புதன், 5 அக்டோபர், 2016

காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 )

www.danvantarinadi.com

sambandar appar meet


காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

IMG_4415
அஷ்டாங்க மைத்துனம்

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச

-விருத்த வசிஷ்டர்

பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.
appar2
கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.

பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய  நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.

பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.

ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில்  – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!

இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்? கப்பலா? விமானமா?

இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்?

tamluk
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1303; தேதி: 22 செப்டம்பர் 2014
மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது ஒன்பதாவது கட்டுரை.
இராவணன் ஆண்ட இலங்கை இப்போதைய ஸ்ரீலங்கா இல்லை என்றும் அது கோதாவரி முகத்வாரத்தில் இருந்த நதியிடைத் தீவு என்றும் , அக்காலத்தில் பறக்கும் புஷ்பக விமானம் இருந்ததற்கு தடயம், சாட்சியம் இல்லை என்றும் வெளிநாட்டு அறிஞர்களும், மார்கசீய வரலாற்று அறிஞர்களும் கதைத்த ஒரு காலம் உண்டு. ராமாயணம், மஹாபாரதம் ஆகியனவற்றை “வர்க்கப் போராட்ட வருணனைகள்” என்று அவர்கள் நகைத்த காலமும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிவு போதாமையே இது போன்ற அரைகுறை ஆய்வுகளுக்குக் காரணம்.
சிலப்பதிகார தமிழ் காவியத்தில் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு) என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டத்தில் இருந்து கடல் ச்சூழ்ந்த இலன்கையே நாம் அறிந்த இலங்கை, ஆற்றிடை திட்டு அல்ல என்பது விளங்கும். அது மட்டுமல்ல ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இப்போதைய ஸ்ரீல்ங்காவை ராமனோடும் ராவணனோடும் தொடர்பு படுத்திப் பாடியுள்ளனர். எனினும் இவை எல்லாம் பழங்கதைகள். இப்போது உலகமே ஒப்புக்கொண்ட உண்மை- இன்றைய ஸ்ரீலங்காதான் அன்றைய ராமாயண இலங்கை.
தொல்முதுகோடி என்று தனுஷ்கோடி பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உண்டு. ராமசேது என்னும் கடற்பாலம் இருந்ததற்கான தடயங்களை ‘நாஸா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் படம் மூலம் நிரூபித்துள்ளது.
ஒன்றுவிட்ட சகோதரனான குபேரனிடமிருந்து ராவணன் புஷ்பக விமானத்தைப் பறித்தான். இது எண்ணத்தால் — பெட்ரோலால் அல்ல — பறக்கச் செய்யும் விமானம். இதுபற்றி நியூ சைன் டி ஸ்ட் பத்திரிக்கையில் வந்த ஒரு விஞ்ஞான கட்டுரையை நான் எழுதி இருக்கிறேன். அதில் முழு விவரம் காண்க.
patna
புஷ்பக விமானத்தை நம்ப மறுக்கும் அறிவியல் புத்தி ஜீவிகளுக்கு மஹாவம்சம் சில அரிய பயணக் குறிப்புகளைப் படைக்கிறது.
இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். இந்த ரகசியம் கரிகால் சோழனுக்கும் தெரிந்திருந்ததால் அவன் கடலுக்கு அப்பால் உள்ள தீவுகளை வெல்ல முடிந்தது.
நளியிரு முந் நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ
— – புறநானூறு, பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது.
வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்தி கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மத யானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! – என்று உரைகாரர்கள் இதற்குப் பொருள் எழுதியுள்ளனர்.
அவன் வழியில் “ஞாலம் நடுங்கவரும் கப்பல்களுடன்” சென்று ராஜராஜ சோழனும் மாயிருடிங்கம் (பிலிப்பைன்ஸ்), மாபூப்பாளம் (போர்னியோ) மாநக்கவாரம் (நிகோபர் தீவு முதல் இந்தோ நேஷியா வரை)— முதலிய பல தீவுகளை வென்றான்.
இலங்கை – வட இந்திய கடற்பயணத்துக்கு ஒரே வாரம் போதும் என்கிறது மஹாவம்சம் (அத்தியாயம் 11):
தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளருக்கு பிரியமானான்) என்ற இலங்கை மன்னன், அதே பெயருள்ள அசோகச் சக்ரவர்த்திக்குப் பரிசுப் பொருட்களுடன் தூதர் குழு ஒன்றை அனுப்புகிறான். அவர்கள் இலங்கையில் உள்ள ஜம்புகோளத்தில் கப்பல் ஏறி ஏழு தினங்களில் தாம்ரலிப்தியை அடைகின்றனர். இது மேற்குவங்கத்தில் மிதுனபுரி அருகே உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்று. இன்று தாம்லுக் என்ற சிறிய ஊராக இருக்கிறது. எப்படி பூம்புகார், குமரிக்கோடு, தனுஷ்கோடி, துவாரகா முதலிய ஊர்களை சுனாமிப் பேரலைகள் விழுங்கினவோ அப்படியே இந்த ஊர் துறைமுகத்தையும் கடல் விழுங்கிவிட்டது.
ship
இலங்கைக்கு புத்தர் வாழ்ந்த காலத்தில் வந்த வங்காளதேச அரசன் விஜயனும் இங்கேயிருந்துதான வந்தான். முதலில் யக்ஷிணி (குபேர) வம்சப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டு பின்னர் பாண்டியநாட்டுத் தமிழ் பெண்ணைக் கல்யாணம் முடித்தான. துரதிருஷ்டவசமாக குழந்தைகள் பிறக்கவில்லை!
தாம்ரலிப்திக்குச் சென்ற இலங்கைக் குழு அடுத்த ஏழே நாட்களில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா (பாடலிபுத்ரம்) நகரை அடைந்துவிட்டது. மாமன்னன் அசோகன் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஐந்து மாதங்களுக்கு ராஜ உபசாரம் செய்கிறான். பின்னர் அசோகன் அனுப்பிய நிறைய பரிசுப் பொருள்களுடன் அந்தக்குழு இலங்கைக்குத் திரும்புகிறது. இதற்கு 12 நாட்கள் ஆயின.
ஏன் ஐந்து மாதம் இலங்கைக் குழு அங்கே தங்கியது? பருவக் காற்றின் போக்கை அறிந்த நம்மூர் மாலுமிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்டால் இதனை நாட்களில் சென்றுவிடலாம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆகையால் போனவுடன் திரும்பிவர இயலாது. கொஞ்சம் காலம் தங்கிவிட்டு காற்று எதிர்த் திசையில் வீசும் போது திரும்பவேண்டும்.
tamluk board
அத்தியாயம் 18-ல் அசோகன் அனுப்பிய போதி மரம், ஒரு பெரிய குழுவுடன் இலங்கைக்கு வந்த செய்தி கூறப்படுகிறது. அதை வாங்குவதற்காச் சென்றவர், ஐப்பசி மாதம் சுக்லபக்ஷம் த்விதியை திதியில் (வளர்பிறை இரண்டா நாள்) ஜம்புகோளத்தில் புறப்பட்ட அதே நாளன்று புஷ்பபுரத்துக்குப் (பாட்னா) போய்ச்சேர்ந்தார் என்னும் மஹாவம்ச கூற்றை நம்புவது கடினம். ஒருவேளை அதே சுக்ல பக்ஷ த்விதீயை — ஆனால் வேறு ஒரு மாதமாக — ஆக இருக்கலாம். மஹா வம்ச ஒரிஜினலைப் பிற்காலத்தில் எழுதியோர் விட்ட தவறாக இருக்கலாம் இது என்பது என் கருத்து. அல்லது இதை மந்திர –தந்திர –அற்புத– அதிசய வகைச் செய்திகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
அத்தியாயம் 19-ல், சாலை மார்கம் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பாட்னாவில் கங்கை நதியில் போதிமரத்தை ஏற்றிவிட்ட, அசோகன், விந்தியமலையைக் கடந்து ஒரே வாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தாம்ரலிப்திக்கு வந்துவிடுகிறான். இதிலிருந்து அக்காலத்தில் விந்திய மலை வழியாக நல்ல சாலை மார்க்கம் இருந்தது புலப்படும். இது அகத்தியர் அமைத்த பாதை. அதைப் புரணங்கள், “அகஸ்தியர் விந்திய மலையை கர்வ பங்கம்” செய்தார் என்று புகலும்/ புகழும்!
peryplus_first_century_AD_1000px
ஆக மேற்கூறிய குறிப்புகளைக் காண்கையில் அக்காலத்தில் கப்பல் வழி, சாலை வழிப் போக்குவரத்து மிக நன்றாக இருந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். வெள்ளைகாரன் வந்த பின்னால்தான் இந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தன என்று கூறுவோரின் வாயை அடைக்க இதுவே போதும். வால்மீகியும் பரதன் — ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் இருந்து வந்த வழியை விரிவாகக் கொடுத்துள்ளதை ராமாயணத்தில் படித்து அறிக!!
புஷ்பக விமானத்தை நம்பாதோரும் இந்தக் குறிப்புகளை ஏற்கத்தான் வேண்டும். ஆக கைலாச மலையை ராவணன் அசைத்தான் – சிவபெருமானிடம் நல்ல அடி வாங்கினான் என்று ஞான சமபந்தப் பெருமான பதிகத்துக்கு பதிகம் பாடுவதும் உண்மையே.
அரபு நாட்டு ஷேக்குகள், அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட, அட்டூழியங்களையும் பாப காரியங்களையும் பண்ணுவதற்கு பம்பாய்க்கும், ஹைதராபத்துக்கும் வந்து செல்லுவது போல அக்காலத்தில் ராவணனும் அவன தங்கை சூர்ப்பநகையும் சமூக விரோதச் செயல்களில் இறங்க மத்திய இந்தியாவில் இருந்த தண்டகாரண்யம், இமயமலையில் உள்ள கைலாசம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். ராவணனால் விரட்டப்பட்ட குபேரன், இமயமலை திபெத் பகுதியில் குடியேறினான். அக்கலத்திலும் இந்தியா அகதிகளை ஏற்றுக் கொண்டதற்கு இதுவும் ஒரு சான்று.
Silk_Route_China_
பருவக்காற்றைக் கண்டுபிடித்தவன் தமிழனா? கிரேக்கனா? என்ற எனது பழைய கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன். பருவக்காற்று ரகசியத்தை ஒரு இந்திய அசடு (மண்டு), எகிப்தில் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள ஒரு மாலுமியிடம் உளறிவீட்டான். அதன் பின்னர் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், பிரிட்டிஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள் இந்தியாவைச் சூறையாட வழிவகை ஏற்பட்டது. — ((காண்க: தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், ச.சுவாமிநாதன், நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஆண்டு 2009; இதே புத்தகத்தை நிலாசாரல்.காம் ஈ-புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது)) —

உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தி தமிழினம்.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்

இராவணன் யார்?


இராவணன் யார்? என்ற கேள்வியுடன் இந்த பதிவை எழுதுகிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம்.

தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன்.
இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.

இராவணனைப் பற்றி தமிழில் இணையத்தில் தேடினால் வருவது எல்லாம் சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களும் தேவையற்ற பல தகவல்களும்தான். இதனில் இருந்து இராவணனை பற்றி எந்த அளவு தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இராவணனைப்பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

இராவணனின் அடுத்த பிறப்புதான் "புத்தர்" என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறது. இராவணனை கொன்றதை (சிங்கள மன்னனை) தமிழ் மக்கள் கொண்டாடுவதாகவும் அதைதான் தீபாவளி என்கிறார்கள் என்றும் சிங்கள தலைமுறைகளுக்கு வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது.

இராவணனை சிங்களவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கான அரசியலை பிறிதொரு பத்தியில் பேசுவோம்.

இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. 

சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புட்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு. இது குறித்து யாரிடனமாவது தரவுகள் இருப்பின் மறக்காமல் இங்கு பதிவு செய்யவும்.

 முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போக இராவணன் இராமனால் கொல்லப்படவில்லை என்றும் கோமா நிலையில் இருக்க கூடிய இராவணனின் உடல் சிவனொளிபாதமலையை அண்டிய அடந்த காட்டுப்பகுதியில் இருக்கலாம் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை.

இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.

இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

இங்கு சில இணைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தரம் படித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை பகிருங்கள். இந்த இணைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரலாறுகளை தேடும் ஆர்வலர்களை இங்கு கொண்டுவாருங்கள். நாங்கள் அறியத் தவறிய வரலாறுகளை இனியாவது தேடுவோம்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

புண்ணியமும் செல்வமும் கிடைக்க தை அமாவாசை வழிபாடு

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, வடமாநிலங்களில் காசி, திரிவேணிசங்கமம் ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வதும் அவசியம். இறந்தவர் களின் நாள், தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். பித்ருக்கள் என அழைக்கப்படும் மூதாதையர்களின் திசை தெற்கு. சூரியன் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்குள் பிரவேசிப்பார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது.

அம்மாதத்தில் அவர், பித்ரு லோகம் செல்வார். பித்ருக்கள் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த பூஜைக்கு ‘திலஸ்மார நிர்ல்ய தரிசன பூஜை’ என்று பெயர். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும், எள் தானியம் நிறைந்த நிலையில் காட்சியளிப்பார். பித்ருக்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மகாவிஷ்ணு பித்ருக்களுக்கு அதற்கான பலன்களை வழங்குவார். அதே பலன்களை பித்ருக்களின் மூலம் பூமியில் வாழும் உறவுகளுக்கும் வழங்கி அருள்புரிவார். பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று, உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். அவர்களும் மகிழ்ச்சியோடு பூலோகம் புறப்படுவார்கள். மகாளய அமாவாசை அன்று மொத்தமாக கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்ருக்களின் பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம். காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு வழங்கலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைக்க வேண்டும். அதன்பிறகே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள்.

அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தப்படி தான் கொடுக்க வேண்டும். தன் முன்னோர்கள் மோட்சம் செல்லாமல் தவிப்பதைப் பார்த்த பகீரதன், கடும் சிரமப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். அதன் மூலம் அவர்களுக்கு மோட்சம் அளித்ததாக புராணம் கூறுகிறது.

புண்ணியமும் செல்வமும் கிடைக்க தை அமாவாசை வழிபாடு

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, வடமாநிலங்களில் காசி, திரிவேணிசங்கமம் ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வதும் அவசியம். இறந்தவர் களின் நாள், தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். பித்ருக்கள் என அழைக்கப்படும் மூதாதையர்களின் திசை தெற்கு. சூரியன் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்குள் பிரவேசிப்பார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது.

அம்மாதத்தில் அவர், பித்ரு லோகம் செல்வார். பித்ருக்கள் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த பூஜைக்கு ‘திலஸ்மார நிர்ல்ய தரிசன பூஜை’ என்று பெயர். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும், எள் தானியம் நிறைந்த நிலையில் காட்சியளிப்பார். பித்ருக்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மகாவிஷ்ணு பித்ருக்களுக்கு அதற்கான பலன்களை வழங்குவார். அதே பலன்களை பித்ருக்களின் மூலம் பூமியில் வாழும் உறவுகளுக்கும் வழங்கி அருள்புரிவார். பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று, உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். அவர்களும் மகிழ்ச்சியோடு பூலோகம் புறப்படுவார்கள். மகாளய அமாவாசை அன்று மொத்தமாக கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்ருக்களின் பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம். காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு வழங்கலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைக்க வேண்டும். அதன்பிறகே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள்.

அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தப்படி தான் கொடுக்க வேண்டும். தன் முன்னோர்கள் மோட்சம் செல்லாமல் தவிப்பதைப் பார்த்த பகீரதன், கடும் சிரமப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். அதன் மூலம் அவர்களுக்கு மோட்சம் அளித்ததாக புராணம் கூறுகிறது.,www.danvantarinadi.com.

மகாளய அமாவாசை: பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு



ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய
விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.
அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.
மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது. ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!