வியாழன், 22 செப்டம்பர், 2016

ஸ்ரீ மஹாகணபதி ருண விமோசன ஸ்தோத்ரம்

ஸ்ரீ மஹாகணபதி ருண விமோசன ஸ்தோத்ரம்
ஸ்மராமி தேவ தேவேசம் வக்ரதுண்டம் மஹாபலம்
ஷடாக்ஷரம் க்ருபாசிந்தும் நமாமி ருண முக்தயே ! (1)
ஏகாக்ஷரம் ஏகதந்தம் ஏகம்ப்ரம்ம ஸ்நாதனம்
ஏகமே வாத் விதியம் ச நமாமி ருண முக்தயே ! ( 2 )
ஓம் மஹாகணபதிம் தேவம் மஹா ஸத்வம் மஹாபலம்
மஹா விக்ன ஹரம் சம்போ நமாமி ருண முக்தயே ! (3)
க்ருஷ்ணாம்பரம் க்ருஷ்ணவர்ணம்
க்ருஷ்ணகந்தானுலேபனம் கிருஷ்ண ஸர்போப வீதம் ச
நமாமி ருண முக்தயே ! (4)
ரக்தாம்பரம் ரக்தவர்ணம் ரக்தகந்தானு லேபனம்
ரக்தபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 5 )
பீதாம்பரம் பீதவர்ணம் பீதகந்தானு லேபனம்
பீதபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 6 )
தூம்ராம்பரம் தூம்ரவர்ணம் தூம்ரகந்தானு லேபனம்
ஹோம தூப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 7 )
பாலநேத்ரம் பாலசந்திரம் பாசாங்குச தரம்
விபும் சாமராலங் க்ருதம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 8 )
இதம் து ருணஹரம் ஸ்தோத்ரம் ஸந்த்யாயாம்ய படேந்நர
ஷண்மாஸாந் யந்த ரேணவ
ருண முக்தோ பவிஷ்யதி
இதி ஸ்ரீ ருண விமோசன மஹாகணபதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
www.danvantarinadi.com
தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
மருத்துவக் கடவுளும், ஆரோக்கியம் அருளும் அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் தாங்கியிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரத்தை
தினமும் 48 முறைகள், பசும்பாலும், துளசி தீர்த்தமும் நைவேத்தியமாக வைத்து, உச்சாடனம் செய்து அவற்றை அருந்தி வரவேண்டும். இந்த முறையால் இழந்த ஆரோக்கியம் மீண்டும் திரும்பும். இதை நமது பிரச்சினைக்குத் தக்கவாறு பயன்படுத்திப் பலனடையலாம்.
‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.
. இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்
(அல்லது)
ஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய்களை தீர்க்கும்.இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.
www.danvantarinadi.com

10. சகரன்
திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.
சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே.
www.danvantarinadi.com

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலை

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன்படுத்தும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை, வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் உடல் மன பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்தரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் "ஹிப்னாடிஸத்தை" நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று "ரெய்கி மருத்துவம்" நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் "டெலிபதி" முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்த முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி? எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன்படுத்தப்படுகிறது.

                           காதல் வெற்றிக்காக, காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற - வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை "ஸ்ரீ தேவி யட்சணி மகாத்மியம்" சொல்கிறது.

                                               "ஸ்ரீதேவியட்சணி மகாத்மியம்" சொல்லும் அடிப்படையில்  நோக்கும் போது திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது, வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்ட பெண்ணை வசியம் செய்யகூடாது, உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது, தன்னை விட மூத்த வயது பெண்ணை வசியம் செய்ய கூடாது, அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது, அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய கூடாது. சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது. "வைஜெயந்தி உபாசனை" செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது. இத்தகைய பெண்களை தவிர்த்து பிற பெண்களுக்கு தான் வசியத்தை பிரயோகிக்க முடியும்.

அதே போல பெண்களும், திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது, குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது, விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது, (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன).

 காதலில் வெற்றி பெற யட்சணி  உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி "மதன மேகலா லக்ன பீடம்" வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா விஸ்ரூப யட்சிணி என்பது  நீர், காற்று, நிலம், நெருப்பு, ஆகாயம் போன்ற இயற்கை சக்தியின்  அட்ச அம்சம் கொண்டது. "மதன மேகலா லக்ன பீடம்" ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது.  இதன் உள்ளே ரதி - மன்மத வசிய சக்ரமும், விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடை ஏதுவும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி பிடித்தபடி, "ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா" என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரி பூரண வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம், மதனகாமப்பூ, வெண்குன்றி மணி, சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு "வீணா யட்சணி"  மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசியம் செய்யமுடியும்.

மரமஞ்சள், கஸ்தூரி, தாழம்பூ இதழ், கல்மதம், பாதிரி, வெண்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை மரப்பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பால்புரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் "உச்சிஷ்ட மதன கன்னிகா யட்சணி"  அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று "யட்சிணி வசிய நிகண்டு" என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் செய்யும்  நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சாங்கக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வித்வ பிரயோகம் :

குடும்ப பிரச்சனைகள் தீர, கணவன் - மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. "வித்வ பிரயோகம்" எனப்படும் பூதப் பிரேத பைசாச பிரயோகங்கள், துர் தேவதைகள், யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களை கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தியை கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் - மனைவிக்குள் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் மூன்று வித வழிகளை பயன்படுத்துவதுண்டு. ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும்  கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனதை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்க செய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்களை அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும்.

அஸ்ரஸ்வதம் :
கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சு தன்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். அஸ்ரஸ்வத பிரயோகத்தால்  கணவன் மனைவி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் நிலையில் பாதிப்புகள், சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகி பிரிந்துவிடும்  நிலை ஏற்படும். அஸ்ரஸ்வத முறையை பயன்படுத்தும் போது கணவன் - மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்ணங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி செல்லும் நிலை ஏற்படும்.

அந்தராசனம் :
அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமாக வாழும்  பெண் அல்லது ஆணுக்கு, வேறு ஆண் அல்லது பெண்ணோடு தொடர்பு மற்றும் தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் அவர்களின் குடும்பத்தில் விரிசலும், பிரிவும் ஏற்பட செய்வது.

பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் - திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் திலகம் என்பது நெற்றி அல்லது நெற்றிவகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்களும் (திலகம், அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை)  பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள்  பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். பெண்கள் சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆணோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும், ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும், கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம்,  நறுமணம், செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். வசியம் செய்த பெண்ணை  தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே அந்த ஆணுக்கு தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான்.

 ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள  செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும். உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும், நாளடைவில் வசியம் செய்தவரின் முழு கட்டுப்பாட்டுக்குள்  அவர்கள் வந்துவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் வசிய மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து, மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு.

இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன.

 உச்சிஸ்ட சண்டாளி, உச்சிஸ்ட காளி, பந்தினி, மதனமேகலா, வட யட்சிணி, துமாவதி, சங்க தாரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம், உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீ கரம், புன்னாக மலர், ஜப புஷ்பம், பாதிரி, பால் புரண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளநீரில் சேர்த்து அரைத்து புடம் போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம், ஸ்த்ரீவசியம், புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா யட்சணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி, புனுகு, கும்குமப்பூ, வெள்ளாடனை ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்கள் நிழலில் உலர்த்தி, அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மண் சட்டியில் காட்டி கரியாக எடுத்து, அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். காம தேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம், மனோசிலை, உத்தரோணிப்பூ ஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்று  வேளை, மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்)  உடலில் ஊற விட்டு அதன் பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் - மனைவி ஓன்றாக சேர்வார்கள் என்றும்        (மனைவியின் மணம், ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவியின் மீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரகொன்றை, தேவதாரு வேர், இலந்தை வேர், வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண் கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான்என்று "பைரவி தந்த்ரம்" என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும். ஆனால் துரதிருஷ்ட வசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன்படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மாற்றும் முயற்சிகளை தடுக்கவும்,  நமது பாரம்பரிய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும், பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் - மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. அஸ்வரூட ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் - மனைவி இடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிகப்படுத்துகிறது, பகளாமுகி யந்திரம் கணவன் -மனைவி ஒற்றுமையான திருமண வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தால் என்ன வகையான ஔஷத மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும்  மருந்துகளை ஸ்ரீ தேவி கார்த்யாயணி மந்திரத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம், உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்ப தலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயணி  யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி, மோகினி, பில்லி, சூனியம், வைப்பு, ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை  நீக்கிவிடும்.www.danvantarinadi.com


atharva-veda-8
கட்டுரையை எழுதியவர்;தன்வந்தரிநாடிஜோதிடம்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1530;
நான்கு வேதங்களில் மிகவும் மர்மம் நிறைந்தது அதர்வண வேதம். ஏனெனில் ஆதிகால மருத்துவ, விஞ்ஞான உண்மைகள், மாய மந்திர பில்லி சூனியங்கள் நிறைந்தது இந்த வேதம். துரதிருஷ்டவசமாக இதில் குறிப்பிடப்படும் மூலிகைகள், தாயத்துக்கள் ஆகியன வழக்கத்தில் இருந்து போய்விட்டதால் என்ன என்றே தெரியவில்லை. ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வரும் சோமக் கொடி பற்றியே நமக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜில்காமேஷ் (சுமேரிய/ பாபிலோனிய) காவியத்தைப் படித்துப் புரிந்து கொண்டுவிடலாம். அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களை அறிவது கடினம். நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்க முடியும்.


ரிக்வேதத்தில் 107 மூலிகை பற்றி வரும் பாடல் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அதில் 107 மூலிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நம் வசமுள்ள சரக, சுஸ்ருத சம்ஹிதைகளையும், தமிழ் சித்த மருத்துவ நூல்களையும் வேதங்களையும் வைத்துக்கொண்டு கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்து ஆராய வேண்டும்.


சோம பானத்தைப் போதையூட்டும் மருந்து என்று வெளிநாட்டுக்காரர்கள் பிதற்றியுள்ளனர். ஆனால் பாண்டியர் தமிழ் கல்வெட்டோ அதை மனோசுத்த மருந்து என்கிறது. நம்மவர்கள் கீதை, குறள், ராமாயணம், மஹாபாரதம் எதையுமே படிக்காமல், சங்க இலக்கிய 30,000 வரிகளைப் படிக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் பல அபத்தங்களை எழுதி வருவது வருந்ததக்கது. முதலில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். வெளி நாட்டுக்காரர் சொல்வதைவிட்டுவிட்டு, நம்மவர் அது பற்றி என்ன சொன்னார்கள் என்று முதலில் அறிய வேண்டும்; நம்ப வேண்டும். அப்படிச் செய்தால் புரியாத புதிர்கள் விடுபடும். மர்மங்கள் துலங்கும்!


atharva__veda__samhita_

இதோ ஜங்கிடா மர்மங்கள்:-

ஜங்கிடா என்பது ஒரு மூலிகை என்றும் பல வியாதிகளுக்குக் கைகண்ட மருந்து என்றும் கீத், மக்டொனல் இருவரும் எழுதிய வேதப் பொருளகராதி (வேதிக் இண்டெக்ஸ்) கூறுகிறது. அவர்களே இது என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று ஒப்புகொண்டுவிட்டு கௌசிக சூத்திரத்தில் வரும் குறிப்பில் இதை காலண்ட் என்பவர் “டெர்மினாலியா அர்ஜுனா” -- என்ற தாவரம் என்று சொல்வதாகவும் குறித்துள்ளனர். டெர்மினாலியா அர்ஜுனா என்பது மருத மரம் ஆக்கும்.

மூன்று மருத மரங்களும் மூன்று மாணிக்கங்களும் என்ற எனது கட்டுரையில், ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனம்), திருவிடை மருதூர் (மத்யார்ஜுனம்), திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) ஆகிய தலங்களில் உள்ள மருத மரங்கள் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

ஆனால் தேவி சந்த் என்பவர் எழுதிய அதர்வண வேத புத்தகத்தில் ஒரு இடத்தில் ஜங்கிடா என்பது கடவுளைக் குறிக்கும் என்று எழுதிவிட்டு பிற இடங்களில் மூலிகை என்று மொழி பெயர்க்கிறார். சாயணர் என்ற  பெரிய மகான் தான் 700 வருடங்களுக்கு முன் துணிந்து வேதங்களுக்குப் பொருள் எழுதினார். அவர் இந்த ஜங்கிடா என்பது காசி மாநகரத்தில் உள்ள ஒரு மரம் என்கிறார்.

 Terminalia_arjuna-1
மருத மரம் (விக்கிபீடியா படம்)

இது இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்களைக் குணப்படுத்தும் என்று தெரிகிறது. மருத மரம் குறித்து வெளியான பல மருத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் இது இருதய மற்றும் ரத்த நாளம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் என்று எழுதியுள்ளனர். ஆயினும் அவர்களுடைய ஆய்வுகள் முடிவானவை அல்ல. எதிரும் புதிருமாக முடிவுகள் வந்தால் மருத்துவ உலகம் அதை ஏற்காது. வேறு சிலர் ஜங்கிடா என்பதை வேறு சில மூலிகைகளுடன் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுதியுள்ளனர்.

வேதங்களில் குறிப்பிடப்படும் நூற்றுக்கணக்கான மூலிகைகள், நோய்களின் பெயர்கள் எல்லாம் ஊகத்தின் பெயரிலேயே எழுதப்பட்டுள்ளதால் யார் சொல்வதையும் உண்மை என்றோ தவறு என்றோ சொல்ல முடியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதையுமே கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் வகையில் எழுதிவிட்டு சோம பானம் என்பது மட்டும் என்ன என்று “கண்டுபிடித்துவிட்டதாக” சில வெளி நாட்டினரும் அதைக் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லும் நம்மூர் பகுத்தறிவுகளும் நகைப்புக்குரியவர்கள் என்பது வேதங்களைப் படித்தோர் அறிவர். இனம் இனத்தோடு சேரும். மது, மாது, மாமிசம், போதைப் பொருளில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் எப்படிப் புரியும்? மாக்ஸ்முல்லர் போன்ற பலர் இந்தியாவுக்கு வரமலேயே நம் வேதங்கள் பற்றி எழுதினர்!! நியுயார்க்கிற்குப் போகாமலேயே மேலூர் கொட்டாம்பட்டி முனிசாமி “உலகிலேயே உயரமான கட்டிடங்கள்” என்று புத்தகம் வெளியிட்டால் அதை தமாஷ் இலக்கிய வகையில் சேர்க்கலாம் அல்லவா!!


 terminalia arjuna
Marutha maram= Terminalia arjuna

மேலும் இந்தியா வந்த வெளிநாட்டினருக்கும் உதவியோர் அரைகுறை ஆங்கிலம், அரைகுறை வேத சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே. ஆகையால் அவர்கள் மொழிபெயர்ப்பும் அரைகுறையே. ரமணர், ராம கிருஷ்ணர், காஞ்சி மஹா சுவாமிகள், சிருங்கேரிப் பெரியவர் போன்ற உத்தமோத்தமர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பினால் போதும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதங்களை உள்ளது உள்ளபடி காப்பது நமது கடமை. மனித இனத்தின் முதல் புத்தகம் அது. சுமேரிய எகிப்திய இலக்கியங்களை எல்லாம் படித்தோர்கூட வேதங்களை ஊகிக்கத்தான் முடிகிறது, பொருள் சொல்ல முடியவில்லை. ஆயினும் வேதங்களால் பலன் இல்லாமல் இல்லை.

டெலிவிஷனும். மொபைல் போனும் எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியாது ஆயினும் அவைகளைப் பயன்படுத்திப் பயன் அடைகிறோம். இது போல வேதங்களையும் நம்பிக்கையுடன் ஓதினால் பலன் உண்டு.

Flowers_with_Sykes's_warbler_I_IMG_1880
 மருத மரம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்கிறார்: கண் தெரியாதவன் ஒருவன் கையில் விளக்கைக் கொண்டு சென்றான். எல்லோரும் கேட்டார்கள், உனக்கோ கண் தெரியாது, எதற்கப்பா விளக்கு? என்று. அவன் சொன்னான், “உண்மைதான் எனக்குக் கண் தெரியாது. இருட்டில் நீங்கள் என்மீது விழுந்து விடக் கூடாதல்லவா? அதற்காகத்தான். இது போலவே நாமும் அர்த்தம் தெரியாதபோதும் வேதம் என்னும் ஒளி விளக்கை ஏந்திச் செல்வோம். அதன் பொருள் தெரிந்த மகான்கள் யுகந்தோறும் அவதரித்து நம்மை வழிகாட்டிச் செல்வர்” (பெரியவர் சொன்ன சொற்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இல்லை. நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன்) by.www.danvantarinadi.com.

திங்கள், 19 செப்டம்பர், 2016

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதை






அகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில் அவற்றைக் கோர்த்து தன்னுடைய தோளிலே சுமந்தவாறு தென் திசையை நோக்கிப்புறப்பட்டான்.நீண்ட நடையால் களைப்புற்ற இடும்பன் சிறிதுநேரம் இளைப்பாற எண்ணி காவுதடியை இறக்கிவைத்தான். சற்றுநேரம் இளைப்பாறிய இடும்பன், மீண்டும் புறப்பட ஆய்த்தமாகி காவுதடியை மீண்டும் தூக்கமுயன்றபோது மலைகள் அசையவில்லை. காவுதடியும் மலைகளும் இம்மியளவும் அசையாததால் வெறுப்புற்று நின்றபோது அங்கு ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். இவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணி கோபங்கொண்டு போர் தொடுத்தான் அந்தச் சிறுவனோடு. போரின் இறுதியில் தோற்றுவீழ்ந்தான். இவற்றை அறிந்துகொண்ட அகத்தியர் உடனே விரைந்து வந்தார். வந்து நிற்கின்ற சிறுவன் முருகன் என்று உணர்ந்து வணங்கினார்.அன்று தொட்டு முருகனுக்கு காவுதடி தூக்கும் வழக்கம் உருவாயிற்று. காவுதடி காவடியாகவும் மருவிற்று.

நந்தி



சிலாதர் எனும் சிவனடியார் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்துவதால் வருந்திய இறைவன் பிளைப்பேறுக்கு வரம் அருளினார். அதன் பலனாக எட்டு வயது ஆயுளுடைய நந்தி பிறந்தார். தனது ஆயுளை அறிந்துகொண்ட நந்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்து கயிலைக்கு காவலனாகும் பேறடைந்தார்.உருத்திர கணங்களின் தலைவராகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார். இறைவனே முன்னின்று நடத்தும் திருமணப்பேறையும் பெற்றுக்கொண்டார். அதிகார நந்தி எனும் சிறப்புப்பெயருக்கு உரியவரானார்.
நந்தியின் வகைகள்
ஆகம விதிமுறைக்கமைந்த சிவாலயங்களில் இருக்கக்கூடிய அதிகூடிய நந்திகளின் எண்ணிக்கை ஐந்து என்று முன்னமே கூறியிருந்தேன்.அவைபற்றி இங்கு பார்ப்போம்.போக நந்தி,பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்(விடை)நந்தி,தரும நந்தி என்பனவே அவ்வைந்துமாகும்.

ஒருமுறை போகங்களின் பதியாகிய இந்திரன் சிவபெருமானுக்கு நந்தியாக வந்து வாகனமாக பக்திசெலுத்தினான். அதனால் அந்த நந்தியை போகநந்தி என்பர்.இதனை கோயிலுக்கு வெளியே காணலாம். இது போகங்களைத் துறந்து அதாவது ஆலயத்திற்கு வரும்போது சுக துக்கங்களைத் துறந்து வரும்படி குறித்துநிற்கின்றது.

பிரம்மதேவன் தனது படைக்கும் தொழிலை மேற்கொள்ளமுதல் சிவபெருமானிடம் சென்று உபதேசம் பெற்றார். அப்போது நந்தியாகமாறி இறைவனைத் தாங்கி நின்றார். இதனால் இந்த நந்தியை பிரம்மநந்தி என்பர்.பிரகார மண்டபத்தில் சுதையால் செதுக்கப்பட்டு காணப்படும்.

ஆன்மநந்தி என்பது கொடிமரத்துக்கு அருகில் மூலமூர்த்தியை நோக்கியவாறு காணப்படும். ஆன்மாக்கள் எல்லாவற்றிலும் இறைவனாகிய சிவபெருமான் நிறைந்துயிருப்பதால் ஆன்மாவின் வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதோச காலபூசைக்குரியது.

மால் என்றால் திருமால்.விடை என்றால் நந்தி. திருமால் விடையாகமாறி சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் உருவாயிற்று. திரிபுரங்களையும் எரிக்க சிவபெருமான் புறப்பட்டபோது இடையிலே இறைவனின் தேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அப்போது திருவிளையாடல் நாயகனாகிய சிவபெருமானை கீழேவிழாது தாங்கிட திருமால் நந்தி(விடை)யாக மாறி சிவபெருமானை தாங்கி வாகனமாகி நின்றார். இவ்வாறு திருமால் நந்தியாக மாறிய நந்தியை மால்விடை என்பர். இதனை கொடிமரத்துக்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் காணலாம்.

கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகிலிருப்பது தருமநந்தி என அழைக்கப்படும். ஊழிகால இறுதியில் இறைவனாகிய சிவபெருமானிடத்தில் எல்லாமே ஒடுங்கிவிடும். தர்மத்தைத் தவிர. இந்த தர்மம் நந்தியாகமாறி இறைவனை தாங்கிநிற்கும்.by.www.danvantarinadi.com.

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 42)ஞானம் 1


இது மச்ச முனி வலைப்பூவில் வெளியான கட்டுரையின் மீள்பதிவேயாகும்.இன்று பிரதோஷம் என்பதால் இச் சிறப்புப் பதிவு.

 ஞானம் என்றால் என்ன????(பாகம்1)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.

எனது நண்பர் ஒருவர் (பெயர் மாணிக்கம்) என்னிடம்”நான் பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த பூமியில் நிறைய இன்பங்கள் இருக்கின்றன. அவற்றை அனுபவிக்கவே நான் இங்கே வந்துள்ளேன்.என்னால் தியானம் எல்லாம் செய்ய முடியாது. தியானம் ஏன் செய்ய வேண்டும்” இப்படிக் கேட்டார். 

இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான ஆளை சந்தித்துவிட்டேன் என்று எண்ணினேன். இதற்கு பதிலாக ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தேன்.அவர் மீண்டும் என்னைப் பார்த்து “நீங்கள் இரண்டாம் நிலையில் உள்ளீர்கள்,முதல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்” என்றார்.நான் அதற்கு ஆதிபராசக்தி படத்தில் வருவது போல காளியாத்தா!!! மாரியாத்தா!!! என்று முழு சிரத்தையுடன் சொன்னால் போதும் இறைவனை அடையலாம் என்றேன்.அவருக்கு இது முழு திருப்தி!!!!
இது போதுமா????? போதாது எனில், எது சரி?????.எப்படி இறைவனைக் காணலாம்.அவருடன் அளவளாவலாம்.இறைவன் ஏற்படுத்திய விதிகளை அவரே தளர்த்துவாரா????இறைவனுடன் எப்படிப் பழகலாம்???இறைவனுடன் இறைவனுக்கு வேலைக்காரன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு மகன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகலாமா???? இறைவனுடன் இறைவனுக்கு சீடன் போலப் பழகலாமா???? கேள்விகள் பல???? விடைகள் கீழே கிடைக்கலாம்!!!!!

இந்த பட ஒளிக்காட்சியை காணுங்கள்!!!!


என் நண்பரோ பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.நந்தனாரோ பிறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.அப்படிப் பிறந்தாலும் இறைவா உனை மறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.எது சரி!!!

சரியை மார்க்கம்.(தாசமார்க்கம்)
எளிய நல் தீபம் இடல் மலர்கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே
                         (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று தீபம் இடுதல்,கோவில் நந்தவனத்தில் மலர் கொய்து,மாலையாக கோர்த்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்,கோவிலை தண்ணீர் கொண்டு மெழுகி சுத்தம் செய்தல்,தூர்த்து சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்திப் பாடுதல், மற்றும் உள்ள கோவில் காரியங்கள் அத்தனையும் செய்தல், திருமஞ்சனம்,இறைவனுக்கு வேண்டிய அபிஷேக ஆராதனைக்கு வேண்டியவைகளை செய்து,கோயில் தளிகைக்கான பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்தல்,இறைவனின் அடியார் மற்றும் இறை திருவடிவம் கண்டு பணிதல் ஆகியவை அனைத்தும் சரியை மார்க்கம் ஆகும்.


இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருநாவுக்கரசர். இந்த சரியை மார்க்கத்தை தாச மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு எஜமானனுக்கும் ஒரு வேலைக்காரனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது தாச மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

கிரியை மார்க்கம்.(சற்புத்திர மார்க்கம்)
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
                      (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு பூசனைகள் செய்தல், இறைவன் புகழையும்,அவன் நாமங்களையும், பக்தி கீதங்களையும் வாசித்தல், இறைவனைப் போற்றுதல், மந்திரங்களைச் செபித்தல், குற்றங்களற்ற நல்ல தவம் புரிதல், வாய்மையுடன் இருத்தல், உடலிலும் மனத்திலும் அழுக்கின்றி இருத்தல், மன நேசிப்புடன் தகப்பனுக்கு சோறிட்டு கவனிப்பது போல், கோவில் தளிகையிட்டு இறைவனுக்கு நீர்விளாவி கவனிப்பது ஆகியவை கிரிகை மார்க்கமாகும்.
இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருஞான சம்பந்தர். இந்த கிரியை மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு தகப்பனுக்கும் ஒரு மகனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

அடுத்து இதே தலைப்பில் சித்தர் விஞானம் 43ல் ஞானம் என்றால் என்ன????(பாகம் 2)ல் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம் .