ்சாட்சரம்
சி ம வ ந ய
21 இலகிமாசித்தி போகப்பஞ்சாட்சரம்
சி ம ய வ ந
22 பிராப்திசித்தி போகப்பஞ்சாட்சரம்
சி




23 பிராகாமியம் சித்தி போகப்பஞ்சாட்சரம்
சி




24 ஈசத்துவம்சித்தி போகப்பஞ்சாட்சரம்
சி ம ந வ ய
25 வசித்துவம் சித்தி போகப்பஞ்சாட்சரம்

ஒம்

சி









நான்காம் தீட்சை - தூலப்பஞ்சாட்சர தீட்சை
அப்பு பஞ்சாட்சர சக்திகளாகவும் முழுமையாக நோய்களைத்தீர்க்க வல்ல சக்திகளாகவும் விளங்கக்கூடிய கீழ்க்கண்ட இருபத்தைந்து வகையான வைத்திய பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) தூலப்பஞ்சாட்சர தீட்சை எனப்படும். அவையாவன:
வ.எண்

தூலப்பஞ்சாட்சரத்தின் பெயர்

பஞ்சாட்சர எழுத்துக்கள்
1

பாலரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






2

பாலகிரக தோட நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






3

சிரரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






4

சுரரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






5

சன்னிரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






6

மூலரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்



சி






7

அதிசாரரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




8

கிராணிரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




9

வாதரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
10

பித்தரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


11

சிலோத்துமரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
12

பிரமிய ரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


13

மேகரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




14

கிரந்திரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




15

சூலைரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


16

குட்டரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
17

உதரரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
18

நேத்திரரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


19

பாண்டுரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




20

வாந்திரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்





சி




21

மசூரிகைரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
22

கபாலரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


23

வலிப்புரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்









சி
24

நாசிரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்







சி


25

நஞ்சுரோக நிவர்த்தி பஞ்சாட்சரம்

ஒம்



சி






ஐந்தாம் தீட்சை - சுக்குமப்பஞ்சாட்சர தீட்சை
தேயு பஞ்சாட்சர சக்திகளாகவும் முழுமையான ஆன்ம தீபம் ஏற்றக்கூடிய சக்திகளாகவும் விளங்கக்கூடிய கீழ்க்கண்ட இருபத்தைந்து வகையான அக்கினி பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) சூக்குமப்பஞ்சாட்சர தீட்சை எனப்படும். அவையாவன:
வ.எண்

சூக்குமப்பஞ்சாட்சரத்தின் பெயர்

பஞ்சாட்சர எழுத்துக்கள்
1

ருத்திரர் பஞ்சாட்சரம்



சி






2

சந்திரசேகரர்பஞ்சாட்சரம்



சி






3

உமாமகேசர் பஞ்சாட்சரம்



சி






4

ரிடபாரூடர் பஞ்சாட்சரம்



சி






5

சபாபதி பஞ்சாட்சரம்



சி






6

கல்யாணசுந்தரர் பஞ்சாட்சரம்



சி






7

பிட்சாடனர் பஞ்சாட்சரம்





சி




8

காமாரி பஞ்சாட்சரம்





சி




9

அந்தகாரி பஞ்சாட்சரம்









சி
10

திரிபுராரி பஞ்சாட்சரம்







சி


11

சலந்தராரி பஞ்சாட்சரம்







சி


12

விதித்வம்சர் பஞ்சாட்சரம்









சி
13

வீரபத்திரர் பஞ்சாட்சரம்





சி




14

நரசிங்க நிபாதனர் பஞ்சாட்சரம்





சி




15

அர்த்த நாரீஸ்வரர் பஞ்சாட்சரம்









சி
16

கிராதர் பஞ்சாட்சரம்







சி


17

கங்காளர் பஞ்சாட்சரம்









சி
18

சண்டேசாநுக்கிரகர் பஞ்சாட்சரம்







சி


19

சக்கிரப்ரதர் பஞ்சாட்சரம்





சி




20

கசமுகாநுக்கிரகர் பஞ்சாட்சரம்





சி




21

ஏகபாதர் பஞ்சாட்சரம்









சி
22

சோமாசுகந்தர் பஞ்சாட்சரம்







சி


23

அநங்கசுகபிருது பஞ்சாட்சரம்







சி


24

தட்சணாமூர்த்தி பஞ்சாட்சரம்









சி
25

லிங்கோற்பவர் பஞ்சாட்சரம்

ஒம்



சி






ஆறாம் தீட்சை - காரணப்பஞ்சாட்சர தீட்சை
வாயு பஞ்சாட்சர சக்திகளாகவும் முழுமையான சுவாச சக்திகளாவும் விளங்கக்கூடிய கீழ்க்கண்ட இருபந்தைந்து வகையான காரணப்பஞ்சாட்சர சக்திகளின் சூட்மங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) காரணப்பஞ்சாட்சர தீட்சை எனப்படும். அவையாவன:
வ.எண்

காரணப்பஞ்சாட்சரத்தின் பெயர்

பஞ்சாட்சர எழுத்துக்கள்
1

அகாரபீடப்பஞ்சாட்சரம்



சி






2

உகாரபீடப்பஞ்சாட்சரம்



சி






3

மூலாதாரபீடப்பஞ்சாட்சரம்



சி






4

சுவாதிட்டானபீடப்பஞ்சாட்சரம்



சி






5

மணிபூரகபீடப்பஞ்சாட்சரம்



சி






6

அநாகதபீடப்பஞ்சாட்சரம்



சி






7

விசுத்திபீடப்பஞ்சாட்சரம்





சி




8

ஆக்ஞைபீடப்பஞ்சாட்சரம்





சி




9

ரேசகபீடப்பஞ்சாட்சரம்









சி
10

பூரகபீடப்பஞ்சாட்சரம்







சி


11

கும்பகபீடப்பஞ்சாட்சரம்







சி


12

ரவிபீடப்பஞ்சாட்சரம்









சி
13

மதிபீடப்பஞ்சாட்சரம்





சி




14

அக்கினிபீடப்பஞ்சாட்சரம்





சி




15

பிரம்மபீடப்பஞ்சாட்சரம்









சி
16

கமலபீடப்பஞ்சாட்சரம்







சி


17

மவுனபீடப்பஞ்சாட்சரம்







சி


18

ஞானபீடப்பஞ்சாட்சரம்









சி
19

அண்டபீடப்பஞ்சாட்சரம்





சி




20

குண்டலிபீடப்பஞ்சாட்சரம்





சி




21

குருபீடப்பஞ்சாட்சரம்







சி


22

வாசிபீடப்பஞ்சாட்சரம்









சி
23

சுகாசனபீடப்பஞ்சாட்சரம்









சி
24

கேசரிபீடப்பஞ்சாட்சரம்







சி


25

மகாரபீடப்பஞ்சாட்சரம்

ஒம்



சி






ஏழாம் தீட்சை - முக்தி பஞ்சாட்சர தீட்சை
ஞானபஞ்சாட்சர சக்திகளாகவும் ஆகாய பஞ்சாட்சர சக்திகளாவும் விளங்கி முக்திக்கு வித்தளிக்கக்கூடிய கீழ்க்கண்ட இருபத்தைந்து வகையாக முக்தி பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் தீட்சை (உபதேசம்) முக்தி பஞ்சாட்சர தீட்சை எனப்படும். அவையாவன:
வ.எண்

முக்தி பஞ்சாட்சரத்தின் பெயர்

பஞ்சாட்சர எழுத்துக்கள்
1

தத்வல்ய சமாதி பஞ்சாட்சரம்



சி






2

தத்வல்ய சோதி பஞ்சாட்சரம்



சி






3

தத்வல்ய சோதி பஞ்சாட்சரம்



சி






4

தத்வல்ய ஒடுக்க பஞ்சாட்சரம்



சி






5

தத்வல்ய பூரண பஞ்சாட்சரம்



சி






6

சவிகற்ப சமாதி பஞ்சாட்சரம்



சி






7

சவிகற்ப சோதி பஞ்சாட்சரம்





சி




8

சவிகற்ப கற்ப பஞ்சாட்சரம்





சி




9

சவிகற்ப ஒடுக்க பஞ்சாட்சரம்









சி
10

சவிகற்ப பூரண பஞ்சாட்சரம்







சி


11

நிருவிகற்ப சமாதி பஞ்சாட்சரம்









சி
12

நிருவிகற்ப சோதி பஞ்சாட்சரம்







சி


13

நிருவிகற்ப கற்ப பஞ்சாட்சரம்





சி




14

நிருவிகற்ப ஒடுக்க பஞ்சாட்சரம்





சி




15

நிருவிகற்ப பூரண பஞ்சாட்சரம்







சி


16

சஞ்சார சமாதி பஞ்சாட்சரம்









சி
17

சஞ்சார சோதி பஞ்சாட்சரம்









சி
18

சஞ்சார கற்ப பஞ்சாட்சரம்







சி


19

சஞ்சார ஒடுக்க பஞ்சாட்சரம்





சி




20

சஞ்சார பூரண பஞ்சாட்சரம்





சி




21

ஆரூட சமாதி பஞ்சாட்சரம்









சி
22

ஆரூட சோதி பஞ்சாட்சரம்







சி


23

ஆரூட கற்ப பஞ்சாட்சரம்







சி


24

ஆரூட ஒடுக்க பஞ்சாட்சரம்









சி
25

ஆரூட பூரண பஞ்சாட்சரம்

ஒம்



சி






சித்தர் கர்ம யோக சாஸ்திர
நாடிஜோதிடர்;கானல் மேகநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக