சனி, 3 செப்டம்பர், 2016

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்க‍ங்களும்! – ஒரு பார்வை

 

 

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்க‍ங்களும்! – ஒரு பார்வை
நாம் சிறுவயதில் இருக்கும்போது ராமாயணம் போன்ற இதிகாச கதைக ளையும், பல ஆன்மீக கதைகளையும் நமக்கு
சொல்லி அவற்றில் உள்ள‍ நீதியை நமக்கு எடுத்து ரைப்பார்கள். அதே நேரத்தில் அந்த கதைகளில் சாப ங்களும், அந்த சாபங்கள் யாரால் யாருக்கு வழங்க ப்பட்ட‍து என்பன போன்ற தகவல்களையும் நமக்கு சொல்லியிருப்பார்கள். மேலும் அந்த சாபங்களிலிரு ந்து விடுபட விமோசனம் என்ன‍ என்பதையும் கதை களில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு நமக்கு சொல்லியிருப்பார்கள். அந்த சாபங்கள் எத்த‍னை வகைப்படும் என்பதையும், அவை ஒவ்வொன்றை பற்றிய விளக்க‍ங்களையும் பார்ப்போம்.
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கி றது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பதிமூன்று (13) சாபங்கள் என்னென்ன‍ என்பதை யும், ஒவ்வொன்றைப்பற்றிய விளக்க‍ங்களையும் தற்போது பார்ப் போம்.
1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்
சாபம் சாபங்கள் பல வகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக ப்பார்க்க லாம்

1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவ ரை இழிவாகப் பேசு வதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்க ளை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டிய வர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற் படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டா கும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திரு மணத் தடை ஏற்படும்.
5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத் துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலா ரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந் தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன் றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக் காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற் படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனை யை க் கொடுக்கும்.
8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோ ண்டினாலும் நீர் கிடைக்காது.
9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தைவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களா ல், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவி னர்கள் பிரிந்துவிடுவர்.
11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களை யும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களு க்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்கா மல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்க ளை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்க ள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போ தும் அழிக்கமுடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையா ன மனிதனையும் அழித்துவிடும்.

குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

 

 1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்

மதுரையில் ஒரு குடும்பம். அம்மாவிடம் பக்தி கொண்ட குடும்பம். அந்தக் குடும்பத் தலைவா் 40 வயதில் இறந்து போனார். அவா் மனைவியும் இரண்டு பெண்களும் அம்மாவிடம் வந்து அருள்வாக்கு கேட்டார்கள்.
”உன் கணவன் வம்சத்தில் 40 வயதுக்கு மேல் மூத்தமகன் உயிரோடு இருக்க மாட்டான் மகனே!” என்றாள்.  அம்மா ஏம்மா இப்படி? என்று அழுதார். ”  அப்படி ஒரு சாபம் உண்டு மகளே!”  என்றாள் அம்மா.
ரயில் விபத்து- வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்த பெண் பிணத்தின் கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்றிக் கொண்டு சிலா் ஓடிவிடுகிறார்கள். ஈவிரக்கமற்ற இந்த மனித மிருகங்களுக்கு ஆவிகளின் சாபம் வந்து சேருமாம். அம்மாதான் ஒரு முறை சொன்னார்கள்.
கும்பகோணம் மகாமகத்தின் போது ஒரு முறை கூட்ட நெரிசல் காரணமாகக் குளத்தில் மூழ்கிப் பலா் இறந்து போனார்கள். சில போக்கிரிகள் சில பெண்களைக் கழுத்தை நெருக்கி மூழ்கச் செய்து நகைகளைக் களவாடிக் கொண்டார்களாம். இவா்களுக்கு ஆவிகளின் சாபம் தான் வந்து சேரும்.
அரசாங்கக்
கருவுலத்தில் உள்ள அதிகாரி ஒருவா், அவருக்கு 3 பெண்கள். ஒருத்தி கன்னி கழியாமலே சித்தபிரமை பிடித்து எங்கேயோ ஓடிப்போனாள். அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? என்று இதுவரை தெரியவில்லை. இன்னொரு பெண் வாழா வெட்டியாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள். இன்னொரு பெண் விதவையாக வந்துவிட்டாள். ஏன் இப்படி? ஏன் இந்தக் குடும்பத்துக்கு மட்டும் இப்படி ஒரு சோகம்?
கல்வித்துறையில் ஒரு பெரிய அதிகாரி! அவா் பிள்ளைகளில் ஒருவன் ஊமை, ஒருவன் குருடு, ஒரு பிள்ளை இளம்பிள்ளை வாதத்தால் கைகால் இழந்து முடமாகிப் படுத்த படுக்கையிலேயே இருந்தான். மலசலம் எல்லாம் படுக்கையிலேயே…. அந்தக் குடும்பத்தில் இது நிரந்திர சோகம்!
தமிழ்நாட்டில் அன்றைய நிலையில் வாழ்ந்த கோடீஸ்வரா் ஒருவா். அவா் கோடீஸ்வரரான பின்புலம் என்ன தெரியுமா? அக்கம்பக்கத்தில் இருந்த விதவைப் பெண்கள் தங்கள் சேமிப்புப் பணத்தையெல்லாம் அவரிடம் வட்டிக்குக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த மூலதனத்தை வைத்து வட்டிக்குக் கொடுத்துக் கொழுத்த பணக்காரா் ஆனார். முதுமைப் பருவத்தில் அந்த விதவைகள் கொடுத்த பணத்தைக் கேட்ட போது ஏமாற்றினாராம். சிலரை விஷம் வைத்துச் சாகடித்தார் என்றும் சொல்வார்களாம். கடைசியில் அவருக்கும் மதுமை வந்தது.  புத்தி பேதலித்தது.  தன் மலத்தில் தானே புரண்டு கிடந்தார். இந்தச் சனியன் எப்போது மண்டையைப் போடுமோ? என்று அவா் குடும்பத்தார் காத்துக் கிடந்தனா்.  அவரைக் கவனித்துப் பணிவிடை செய்ய நாதியில்லை….
சினிமா தயாரிப்பாளா் ஒருவா், அரசியல் செல்வாக்கு, சினிமாவில் செல்வாக்குப் படைத்தவா். அங்கங்கே கடன் வாங்கிப் படம் எடுத்துக் கோடி கோடியாகச் சம்பாதித்தார். வங்கியில் கடன் வாங்கினார். திருப்பிச் செலுத்தாமல் தள்ளிப்
போட்டார். வங்கி அதிகாரிகள் கேஸ் போடுவோம் என்றார்கள். போட்டுக்கோ.. என்றார். கேஸ் போட்டால் என்ன… மூன்று நான்கு வருடங்கள் இழுத்தடிப்போம். அதற்குள் அங்கங்கே பணம் புரட்டி (Rotation) தொழில் செய்து மேலும் பணம் அள்ளலாம் என்று நெருக்கமானவா்களிடம் சொல்வாராம்.
சில படங்கள் தோல்வி. கையில் ஒரு காசுமில்லை.  கடன் கொடுப்பார் யாருமில்லை.  சொத்துக்கள் இருந்தன.  விற்றுவிட்டால் இதை மறுபடியும் வாங்க முடியுமா? இந்த நிலையில் கந்து வட்டிக்காரா்களிடம் வஞ்சம் புகுந்தார். அவா்களோ மீட்டா் வட்டி வாங்கும் புண்ணியவான்கள். கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கந்து வட்டிக்காரன் கழுத்தை நெரித்தான். கடைசியில் தற்கொலையில் முடிந்து போனாராம்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்றார் வள்ளுவா். சில சினிமா பிரபலங்களின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டு.
நாகா் கோயிலைச் சோ்ந்த பெண்மணி ஒருவா் அவருக்கு ஒரே ஒரு பையன். நல்ல புத்திசாலி. அம்சமாக அழகாக இருப்பானாம். பொத்திப் பொத்தி வளா்த்தார்களாம். ஒரு விபத்தில் சிக்கிச் செத்துப் போனானாம். பாவம் அந்தப் பெண்மணி! நிலைகுலைந்து போனார். அவரால் அந்தச் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன அமைதி தேடி கோயில் கோயிலாகப் போனார். அமைதிதான் கிட்டவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று காரணம் புரியாமல் தவித்தார். தத்தளித்தார்.
ஒரு நாடி சோதிடரிடம் சென்றாராம். அவா் சொன்னாராம், போன பிறவியில் இவள் ஒரு மருத்துவராக இருந்தாள். ஏழைப் பிராமணன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வைத்தியத்துக்கு வந்தான். இவள் கேட்ட தொகையை அவனால் கொடுக்க முடியவில்லை. பணத்தை வைத்தால்தான் வைத்தியம் என்றாள். ஈவிரக்கமே இல்லாமல் நடந்து
கொண்டாள். பாவம் அந்தப் பிராமணன். குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறுநாள் குழந்தை செத்துப் போய்விட்டது.! அப்போது அவன் இட்ட சாபம்! இந்தப் பிறவியில் பிள்ளையை பறிகொடுக்க வேண்டியதாயிற்று….
எத்தனை டாக்டா்கள் இதைப் படித்துப் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்? ஊழ்வினை என்றால் என்ன? அது எப்படி வருகிறது? அதன் வகைகள் என்ன? என்பதெல்லாம் இன்றைய பாடத்திட்டங்களில் இல்லையே… இன்றைய உலகில் உள்ள பாவங்கள் ஏழு! என்கிறார் காந்தியடிகள்.
ஒழுக்கம் இல்லாத கல்வி! அவற்றுள் ஒன்று!
சாபங்கள் சக்தி! வாய்ந்தவை.! அவை பலிக்கும்! அடுத்தவன் வயிறெரிந்து சாபமிட்டால் அது நம்மைப் பாதிக்கும் என்பதை இன்றைய தலைமுறை பலா் நம்பவில்லை.
ஒரு பிரச்சனை வந்து நெருக்கும்போது தான் படித்தவா் யோசிக்கிறார்! விடை காணாமல் தவிக்கிறார்.. சோதிடா்களை நாடி ஓடுகிறார்.
இப்போது பாருங்கள்! பெட்டிக் கடைகளில் எத்தனை எத்தனை சோதிடப் பத்திரிகைகள்! வாரந்தோறும் பத்திரிகைகள் ராசி பலன்களை வெளியிடுகின்றன. ஆன்மிக மலா்கள் என்று ஒரு இணைப்பு சோ்த்து வெளியிடுகின்றன. டி.வி.க்களில் தினமும் ராசி பலன்கள்! பரிகாரம் தேடிப் படித்த கூட்டம் கோயில்களை மொய்ப்பதைப் பார்க்கிறோம்.
”இருமுடிக்குப் பலன் கொடுத்துவிட்டு அப்படியாவது திருந்துவானா என்று பார்க்கிறேன். எவனும் திருந்தவில்லை.” என்று அன்னை வேதனையோடு சொல்கிறாள்.
குடும்ப அழுக்கு
அம்மாவிடம் வந்து சோ்ந்த 35 வருடங்களில் ஆன்மிகம் சம்பந்தமான சில உண்மைகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. தேவரகசியங்கள் எனச் சில உண்டு என்பது தெரிந்தது. ஏவல், பில்லி, சூனியம் எல்லாம் உண்டு என்று தெரிந்தது.
கருமச் சட்டத்தின் வலிமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு காரணங்களால் குடும்பங்கள் அல்லல் படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சாபங்களுக்குச் சக்தி உண்டா? சாபங்கள் பலிக்குமா? சாபங்களுக்கு சக்தி உண்டு என்றும், சாபங்கள் பலிக்கும் என்று அம்மா மூலமாகவும், பக்தா்கள் சொன்ன அனுபவங்கள் மூலமாகவும் நான் தெரிந்து கொள்ள முடிந்தது. சக்தி ஒளியில் சாபம் பலிக்குமா? என்ற தொடா் கட்டுரை எழுத முடிந்தது.  
அண்மையில் ராணி வாரப் பத்திரிகை (03.10.2010)யில் ஒரு சோதிடா் ‘மண்ணில் உலவும் மா்மங்கள்‘ என்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் சாபங்கள் பற்றி எழுதியிருந்தார்.
பெண் சாபம்
பெண் சாபம் ஏற்பட்டால் வம்ச நாசம் ஏற்படுமாம். பெண்ணை ஏமாற்றுதல், சகோதரி போன்றவா்களை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியைக் கைவிடுவது ஆகியவற்றால் ஏற்படுவதாம்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, பிணத்தை தாண்டுவது, பிணத்தின் இறுதிக் காரியங்களைச் செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவா்களை முக்கியமானவா்கள் பார்க்கவிடாமல் செய்வது இவற்றால் பிரேத சாபம் வருமாம்.
பிரம்ம சாபம்
பிரம்ம சாபத்தால் படிப்பு இல்லாமல் போகுமாம் நமக்கு வித்தை கற்றுக் கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாகப் பயன்படுத்துவது, மற்றவா்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது இவ்வாறான காரணங்களால் பிரம்ம சாபம் ஏற்படுமாம்.
சா்ப்ப சாபம்
சா்ப்ப சாபத்தால் திருமணத்தடை, செவ்வாய் தோஷம், ராகு-கேது, கால சா்ப்ப தோஷங்கள் ஏற்படுமாம். பாம்புகளைத் தேவையின்றிக் கொல்வதாலும்,
அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சா்ப்ப சாபம் உண்டாகும்.
பிதிர் சாபம்
பித்ரு சாபத்தால் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, பாலாரிஷ்ட தோஷத்தால் குழந்தைகள் இறந்து போவது நிகழுமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கா்மங்களைச் செய்யாமல் மறப்பது, தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோர்களை உதாசீனப்படுத்துவது, அவா்களை ஒதுக்கி வைப்பது போன்ற காரணங்களால் பிதிர் சாபம் ஏற்படுமாம்.
கோ சாபம்
கோ சாபம் என்பது பசுவின் சாபம். அதனால் வளா்ச்சி இல்லாமல் போகும்.  பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீா் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
பூமி சாபம்
பூமி சாபத்தால் நரக வேதனை அடைய வேண்டி வருமாம். ஆத்திரத்தில் பூமியைச் சதா காலால் உதைப்பது, பாழ்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவது, அடுத்தவா் பூமியைப் பறிப்பது போன்றவற்றால் பூமி சாபம் ஏற்படுமாம்.
கங்கா சாபம்
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீா் கிடைக்காது. சந்ததிகள் தண்ணீா் சம்பந்தமான நோயால் அவதிப்படுவார்களாம். பலா் அருந்தக் கூடிய நீரைப் பாழ் செய்வதும். ஓடும் நதியை அசுத்தம் செய்வதும் கங்கா சாபத்தை ஏற்படுத்துமாம்.
விருட்ச சாபம்
விருட்ச சாபம் (மரங்களின் சாபம்) இதனால் கடன், நோய், காயம் ஏற்படுமாம். பச்சை மரத்தை வெட்டுவது, பழம் தரும் மரத்தைப் பட்டுப் போகச் செய்வது, மரத்தை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவது இவற்றால் விருட்ச
சாபம் ஏற்படுமாம்.
ஒரு செடியிலிருந்து இலை பறிக்கவும், கிளை வெட்டவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சித்தா்கள் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி சாந்தப்படுத்தி விட்டே அவற்றைச் செய்வார்களாம்.
சில மரங்களை வெட்டும் போது அதில் குடியிருக்கும் நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள் வெளியேற வேண்டி இருக்கும். அவை சாபம் கொடுக்குமாம். இதற்கு மேல் இவற்றை விளக்க இங்கே இடமில்லை.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது, திருவிழாக் காலங்களில் தெய்வ ஊா்வலங்களின் போது கலவரம், சாதிச் சண்டை ஏற்படுவது இவற்றால் தெய்வ சாபம் ஏற்படும்.
ரிஷி சாபம்
கலியுகத்தில் ஆசாரிய புருஷா்களை அவமதிப்பது, உண்மையான பக்தா்களை அவமதிப்பது, ரிஷிகளின் விக்கிரகங்களை அவமதிப்பது
என்பன ரிஷி சாபத்தில் அடங்கும்.
முனி சாபம்
எல்லைத் தெய்வங்கள், சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் மறப்பது முனி சாபத்துக்கு ஆளாகும்.
தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம் இவற்றால் உறவினா்கள் பிரிந்து செல்லுதல், வம்ச அழிவு, செய்வினைக் கோளாறு போன்றவை நிகழுமாம்.
குல தெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூசித்த குல தெய்வங்களைப் பூசிக்காமல் மறப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.
இவைகள் எல்லாம் நமக்குத் தெரிய வரும் போது ஒவ்வொரு குடும்பமும் மேற்கண்ட சாபங்களில் ஏதாவது ஒரு சாபத்துக்கு ஆட்பட்டிருக்கும் என்றே அறிய முடிகிறது. நிச்சயம் இருக்கும் என்றே நம்பிக்கை உண்டாகிறது.
எனவே உண்மை உணா்வுடன் விரதம் இருந்து சுயக்
கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பயபக்தியோடும், சிரத்தையோடும் இருமுடி செலுத்துங்கள்! அதன் பலனை அனுபவத்தில் உணா்வீா்கள்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

                     நந்தினி விரதம் (கோவத்ஸ பூஜை)  

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் 
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய

 
 
(ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை)
'கோமாதா' என்று தாய்க்குச் சமமாகப் போற்றப்படும் பசுக்களின் சிறப்பு வார்த்தைகளில் அடங்குவதில்லை. சாத்வீகத் தன்மைக்கு உதாரணமாகப் போற்றப்படும் பசு, மனிதர் பெறவேண்டிய செல்வங்களுள் முக்கியமான ஒன்று. அக்காலத்தில், அதிகப் பசுக்களை வைத்திருப்பவர், பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். 'மாடு' என்றாலே செல்வம் என்றும் பொருள். வேள்விகள், ஹோமங்கள் நடக்கும் முன்பாக, கோபூஜை செய்து துவங்குவது நம் சம்பிரதாயம். திருக்கோவில்களில், விடியலில், திருவனந்தல் தரிசனத்தின் போது, இறைவனின் திருமுன், பசுவையும் கன்றையும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்த பின்பே, சேவார்த்திகள் இறைவனை  தரிசிக்கின்றனர். இறைவனே, கோமாதாவின் திருமுகத்தில் விழிப்பதாக ஐதீகம்.
கன்றோடு சேர்ந்த பசு, சுபசகுனங்களில் ஒன்று. கோசாலை, ஆலயத்திற்கு சமமான பெருமை வாய்ந்தது. கோசாலையில் செய்யப்படும் யாகங்கள், ஹோமங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பசுவை, யார் ஆராதிக்கிறார்களோ, அவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளையும் பெறுகிறார்கள். பசுவிற்கு 'அக்னிஹோத்ரி' என்றும் பெயர் உண்டு. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், அக்னியை எப்படி, சிறிதும் சோர்வின்றி ரட்சிக்க வேண்டுமோ, அப்படியே, பசுவையும் ரட்சிக்க வேண்டும்.
பசுவிற்கு ஒரு பிடி அகத்திக்கீரை தருபவன், எண்ணற்ற யாகங்களைச் செய்த புண்ணியப் பலனை அடைகிறான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பசுவுக்கு தினமும் ஒரு பிடி புல் தருபவர், மரணத்திற்குப் பின் கட்டாயம் சொர்க்க வாசம் அடைகிறார். தாய்ப்பால் கிடைக்க இயலாத குழந்தைகளுக்கு, பசுவின் பாலே தரப்படுகின்றது. பஞ்சகவ்யம் எனப் போற்றப்படும், பசுஞ்சாணம், பால், தயிர், நெய், கோமியம் ஆகியவை தெளித்தே, யாகசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பசுவின் சாணமும், கோமியமும், சிறந்த கிருமி நாசினிகள். கிருச்ச விரதம் முதலான விரதங்கள் எடுக்கும் முன்பாக, பஞ்சகவ்யம் கட்டாயம் அருந்த வேண்டும்.
பசுஞ்சாணத்தில் ஸ்ரீலக்ஷ்மியும், கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, அக்காலத்தில், விடியலில், சாணம் கரைத்த நீரைத் தெளித்து வீடு வாசலை மெழுகித் தூய்மை செய்தார்கள். சாணம் கிருமிநாசினியாதலால், பூச்சிகள் வீட்டினுள் சேராமல் தடுக்கும். பசுஞ்சாணத்தால் தட்டிய வரட்டிகளையே, ஹோமங்களில் உபயோகிப்பது வழக்கம். மிக நுண்ணிய மந்திர ஒலிகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது பசுவரட்டி.

பசுவின் உடலில், எண்ணற்ற தேவதைகள் வாசம் செய்கின்றனர். பசுவின், முகத்தின் மத்தியில் சிவனாரும், வல, இடக் கண்களில் முறையே சூரிய சந்திரரும், வலப்புற நாசியில், முருகனும், இடப்புற நாசியில், கணபதியும், காதுகளில் அஸ்வினி தேவர்களும், கழுத்தின் மேல்புறம் ராகுவும், கீழ்ப்புறம் கேதுவும், கொண்டைப்பகுதியில் பிரம்மாவும், முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதியும் விஷ்ணுவும், முன்வலக்காலில் பைரவரும், முன் இடக்காலில், ஹனுமனும், பின்கால்களில் முறையே, பராசரர், விஸ்வாமித்திரரும், பின்கால்களின் மேற்புறம், நாரதரும் வசிஷ்டரும், பிருஷ்ட பாகத்தின் கீழ்ப்புறம் கங்கையும், மேற்புறம் ஸ்ரீலக்ஷ்மியும், முதுகுப்புறம், குபேரர், வருணன், அக்னி, பரத்வாஜர் ஆகியோரும், வயிற்றுப் பகுதியில் சனகாதியரும் பூமாதேவியும், வாலின் மேல், கீழ்ப்பகுதியில் முறையே, நாகராஜரும், ஸ்ரீமானாரும், வல, இடக் கொம்புகளில், வீமன், இந்திரனும், நான்கு குளம்புகளிலும், விந்திய மலை, இமயமலை, மந்திர மலை, த்ரோணமலை முதலியவையும், பால்மடியில், அமுதக்கடலும் வாசம் செய்கின்றன.
ஆகவே, பசுவை வணங்கினால், எல்லாத் தேவர்களையும் தொழுத பலன் கிடைக்கும்.  தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, நந்தா, சுரபி(காமதேனு), பத்திரை, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன். இவற்றின் சந்ததியரே, இப்பூவுலகில் நாம் காணும் பசுக்கள் என்று புராணம் கூறுகிறது. இவை, இன்றளவும் கோலோகத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். தானங்களில் கோதானம் மிக முக்கிய இடம் பெறுகிறது. மகாபாபிகளும், பஞ்சகவியம் அருந்தி ஒரு வேளை உபவாசமிருந்தால், அவர் செய்த பாவம் நசியும் என்று அக்னி புராணம் கூறுகிறது.
பசுவின் கால் தூசியில், மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். மாடுகள், மேய்ச்சல் முடிந்து திரும்பும் சமயம்'கோதூளிகா வேளை' என்று போற்றப்படுகிறது. அந்தச் சமயமே, அனைத்து இல்லங்களுக்கும் தேவி எழுந்தருள்கிறாள். ஆகவே, அந்த நேரம் தவறாது விளக்கேற்ற வேண்டும். மாலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை கோதூளிகா வேளையில் துவங்குவது சிறந்தது.
 
 
இத்தகைய மகிமை பொருந்திய பசுக்களை போற்றும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, ஐப்பசி கிருஷ்ணபட்ச துவாதசியில் கடைப்பிடிக்கப்படும், நந்தினி விரதம் எனப்படும் கோவத்ஸ பூஜை. இம்மாதம், 11/11/2012ல் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இந்த விரதம் தோன்றக் காரணமான புராணக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது, விஷ்ணு புராணத்தில், பிருதுசக்கரவர்த்தியின் சரிதமாகக் கூறப்படுகின்றது.
வானத்தில் வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் துருவ சக்கரவர்த்தியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. தான் செய்த அருந்த்வத்தின் பயனால், ஸ்ரீமந் நாராயணினின் அருளைப் பெற்று, உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்ற பெயருடைய மங்கையை திருமணம் செய்து கொண்டான். அவனுடைய சந்ததியில், அங்கன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு வெகு காலமாக வாரிசு இல்லை. அவன் பட்டமகிஷி, மிருத்துவின் புதல்வியாகிய, சுருதை என்பவள். அங்கன், ரிஷிகளின் ஆலோசனைப்படி, புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அதன் பலனாக, அவனுக்கு வேனன் என்ற ஒரு பிள்ளை பிறந்தான். அவன், தன் பாட்டனாராகிய மிருத்துவின் குண விசேஷத்தைக் கொண்டிருந்தான். கொடுங்கோலனாகவும், யாகங்கள், ஓமங்கள் முதலியவற்றைச் செய்வதைத் தடுப்பவனாகவும் இருந்தான். தானங்கள் கொடுப்பதையும் தடுத்து, 'தானே, யக்ஞங்களாலும், பிறவற்றாலும் தொழப்படவேண்டியவன்' என்று  நாடு முழுவதும் பறையறிவித்தான்.
ரிஷிகளும், முனிவர்களும், இவ்வாறெல்லாம் செய்வது தவறு, என்று எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அவனது செய்கைகளால், கோபமே வராத முனிவர்களுக்கும் கோபம் வந்தது. அவர்கள், தங்கள் கையிலுள்ள, தர்ப்பைப் புல்லால் அவனை அடித்தார்கள். அவன் எரிந்து, இறந்து கீழே விழுந்தான். உடனே, எங்கும் தூசியும் தும்புமாக நாற்திசைகளிலும் பறந்து வியாபித்தது. இதைக் கண்ட ரிஷிகள், அங்கிருந்த மக்களிடம் வினவ, அவர்கள், "ரிஷிகளாகிய நீங்கள், உங்கள் சுபாவத்தைக் கைவிட்டதாலேயே இவ்வாறு நேர்ந்தது" என்று கூறினார்கள்.
இந்த பெரும் சங்கடத்தை நீக்க, ரிஷிகள் எல்லோரும் கலந்து ஆலோசித்து, உடனே ஒரு புத்திரனை வேனனுக்கு உண்டாகுமாறு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காக, எரிந்த வேனனுடைய உடலின் தொடையைக் கடைந்தனர். அப்போது, அவன் பாவ குணங்களெல்லாம் உருவெடுத்து, கறுப்பாக, விகாரமாக‌ ஒரு உருவம் தோன்றியது. அவனே 'பகுகா' என்ற பெயருடைய வேனனின் புதல்வன். அவனை, ரிஷிகள், 'நீஷீத' (அமர்) என்று சொன்னார்கள். அதனால், 'நிஷாதன்' என்பதும் அவன் பெயாராயிற்று. அவன் குலம் நாட்டுக்கு வெளியே, மலை, வனாந்தரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அவன் சந்ததியினரே, நிஷாத இனத்தவரான, விந்திய மலை வேடர்கள்.
அதன் பிறகு, ஒரு நற்புத்திரனை உண்டாக்கும் விதமாக, வேனனுடைய, வலது கையைக் கடைந்தனர் ரிஷிகள். அதிலிருந்து, தேஜோமயமாக, அக்னியைப் போன்று ஜொலிக்கும் ரூபத்துடன், பிருது மாமன்னன் தோன்றினான். அவன் தோன்றிய உடனேயே, வானத்திலிருந்து, அசகவம் என்ற வில்லும் திவ்யமான பாணங்களும் அவன் கையில் சேர்ந்தன. எல்லா புனித நதிகளும், சமுத்திரங்களும், தத்தம் புனித நீரினால், பிருதுமன்னனை அபிஷேகித்து, திவ்ய ரத்தினங்களைக் கொடுத்து வணங்கி நின்றன. பிருது மன்னனின், வலக்கரத்தில் சக்ர ரேகை இருந்ததால், அவர், ஸ்ரீமந் நாராயணனின் அம்சம் என்று அனைவரும் மகிழ்ந்தனர்.
அப்போது வேனனுடைய இடது கரத்திலிருந்து, தீப்பிழம்பாக, ஸ்ரீலக்ஷ்மியின் அம்சத்துடன், ஒரு பெண் தோன்றினாள்.  அவளுக்கு 'அர்ச்சி' என்று பெயரிடப்பட்டது.
 
 
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.
பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.
அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.
பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.
தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.
 
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.
பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.
அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.
பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.
தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.

இதனால், பிருதுவின்  பத்தினி, பூமாதேவி என்று கூறுகிறது மனுஸ்மிருதி. பூமிக்கு இதனாலேயே, பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நிகழ்வை ஒட்டியே, கோவத்ஸபூஜை நடத்தப்படுகிறது.
பூஜை செய்யும் முறை:
இதை முக்கியமாக, வடஇந்தியர்கள், குஜராத்தியர் செய்கிறார்கள். குழந்தைகள் சுகமாக இருக்கவும், சந்ததி பெருகவும், இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், முழு உபவாசமிருந்து, கன்றுடன் கூடிய பசுவை நீராட்டி, அலங்கரிக்கிறார்கள்.
அதற்கு, பூஜை செய்து, பயத்தம் பருப்பினால் செய்யப்பட்ட பண்டங்கள், முளைவிட்ட பாசிப்பயறு முதலியவை அளிக்கிறார்கள். பின், தம் குலம் தழைக்க வேண்டுதல் செய்து, பசுவை வலம் வந்து நமஸ்கரிக்கிறார்கள். அன்று முழுவதும், பால், தயிர், நெய் முதலிய பால் பொருட்களை உண்பதைத் தவிர்க்கிறார்கள்.
கோபூஜையின் போது சொல்ல வேண்டிய, வேண்டுவனவற்றை எல்லாம் தரும், காமதேனுவாகிய சுரபியைத் துதிக்கும், கவாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும். இதை சாதாரண நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.
நாமும், ஐப்பசி கிருஷ்ண பக்ஷ  துவாதசியன்று, கன்றுடன் கூடிய கோமாதாவைப் பூஜித்து, விருப்பங்கள் நிறைவேறப்பெற்று,
வெற்றி பெறுவோம்!!!!!!

சனி, 11 ஜூன், 2016

நாடி ஜோதிடம்
நாடி ஜோதிடம் ஒரு பழங்கால விஞ்ஞானம் ஆகும். இதைப் பற்றி யாஹூ-அகத்தியர் குழுமத்தில் மருத்துவர் ஜெ.பி. அய்யா அவர்கள் எழுதிய ஒரு தொடரை உங்களுக்காக வழங்குகிறேன். இதில் படியெடுத்து ஒட்டியதைத் தவிர என்னுடைய வேலை ஒன்றுமில்லை. அனைத்தும் மருத்துவர் அய்யாவையே சாரும். "நாடி ஜோதிடம்" "இதயம்" இரு வார இதழ் - 1992 ஆசிரியர் M.துரைராஜ் மலேசியா இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரி கால ஞானிகள்" என்றுஅழைப்பர். இவர்களில் பலர் முனிவர்களாகவும்,ரிஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக்கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச்சென்றனர். அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு. அதன் பெயர் "நாடி சாஸ்திரம்" அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர். ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும்வாழ்க்கைநிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர்,பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டுஅந்த ஏடுகளில் காணப்படும். தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தாரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை. "கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகு ஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது. நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள். தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள்சிதறிக் கிடக்கின்றன.அவற்றில் பல அழிந்துவிட்டன.மேலும் பல மறைந்துபோயின.தற்சயம் மிகவும் பிரபலமானவை காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிகநாடியும்தான். வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது. இப்போது சிறிது "Theory" (Want to skip?) பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும். ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச்சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும்முறையை ஒரு பாடல் கூறுகிறது: "பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை. (மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே? என்றெல்லாம்என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை). காம்பைச்சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி,அவ்வெண்ணிக்கையை ஆற்றால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கை. இப்போது ஒரு சந்தேகம். சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள்தோன்றினவா? அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா? விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில்இயங்குகின்றனவா? காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள்அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப்பட்டுவிட்டனவா? மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு.கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது. துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக்கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன. நிகழ்ச்சிகளின் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சரி¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன. மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம்நிகழவேண்டியது; தவிர்க்கமுடியாதது; வேறு வழியில்லை. "அவனுடைய இறப்பு எனப்படும் கட்டாயம்,நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள்தோன்றின", என்று வைத்துக்கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம். கொடியசைந்தும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகா¢ல் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது.தலைமை குருக்கள் மஹா பரி நிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக்கொண்டிருந்த கொடியன்று அசைந்தது. அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது.அதன் தாடர்பாகவாக்குவாதமும், அதன் விளைவாகப் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன. இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும் நியதியும்,கட்டுக்கோப்பும்விளங்குகின்றன.இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன. இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும். காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தெரிந்திருக்கின்றன. இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும்.அதிலும்யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும். இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச்செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு. ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது. காலதத்துவத்தின் ரகசியங்களையும் "CosmicOrder" எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும் நூல்களில் நாடி சாஸ்திரமும் அடங்கும். நாடி ஜோதிடத்தில் கெளசிகம்,அகத்தியம்,சப்தரிஷி என்றெல்லாம் பெயர்கள் கொண்ட பல பிரிவுகள் உள்ளன என்று ஏற்கனவே கூறியுள்ளேன். இவற்றுள் கெளசிகம், அகத்தியம் போன்றநாடி நூல்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகைகளை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.ஆனால் சப்தரிஷி நாடியிலோ குறிப்பிட்டநபரின் ஜனன ஜாதகத்தில் கண்டுள்ள ஜன்ம லக்கினத்தையும் மற்ற கிரகங்கள் நின்ற நிலைகளையுமே எடுத்துக் கொள்கிறார்கள் இவற்றின் அடிப்படையில் அவரவருக்குரிய நாடி நூல்களை எப்படித்தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதைப்பிறகு சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கேள்விக்கு பதில் கூறிவிடுகிறேனே! ஒருவருக்கான நாடி நூல் இன்னொருவருக்குப்பொருந்த முடியுமா? மனிதர்களின் கை ரேகைகளில் பல வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.எத்தனையோ வகையான ரேகை அமைப்புகளில் குறிப்பிட்ட சில ரேகைஅமைப்புகளை மட்டுமே நாடி சாஸ்திரத்துக்கு உரியதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த சிறப்பு ரேகை அமைப்புகள் பதினொன்று இருக்கின்றன. இவற்றை வைத்துத்தான் ஒரு குறிப்பிட்டநபருக்குரிய நாடி ஜோதிட ஏடு தேடப்படும். கோபுராங்கி,தனயோகம், புவிச்சக்கரம், சங்கு, தாமரை, போன்ற பெயர்களைஅவ்வமைப்புகள் கொண்டிருக்கின்றன. இந்த 11 வகையான ரேகை அமைப்புகளும் எந்த விதமான வரிசையில் அமைந்துள்ளன என்று பார்ப்பார்கள். உதாரணமாக இவை, தனயோகம், சங்கு- தாமரை - புவிச்சக்கரம்- என்றவாறோ, சங்கு- தாமரை- தனயோகம்- புவிச்சக்கரம் என்றவாறோ,கோபுராங்கி- சங்கு- தாமரை-புவிச்சக்கரம்- தனயோகம் என்றவாறோ, பல வகைகளில் வரிசையாக அமைய முடியும். இந்தத் தொடர்கள் வெவ்வேறு முறைகளில் ஒவ்வொருவருக்கும் அமைந்தி ருக்கும். இந்த இடத்தில் கணித சாஸ்திரத்தில்காணப்படும் சில விதிகளைப் பற்றி உங்களிடம் கட்டாயம் கூறியாக வேண்டியிருக்கிறது. கணித சாஸ்திரத்தில் "Permutation and Combination"என்றொரு விதியுண்டு. இரண்டு எண்களை நான்கு விதமாக இரண்டிரண்டாக வா¢சைப்படுத்தலாம். 1,2 என்னும் இரண்டு எண்களை எடுத்துக்கொள்வோம். 1,2; 2,1; 2,2; 1,1 என்றவாறு நான்கு வகைகளில் இவை அமையும். மூன்று எண்களோ 3X3X3 =27 வகைகளில் அமையும். இப்போது 1,2,3யை எடுத்துக்கொள்வோம். 1,1,1; 1,1,2; 1,1,3; 1,2,1; 1,2,2; 1,2,3; 1,3,1; 1,3,2; 1,3,3.....etc.., etc., என்றவாறு 3,3,3, வரை 27 வகைகளில் அமையும். நான்கு எண்களோ 4X4X4X4=256 வகைகளில் அமையும். இம்முறைக்கு தமிழ் மந்திர சாஸ்த்ரத்தில் "மாறல்" என்று பெயர். பஞ்சாட்சர மாறல், சடாட்சர மாறல் என்றெல்லாம் சில மந்திர அமைப்புகள்இருக்கின்றன. தமிழ் இலக்கண விதிகளில் கூட இந்தPermutation/Combination பயன்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் செய்யுளியலில் 357, 406, ஆகிய பாடல்களில் பார்த்தீர்களானால் தொல்காப்பியரேகூட இதைக் கையாண்டிருப்பது தெரியும். நமது இந்திய சாஸ்திரிய சங்கீதத்திலும் கூட Permtation/Combination அமைந்துள்ளது. ராகங்களில் ஆரோகண அவரோகணக் கிரமத்தில் அமைந்துள்ள ஸ்வர வரிசைகளை கற்பனையைப் பயன்படுத்தி Permutation/Combination விதியின்படி விரிவாக்கிக்கொண்டே போகலாம்.ஒரே ராகத்தை மணிக்கணக்கில் பெரிய வித்வான்கள் விஸ்தாரமாகப் பாட முடிகிறது அல்லவா? வேதங்களை ஓதும் முறைகள் சில இருக்கின்றன. அவற்றைப் "பாடங்கள்" என்று கூறுவார்கள்.சிகா பாடம், ஜடாப்பாடம், கனப்பாடம்,முதலிய எட்டுவகைகள் இருக்கின்றன."அஷ்ட விக்ருதிகள்" என்று இவற்றைக் கூறுவார்கள். இந்த மாதிரி ஓதும் முறைகளிலும் கூட Permutation/Combination தான் அமைந்திருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? மனிதர்களிடையே காணப்படும் அந்த பதினோரு வகையான ரேகை அமைப்புகளைPermutation/Combinationபடி 11X11X11X11X11X11X11X11X11X11X11 = 285,311,670,611 வெவ்வேறு வரிசைகளாக ஏற்படுத்தமுடியும். Theoretically, இந்த உலகின் ஜனத்தொகை இந்த எண்ணிக்கையை மீறும்போதுதான் ஒரே மாதிரியான ரேகை வரிசைகள் கொண்ட இரண்டு பேர் இருக்க முடியும். அப்பொதுதான் கலி முற்றும். பூபாரம் அதிகரித்துவிடும். 28531 கோடியை ஜனத்தொகை எட்டும்வரைகாத்திருந்து பார்ப்போமே? Cloning முறையால் ஏற்படுத்தப்படும் மனிதப்பிரதிகளுக்கு(அச்சுபிழையல்ல) ஒரே மாதியான ரேகை அமைப்புகள் இருக்குமா? "Theoretically possible", பல்கேரியப் பேராசிரியர் லிர்ப்பா லூ·ப் சொல்கிறார். அந்த அளவுக்கு மனித இனம் தன்னையே செயற்கையாகப் படைத்துகொள்ள முடியும்போது கலி முற்றியதாகத்தானே அர்த்தம்? இதுவும் பண்டைய சாஸ்திரங்களில் சொல்லப்படுவதுதானே? இந்த இடத்தில் கொஞ்சம் diversion. உலகில்வியாபகமாகத் தமிழர்கள் பரவி விட்டதால் மற்றவர்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே? Permutation/Combination விதியைத் தன்னகத்தே கொண்ட மற்றொரு சாஸ்திரம்" யீத்சிங்" Iching ;சீன தேசத்துச் சோதிடம். "யீ" என்றால் மாறுதல். "சிங்" என்றால் நூல். அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை முன்கூட்டியே அறிவிப்பது இந்நூல். யீச்சிங்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை நடப்புகளைஅறியலாம். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்குரிய ஆலோசனைகளையும் இந்நூலின் மூலம் பெறலாம். New York Stock Exchange இல் இந்த முறையே பிரபலமாயிருக்கிறது. ஒரு நாடு அல்லது சமுதாயத்தின் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ளலாம். உலகின் நடப்பையும் தொ¢ந்துகொள்ளலாம். பண்டைய சீன ஞானிகளும் இதையெல்லாம்அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களிடம்கூட தமிழ் நாடி சாஸ்திரநூல்களுக்கு இணையானவை கிடையாது. யீத்சிங்கில் Permutation மட்டுமல்லாது BinarySystemமும் இருக்கிறது. இந்திய ஜோதிடத்தில் புலமை வாய்ந்தவர்கள் யீத்சிங் போன்ற முறைகளையும்ஆராயவேண்டும். தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கும் நாடி நூல்களில் வைத்தீஸ்வரன் கோயில்,திருவானைக்கா முதலிய ஏடுகளே முக்கியமானவை. குன்றக்குடியிலும் ஏடுகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட நபரின் நாடி ஏடுகள் யாரிடம் இருக்கின்றன என்பதைத் தேடித்தான் கண்டுபிடிக்க முடியும். பலருக்குக் கிடைக்கமாட்டா. சிலருக்கு மட்டுமே அதிகத் தேடல் இல்லமலேயே கிடைக்கும். ஏடுகளைக் கண்டு பிடிக்கச் சில முறைகள்இருக்கின்றன. சப்தரிஷி நாடிக்கு ஜனன லக்னமே அடிப்படை. கெளசிகம், மச்சேந்திரம், முதலிய ஏடுகளில் கைரேகைகளைப் பயன்படுத்துகிறார்கள். குன்றக்குடி முறையை விளக்குகிறேன். ஏடு பார்க்க விரும்பும் நபர், ஜோதிடரை சந்திக்கும் நேரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விநாயகர் வழிபாட்டுடன் ஜோதிடர்,நபா¢ன் கை ரேகை அமைப்புகளை வரிசைக் கிரமமாகக் குறித்துக்கொள்வார். இவ்வாறு பதினோரு வகையான ரேகை அமைப்புகளையும் குறித்துக்கொண்ட பின்னர் ஏடு தேடல் ஆரம்பமாகும். உதாரணமாக முதலாவது ரேகை அமைப்பு கோபுராங்கியாகவும், இரண்டாவது தனயோகமாகவும், மூன்றாவது புவிச்சக்கரமாகவும், நான்காவது சங்கு, ஐந்தாவது தாமரை என்றும் வைத்துக் கொள்வோம். முதலமைப்பு கோபுராங்கியாக உள்ளசுவடிக்கட்டுகளிலிருந்து தனயோக ரேகைப் பிரிவை எடுப்பார்கள். கோபுராங்கி-தனயோகச் சுவடிகளில் மூன்றாவது அமைப்பாக விளங்கும் புவிச்சக்கர ரேகை ஏடுகளை எடுத்துவிடுவார்கள். அதிலேயே சங்கு சுவடிகளை ப்பிரித்தபின்னர், அவற்றுள் தாமரை சுவடிகளைத் தேடுவார்கள். வலையில் surfing செய்து உள்ளுக்குப் போகும்போது இதைத்தானே செய்கிறோம்? கடைசியில் அவர்கள் தேடிய sequence வந்துவிடும். கிடைக்காமல் போய்விடுவது அதிகம். ரேகை அமைப்புகளின் வரிசைக்கேற்ப ஏடுகளில் காணப்படும் ரேகை அமைப்பு வரிசை ஒத்திருக்கவேண்டும்.அப்படி இல்லையெனில் தேடி வந்தவர் திரும்பவேண்டியதுதான். அவ்வாறு ஏடு அமைந்துவிட்டால், நல்ல நேரம் பார்த்துப் படிக்க ஆரம்பிப்பார்கள்.... முழுவதும் பாடல்கள் ரூபத்திலேயே ஜோதிடக் குறிப்புகள் அமைந்திருக்கும். ஜாதகருடைய பிறந்த வீடு, ஊர், மூதாதையர் விபரம், உறவு, சொந்தப்பெயர், மனைவி மக்கள், சொத்து சுகம், குலம் கோத்திரம், முதலியவை சொல்லப்பட்டிருக்கும். உதாரணம் ஒன்றைப்பார்ப்போம். "தலைவாசல் உத்தரமாகும் சாற்றுவோம் கீழ்மேல்வீதி நீலமாய்த் தந்தி யீசன் நிகழ்த்துவோம் கீழ்பாலாஉ

நாடி ஜோதிட

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே


ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.
தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்.
ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.
தன்வந்தரிநாடிஜோதிடம்
ஜோதிடர்;க,கனால் மேகநாதன்
 
ஸ்ரீ காகபுஜண்டர்
அண்டசராசரங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் 'உமாமகேஸ்வரன்' தன் சொருபமாக தன்னால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளாக விளங்கக் கூடிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்கள், நவகோடி சித்தர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், காந்தர்வர், சித்தவித்யாதரர், எட்சர், அட்டதிக்கு பாலகர்கள், எண்ணாயிரம் வகைகளைக் கொண்ட உயிரினங்கள் போன்றவர்களுக்கெல்லாம் முக்கால வழிகாட்டுதல்களைஸ் செய்வதற்காக சிரஞ்சிவிஸ் சித்தராக ஸ்ரீ காகபுஜண்டரை இவ்வுலகில் படைத்தார்.
அண்டத்தின் இயக்ககங்களை நிர்ணயித்து, மும்மூர்த்திகள் முதலான அனைத்து தேவர்களின் எதிர்காலங்களையும் அறிந்து உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரைத்து வழிகாட்டும் பொறுப்பையும் 'உமாமகேஸ்வரன்' காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்துள்ளார். உலகத்தின் தெய்வீக சூட்சுமங்கள் குறித்து தேவசபையில் எழும் சந்தேககங்களுக்கு நிர்ணயமான உண்மை விளக்கங்களைக் கொடுத்து இவ்வுலகோர்க்கு வழிகாட்டக் கூடிய ஆற்றல் வாய்ந்த கடமைகளையும் செய்யுமாறு 'பரமேஸ்வரன்' காகபுஜண்டரை பணித்தார்.
உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து தேவரகசியங்களையும் பாதுகாத்து வைக்கும் படியான பொறுப்பையும் காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்தார். அறுபத்தி நான்கு தெய்வீகக் கலைகளின் முழுசூட்சுமங்களையும் தன் ஆத்மாவில் பதிந்து கொண்டு உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்கிற அருளாணையும் இறைவனால் காகபுஜண்டருக்கு வழங்கப்பட்டது. பலகோடி ஆண்டுகளாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்குரு காகபுஜண்டர் தன்வழி வந்த பலகோடி சித்தர்களுக்கு பலகோடி தேவரகசியங்களை உபதேசித்துள்ளார். அவற்றுள் கொல்லிமலை கோரக்கச் சித்தருக்கு உபதேசம் செய்த தேவரகசியத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய பூரண வரலாற்றையும் காகபுஜண்டர் தானாகவே சுருக்கமாகக் கூறியிருக்கின்றார்.
காகபுஜண்டரின் தெய்வீக வரலாறு - கோரக்கச்சீடரின் பெருமை
அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு சித்தர்களுக்கெல்லாம் அருள் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இறைவன் அறப்பள்ளியீஸ்வரன் ஆட்சி செய்யும் பெருமையும் அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாபெருமையும் பெற்றதொரு திருப்தியாம் கொல்லிமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை சீடனாகிய கோரக்கனே! அருளன்புடன் கேட்பாயாக உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் மேலான குருவால் ஆட்கொள்ளப்பட்டு இம்மை மறுமை வினைகளை நீக்கி வீடுபேறு பெறவேண்டும் என்பதற்காக இவ்வுலகத்தின் ஆதிகுருவாக படைக்கப்பட்ட என்னுடைய திவ்விய சரிதத்தை மிக சுருக்கமாக சொல்லுகிறேன், அன்புடன் கேட்பாயாக' என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடருக்கு தன் தெய்வீக வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கின்றார்.
மும்மூர்த்திகள் தோற்றம்:
ஆதியிலே உலகத்தின் ஆதிசக்தியாக விளங்கக்கூடிய ஆதிபராசக்தியானவள் தன் சக்தியை ஆள்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைப் படைத்தாள். மும்மூர்த்திகளையும் இயங்குவதற்காக தன் சக்தியின் ரூபமாக சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி என்னும் மூன்று சக்திகளைப் படைத்தாள். பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமியையும், சிவனுக்கு ஈஸ்வரியையும் மணம் செய்வித்தாள். பிரம்மாவிற்கு படைக்கும் தொழிலையும் கொடுத்து, மும்மூர்த்திகளும் தத்தம்தேவிகளோடு சேர்ந்து இவ்வுலகை ஆளவேண்டுமாய் கட்டளையிட்டாள். மும்மூர்த்திகளுக்கும் தலைவனாய் முக்கண் படைத்த சிவபெருமானை தன்னுடைய ரூபமாகிய பார்வதியுடன் கூடி இவ்வுலகை ஆளப்பணித்தாள்.
சரஸ்வதியின் தவம்:
மும்மூர்த்திகளின் தொழிலுக்கெல்லாம் ஆதியான தொழிலாக விலங்கக்கூடிய படைக்கும் தொழிலை ஏற்றுக் கொண்ட பிரம்மன் தன் மனைவியான சரஸ்வதியுடன் கூடி தான் எப்படி இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதற்குண்டான உயிர்களையும் அவர்களை ஆள்வதற்கான தேவர்களையும் படைக்கப் போகிறேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! எனக்கு யாராவது வழிகாட்ட வேண்டும்! நான் எப்படி அந்த வழிகாட்டுதலைப் பெறுவேன்? என்று பல சந்தேகங்களைக் கிளப்பி தன் மனைவியான சரஸ்வதியிடம் முறையிட்டான். தன் கணவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கலைவாணி முத்தொழில்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய உமாமகேஸ்வரனைத் துதித்து கடும் தவம் இயற்றினார். தவத்திற்கு மெச்சிய இறைவன் தன் மனைவி உமாமகேஸ்வரியோடு கலைவாணிக்கு காட்சிக் கொடுத்து, "அம்மையே! உம் தவத்திற்கு மெச்சினோம்! உன் கணவன் பிரம்மன் தன் தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு வழிகாட்டுதற்காக சிரஞ்சீவியாக உலகத்தின் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஓர் ஞான குழந்தையை உமக்கு அளிக்கிறேன்! பெற்றுக் கொள்! என்று சொல்லி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை சரஸ்வதின் மடியின் மீது செலுத்தினார் உமாமகேஸ்வரன்.
காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.
பிரம்மனின் படைப்புத் தொழில் ஆரம்பம்:
நான், என் பிறப்பிற்குக் காரணமான என் தாய், தந்தையரான சரஸ்வதியையும் பிரம்மதேவனையும் வணங்கி அவர்களின் ஆசிபெற்றேன். எம்முடைய தோற்றத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு என் பெற்றோர் பூரிப்படைந்தனர். நான், என் தந்தை பிரம்மதேவனுக்கு உலகின் படைப்பு ரகசியங்களை உபதேசம் செய்தேன். என் அன்பு உபதேசங்களை ஏற்றுக் கொண்டு என் தந்தை பிரம்மதேவன் தேவர்கள் முதலான அனைத்து உயிரனங்களையும் இவ்வுலகில் படைத்து பெருமகிழ்வெய்தினார்.
கற்பகவிருட்சத்தில் காகபுஜண்டர்:
நான் என் கரத்திலமர்ந்த காமதேனுவை நோக்கினேன், அவள் கற்பகவிருட்சமரத்தை உண்டு பண்ணி அதன் மீதமர்ந்து இவ்வுலகிற்கு வழிகாட்ட வேண்டுமாய் எம்மை வேண்டினாள். காமதேனுவின் விருப்பப்படி அந்தநாள் முதல் கற்பகத்தருவின் மீதமர்ந்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள நைத்து உயிரனங்களுக்கும் நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். மும்மூர்த்திகளூக்கும் ஏற்படக்கூடிய சந்தகங்களைத் தெளிவித்துக் கொண்டு இவ்வுலகின் ஆதிகுருவாக இவ்வுலகை நான் அருளாட்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்களும், கின்னர்களும், கிம்புருடர்களும், சித்தவித்யாதரர்களூம், அட்டவசுக்களும், அட்டதிக்கு பாலகர்களும், நவகிரகங்களும், காவல் தெய்வங்களும், பஞ்சபூதங்களும், மற்றும் பலகோடி சித்தர்களும் என்னிடம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உலகங்களில் பலமுறை உபதேசம் பெற்றிருக்கிறார்கள். பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் இவ்வுலகிற்கு வழிகாட்டிக் கொண்டு நான் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு வருகிறேன்.
யுகாந்திர தர்மங்கள், வேதங்கள், மந்திரங்கள், சாஸ்திரங்கள், ஞானதத்துவங்கள், அறுபத்து நான்கு கலைகள், தேவபுராணங்கள் போன்ற அனைத்து கல்விகளும் சரஸ்வதியின் அன்புடன் இவ்வுலகிற்கு எம்மால் உணர்த்தப்பட்டவையே. அண்டசராசரங்களின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால இயக்கங்கள் அனைத்தையும் நானறிவேன்.
சம்புகமுனிவரின் தவம்:
ஒரு சதுர்யுகக் காலம் நான் இவ்வுலகில் வாழ்ந்து வழிகாட்டிய பிறகு அடுத்த சதுர்யுகம் ஆரம்பித்தது. இரண்டாவது சதுர்யுகத்தில் வீரத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகோர் வாழவும் அதர்மம் அழியவும் வேண்டி கயிலாயத்திலே உமாமகேஸ்வரன் தன்னுடைய தேவியோடு கமலாச்சிதேவியுடனாய சம்புகமுனிவருக்கு காட்சி கொடுத்து, "தவப்புத்திரரே! உமது தவத்திற்கு மெச்சினோம்! உமது எண்ணம் ஈடேறி இவ்வுலகில் தர்ம்மானது சிரஞ்சீவியாக நிலைத்து ஓங்கி வாழ்வதற்காக சிரஞ்சீவியாக ஒரு ஞானக் குழந்தையை உமக்கு அளிக்கிறேன். இக்குழந்தைக்கு பகுளாதேவி என்று பெயரிட்டு யாம் முன்னரே நியமித்தபடி சரஸ்வதியின் அன்பு புத்திரனாக சிரஞ்சீவியாக வாழக்கூடிய காகபுஜண்டருக்கு மணம் முடித்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வீர்களாக! " என்று கட்டளையிட்டார். உமாமகேஸ்வரி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை கமலாச்சியின் மடியின் மீது செலுத்தினாள்.
பகுளாதேவி தோற்றம்:
பல ஆயிரம் சந்திரர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு, காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் நவரத்தின மணிகளை அணிந்து கொண்டு; தன் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ்நோக்கியவாறு நான்கு கைகளும் அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும்; கீழ்நோக்கியவாறு நான்கு கைகளுமாக பதினாறு திருக்கரங்களைக் கொண்டு; தன்னுடைய பதினாறு திருகரங்களிலும் சிரஞ்சீவிக் காப்புகள் அணிந்து கொண்டு; பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு நெற்றிக் கண்ணுடன் கமலாச்சி தேவியின் மடியின் மீது பகுளாதேவி திருஅவதாரம் செய்தாள்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து பகுளாதேவியை ஆசீர்வதித்தார்கள். உலகத்தின் ஆதி குருபத்தினியாகவும் தர்மசொரூபினியாகவும் விளங்கக் கூடிய ஞானசக்தியாக பகுளாதேவியை முமூர்த்திகளும் வணங்கினார்கள். பகுளாதேவியின் உடலின் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், கருநாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் வலப்பாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல்(ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை யோகத்தண்டு போன்றவைகள் அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞானவொளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, அன்னம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவி தன் தாய் தந்தையரான சம்புகமுனிவரையும் கமலாச்சி தேவியையும் வணங்கினாள். சம்புக முனிவர் தன் மனைவி கமலாச்சி தேவியோடு தன் ஞானமகளை ஆசீர்வதித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பகுளாதேவி தன் தந்தையாருக்கு அதர்மத்தை அழிக்கும் உபாயங்களையும் வீரதத்துவத்தின் சூட்சுமங்களையும் உபதேசித்துக் கொண்டு நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலானாள்.
காகபுஜண்டர் - பகுளாதேவி திருமணம்:
ஒருநாள் என் தாய் சரஸ்வதி தேவியானவள் எனக்குத் திருமணம் செய்ய ஆவல்கொண்டு அதற்கான மார்கங்களையும் எம்மிடமே கேட்டாள். நான் ஞானத்தின் வழியாக எமக்கென்று இறைவனால் சம்புகமுனிவருக்கு பகுளாதேவி மகளாகப் பிறந்திருப்பதையும் அவளை மணந்து கொள்ளும் காலத்தையும் என் தாயாருக்கு உணர்த்தினேன். என் தாய் சரஸ்வதி தேவியானவள் முமூர்த்திகளையும், மூன்று வேதியர்களையும் அழைத்துக் கொண்டு கயிலாயத்தில் ' சம்புகிரி ' என்னும் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்புகமுனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்கள்.
தேவர்கள் புடைசூழ வந்த கலைமகளை கமலாச்சிதேவியும் சம்புகமுனிவரும் வணங்கி வரவேற்று உபசரித்தார்கள். முமூர்த்திகளுள் ஒருவராகிய மகாவிஷ்ணு தாங்கள் வந்ததின் நோக்கத்தை சம்புகமுனிவருக்கு தெளிவுபடுத்த சம்புகமுனிவரும் அதற்கு இயைந்து எனக்கும் பகுளாதேவிக்கும் திருமணம் நிச்சயித்தார்கள். மகரத் திங்கள் (தைத்திங்கள்) பூச நட்சத்திரம், மீனலக்கினம், சுக்கிர வாரம், பஞ்சமி திதி கூடிய சுபயோக சுபதினத்தில் மகேஸ்வரன் அரசாட்சி செய்யும் திருக்கயிலை தேவசபையில் எங்கள் திருமணம் நடந்தது. தேவர்களனைவரும் வருகை தந்து எங்களை ஆசீர்வதித்து எங்களையும் வணங்கி எங்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுச் சென்றார்கள். என் தாய் கலைவாணியே வேதியராக அமர்ந்து யாகங்கள் முதலான அனைத்து சடங்குகளையும் செய்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
ஆதிகுருவாக பகுளாதேவியுடன் காகபுஜண்டர்:
உமாமகேஸ்வரனும் உமாமகேஸ்வரியும் எங்கள் இருவரையும் அணைத்து இருவரின் நெற்றிக் கண்ணிலும் முத்தமிட்டு சிவசக்திகலைகளை ஆசீர்வதிதார்கள். அன்று முதல் என் தேவி பகுளாதேவி என் வலபாகத்தில் அமர்த்திக் கொண்டு கற்பகவிருட்சத்தின் மேலமர்ந்து இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன்.
இவ்வுலக உயிர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். பலகோடி ஆண்டுகள் கடந்த என் வாழ் நாட்களில் பல தவங்களுக்குச் சென்று நான் என் தேவியோடு அருள்காட்சிகள் கொடுத்திருக்கின்றேன். ஒரே நேரத்தில் பல்லாயிரம் உயிர்களுக்கு வெவ்வெறு உலகங்களில் வெவ்வெறு இடங்களில் வெவ்வெறு ரூபங்களில் வழிகாட்டும் தெய்வீக சக்தியை படைத்தவன் நான். என்னை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து சூட்சுமங்களையும் உணர்த்தி பிறப்பின் எல்லா பயங்களையும் பெறும்படியாக ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு உயிர் தானெடுக்கும் ஏதாவதொரு பிறவியில் எம்மை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுவிட்டால் அவ்வுயிருக்கு கற்பக விருட்சமாக ஞானங்களை வழங்கி அவ்வுயிரைக் கரையேற்றஸ் செய்யும் உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன். நான் அகாரபீடத்தில் அமர்ந்து கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றேன். அகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்கள் வாழ்வதைப்போல் அகாரபீடத்தைக் கொண்ட என் குருவருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன்.
காகபுஜண்டர் முமூர்த்திகளுக்கு உபதேசித்தல்:
மகாபிரளயங்கள் வரும் பொழுது முமூர்த்திகளுள் இருவர்களாகிய பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவர்களும் சிவனின் மகாபிரளய அவதாரமாக விளங்கக் கூடிய காயாரோகணீஸ்வரனிடத்தில் ஒடுங்குவார்கள். மகாபிரளயம் முடிந்தபிறகு கிருதயுகம் ஆரம்பித்தவுடன் ஒடுக்கத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு போன்ற இருமூர்த்திகளும் மகாசிவத்திலிருந்து பிறப்பார்கள். மீண்டும் மூன்று மூர்த்திகளும் மூன்று தேவியர்களும் தாங்கள் இவ்வுலகில் ஆற்றவேண்டிய கடமைகளை அறிந்து கொள்வதாற்காக கைலாயத்தில் தேவசபையைக் கூட்டி மகாசிவனின் உத்திரவுப்படி எம்மை அழைப்பார்கள். இவ்வுலகில் முமூர்த்திகளும் அவர்களது தேவியர்களும் ஆற்றவேண்டிய கடமைகளையும் அவர்களின் முற்பிறப்பு உண்மைகளையும் நான் என் மனைவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளுக்கு உபதேசிப்பேன்.
நான் உபதேசம் செய்கின்றபொழுது மும்மூர்த்திகளும் என்னை வணங்கி என்னை குருபீடத்தில் அமரச்செய்து அன்பின் மிகுதியால் எம்பீடத்திற்கு கீழான பீடத்திலமர்ந்து கொண்டு என் உபதேசதைக் கேட்பார்கள். எம்முடைய உபதேசத்தை பிரம்மாவானவர் பிரம்மபாலன் சொரூபத்திலும், விஷ்ணுவானவர் கோபாலன் சொரூபத்திலும், சிவனானவர் பைரவபாலன் சொரூபத்திலும் கேட்டு இன்புருவார்கள்.
மும்மூர்த்திகளுக்கும் நான் உபதேசம் செய்த பிறகு இவ்வுலகில் பிரம்மாவானவர் தேவர்கள் முதலான அனைத்து உயிர்களையும் படைப்பார். பிரம்மனின் படைப்பை பிரம்மாவோடு சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் ஆட்சி கொள்வார்கள்.
தேவர்களூக்கெல்லாம் பிரம்மாவானவர் தன் உபதேச சொரூபமாகிய வேதமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்றபொழுது அவர்கீழமர்ந்து அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். வைகுண்டத்தில் திருமால் ஆளுகையின் கீழமர்ந்த அனைத்து தேவர்களுக்கெல்லாம் விஷ்ணுவானவர் தன் உபதேச சொரூபமாகிய கிருஷ்ணமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்ற பொழுது அவர்கீழமர்ந்து வைகுண்டவாசம் செய்யும் அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். கைலாயத்தில் மகாசிவனின் ஆளுகையின் கீழ் அமைந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மகாசிவன் தன்னுடைய உபதேச சொரூபமாகிய தட்சணாமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசம் செய்கின்றபொழுது அவர்கீழ் அமர்ந்து அனைத்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களையெல்லாம் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயங்களைச் செய்வார்கள்.
இவ்வாறாக பிரம்மனருளால் தேவர்களால் படைக்கப்படும் அனைத்து சிறு தேவர்களும் அவர்களின் படைப்புக்குக் காரணமான தேவர்கள் மூலம் அதற்குத் தொடர்புடைய மூன்று உபதேச சொரூபங்களாக விளங்கக்கூடிய வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தட்சணாமூர்த்தி போன்ற ஏதாவதொரு குருசொரூபம் மூலம் குரு உபதேசம் கொடுக்கப்பட்டு இவ்வுலகம் ஆட்சி செய்யப்படுகிறது.
ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் அவ்வாறாகவே அவ்வுயிர்களின் படைப்புக் காரணத் தொடர்புடைய குருசொரூபத்தால் குரு உபதேசம் செய்யப்படுகிறது. ஒரு சதுர்யுகத்தில் முதலாவதாக வரும் கிருதாயுகத்தில் ஊழ்வினை விலக்கு அளிக்கப்பட்டு எல்லா உயிர்களுக்கும் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. தர்மத்தை வழுவாமல் தேவர்களும் மற்ற உயிர்களும் வாழ்வதற்கு அனைத்து வசதிகளும் இன்பங்களும் இறைவனால் அளிக்கப்பட்டு பதினான்கு லோகங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகம் ஆளப்படுகிறது. கிருதாயுகத்தில் கடைசியாகப் பெற்ற பிறவியில் செய்கின்ற பாவங்கள் மட்டும் அவ்வுயிர்களின் வினையேட்டில் பதிக்கப்படுகிறது.
கிருதாயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பித்த பிறகு முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறவி தரப்படுகின்றது. வினையின் அடிப்படையில் அமைந்த அப்பிறவி முதல் கலியுகம் முடிகின்ற வரை அவ்வுயிர் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினைகளை அடிப்படையாகக் கொண்டே உயர்வும் தாழ்வும் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. வினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உயிரும் தனக்கென்று பிரத்யேக தேவர்களையும், முனிவர்களையும் சித்தர்களையும் வழிபாடு செய்கின்ற பொழுது அந்தந்த தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் அந்தந்த உயிர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உபதேசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரின் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டு உபதேசத்தின் நிலைகளும் மாற்றம் பெறுகின்றது. எந்த அளவிற்கு ஓர் உயிர் நல்வினையைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு உயர்நிலை ஞானங்களையும் உபதேசங்களையும் அந்த உயிரால் பெறப்படுகிறது. இவ்வாறாகவே அனைத்து முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், அவரவர்களை வணங்குபவர்களுக்கு உரிய உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறாகவே எம்மை வழிபடுவோர்களுக்கும் உலகத்தின் மூலகுருவாகிய நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம் வழிவந்த சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு வருகிறேன்.
காகபுஜண்டர் சகல உயிர்களுக்கும் உபதேசித்தல்:
பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் எம் வழிவந்த கோடான கோடி தேவபுருடர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்புகள் முதலான ஒன்று முதல் ஆறு அறிவு வரை படைத்த அனைத்து உயிர்களுக்கும் நான் இதுவரை உபதேசம் செய்துள்ளேன், தொடர்ந்து உபதேசங்களை செய்துகொண்டும் இருக்கின்றேன். பல கற்ப காலங்கள் கடந்த எம் வாழ்க்கையில் பல கோடி விசித்திரங்களை நான் இவ்வுலகின் பார்த்திருக்கிறேன். பூலோகம் மட்டுமன்றி பிற பதிமூன்று லோகங்களிலும் பலகோடி தேவ இன உயிர்களுக்கும் நான் உபதேசம் செய்திருக்கின்றேன். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் என் அரசாட்சி பல கோடியுகங்களாய் குறைவின்றி நடந்து வருகின்றது. கிருதா யுகத்தில் "தேவமதம்" என்னும் பொதுப் பெயரால் ஒரேயொரு மதம் மட்டும் வாழ்ந்து தர்மம் தழைத்தோங்கும் உயர்நிலைக் கொண்டு பதினான்கு உலகங்களும் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். துவாபரா யுகத்தில் ஒன்பதாயிரம் மத பேதங்களைக் கொண்டு இவ்வுலகம் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். கலியுகத்தில் பதினெட்டாயிரம் மதபேதங்களை கொண்டு இவ்வுலகம் வாழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். வெவ்வேறு சதுர்யுகங்களிலும் வெவ்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரே ஒற்றுமை மூலங்களைக் கொண்டு தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் வகை ஜீவராசிகளும், இறை அவதாரங்களும், புராணங்களும், தத்துவங்களும், வேதங்களும், கலைகளும் இவ்வுலகில் தோன்றுவதும் இறுதியில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாகிய சுழற்சி விளையாட்டுக்கள் இவ்வுலகில் நிகழ்வதை நான் பலகோடி ஆண்டுகளாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு தேவபுருடர்களையும் அடுத்தடுத்த பிறவிகளில் கண்டு அவர்க்ளை ஆசீர்வதித்து அவர்களுக்கு இது எத்தனையாவது பிறவி என்ற விவரத்தை சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன். எல்லா யுகங்களிலும், எல்லா லோகங்களிலும், எல்லா வடிவங்களிலும் நான் ஆதிகுருவாக அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன்.
காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்:
உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன.
1. காகபுஜண்டன்
2. நாகபுஜண்டன்.
3. யோகபுஜண்டன்.
4. புஜங்கன்.
5. புஜண்டி
6. காக்கையன்.
7. நாகேந்திரமுனி.
8. மனுவாக்கியன்.
9. காலாமிர்தன்.
10. சஞ்சீவிமுனி.
11. அஞ்சனாமூர்த்தி.
12. கற்பகவிருட்சன்.
13. நற்பவி.
14. பிரம்மகுரு.
15. ஆதிசித்தர்.
16. திரிகாலஜெயர்..
காக்கையை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு காகபுஜண்டர் எனப் பெயருண்டு. நாகத்தை கரத்தில் தாங்கியுள்ளதால் எனக்கு நாகபுஜண்டன் என்கிற பெயருண்டு. யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு யோகபுஜண்டன் என்கிற பெயருண்டு. கரங்களில் பல அங்கங்களையும் கொண்டுள்ளதால் எனக்கு புஜங்கன் என் கிற பெயருண்டு. கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் எனக்கு புஜண்டி என் கிற பெயருண்டு. பலகோடி ரூபங்களை நான் எடுத்தாலும் எனக்கு பிடித்தமான ரூபமாக காக்கை ரூபத்தை கருதுவதால் எனக்கு காக்கையன் என் கிற பெயருண்டு. நாகேந்திரனை தலைவராகக் கொண்ட நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் எனக்கு நாகேந்திரமுனி என் கிற பெயருண்டு. உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் எனக்கு மனுவாக்கியன் என்கிற பெயருண்டு. முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் எனக்கு காலாமிர்தன் என்கிற பெயருண்டு. என்றும் அழியாத சிரஞ்சீவியாக நான் வாழ்ந்து வருவதால் எனக்கு சிரஞ்சீவிமுனி என்கிற பெயருண்டு. முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், எம்முடைய கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் எனக்கு அஞ்சனாமூர்த்தி என் கிற பெயருண்டு. கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை நான் உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், என் ஞான உபதேசத்தைப் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் கொண்டு விளங்குவதாலும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கும் எனக்கு கற்பகவிருட்சன் என்கிற பெயருண்டு. உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் எனக்கு நற்பவி என்கிற பெயருண்டு. பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் எனக்கு பிரம்மகுரு என்னும் பெயருண்டு. சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றி எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு ஆதிசித்தர் என்கிற பெயருண்டு. முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர் என்கிற பெயருண்டு. இவையன்றியும் இவ்வுலகோர் பல்வேறு குருசொரூபங்களில் எம்மை வணங்கி என்னருள் பெற்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
காகபுஜண்டரின் பதினாறு திருக்கரங்களின் அருளாட்சி:
நான் என்னுடைய பதினாறு திருக்கரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். சூலாயுத கரத்தால் உலக உயிர்களை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன். எழுத்தாணி கரத்தால் உலகதோருக்கு அவர்களின் நாவில் ஞானத்தை எழுதுகிறேன். ஞானஒளி கரத்தால் உலகோர்களுக்கு ஞானஒளியைப் பாய்ச்சி ஆசீர்வதிக்கிறேன். அபய கரத்தால் உலகோர்களுக்கு அபயமளிக்கிறேன். காமதேனு கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு எல்லா செல்வங்களையும் குறைவின்றி காமதேனு மூலம் பெற்றுத் தருகிறேன். வீணை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அறுபத்திநான்கு தெய்வீகக் கலைகளையும் உபதேசித்தருள்கிறேன். காகத்தைக் கொண்ட கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அன்பு தத்துவத்தையும் ஒற்றுமை தத்துவத்தையும் உபதேசித்தருள்கிறேன். அஞ்சனம் கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு முக்கால ரகசியங்களை உணரும் தெய்வீகத்தை உபதேசித்தருள்கிறேன். வேலாயுத கரத்தால் உலகோர்களுக்கு வெற்றி ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். தண்டாயுத கரத்தால் குருவருளுக்குக் கலங்கம் ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனைகள் வழங்குகின்றேன். வரத கரத்தால் உலகோர்களுக்கு வரம் அளிக்கின்றேன். செந்நாகம் கொண்ட கரத்தால் உலகோர்களுக்கு ஊழ்வினை நீக்கி ஞானத்தை அருள்கிறேன். சுருதி (ஓலைச்சுவடி) கரத்தால் உலகோர்களுக்கு அனைத்து கல்வியையும் அருளுகின்றேன். அமிர்தகலச கரத்தால் உலகோர்களுக்கு அமிர்தத்தை கொடுத்து அவ்வுயிர்களின் ஆயுளை உயர்த்துகிறேன். அட்ட சித்தி முத்திரை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அட்டமாசித்திகளையும் வழங்குகின்றேன். யோகத்தண்டு கரத்தின் மூலம் உலகோர்களுக்கு பூரண யோகமார்க்கத்தை உபதேசித்தருள்கிறேன்.
இவ்வாறாகவே, என் வலபாகத்திலே சக்திரூபமாக என் மனைவி பகுளாதேவி சுமந்து கொண்டு இவ்வுலகில் தெய்வீக அருளாட்சிகள் செய்து கொண்டு வருகிறேன். எம்போன்ற எங்களிருவருக்கும் அமைந்த ஒத்த திருக்கரங்களான பதினான்கு திருக்கரங்களைத் தவிர்த்து என் மனைவிக்கு வேறுபட்டிருக்கும் அன்னம் கொண்ட திருக்கரத்தின் மூலம் தாய்மை அன்பையும், கரும்பாம்பு கொண்ட திருக்கரத்தின் மூலம் மோட்சத்தையும் உலகோர்களுக்கு என் மனைவி வழங்கியருள்கிறாள். நானும், என் மனைவியும் சிவசக்தி ரூபத்தில் அதாவது தந்தை தாய் ரூபத்தில் (இடப்பாகம் தந்தையாகவும் வலபாகம் தாயாகவும்) இவ்வுலகில் குருவருளாட்சி செய்து கொண்டு வருகிறோம். தந்தை தாய் ரூபமான எம் குருவருளன்றி பேரருளை முழுமையாக பெறுகின்ற பாக்கியம் உலகோர்களுக்கு கிட்டாது. என்பது பேருண்மை. என், அன்பு சீடனாகிய கோரக்கனே! யான் இதுவரை சொல்லியருளிய எம் தெய்வீக வரலாற்றை நீர் மிகப்பணிவுடன் கேட்டபடியினால் பகுளாதேவி உடனுறை காகபுஜண்டனாகிய எம் வற்றாத பதினாறு குருவருட்பேறுகளும் உமக்குக் குறைவின்றி கிடைக்க ஆசீர்வதிக்கின்றோம். நற்பவி!
காகபுஜண்டரின் மூலமந்திரங்கள்:
காகபுஜண்டரின் மூலமந்திரங்கள் இரண்டு வகைகளாகக் கொண்டதாகும். அவையாவன : கர்மசித்தி மூலமந்திரம் மற்றும் ஞானசித்தி மூலமந்திரம் என்பனவாகும். உலக இன்பங்களைப் பெறுவதற்கு கர்ம சித்தி மூலமந்திரமும், ஞான இன்பங்களைப் பெறுவதற்கு ஞான சித்தி மூலமந்திரமும் பயன்படும்.
காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்:
"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம்
நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!"
காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்:
"ஞானானந்தமயம்
தேவம் நிர்மல படிகாத்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
காகபுஜண்டம் உபாஸ்மகே!"