ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஸ்ரீமத் பகவத்கீதை



கீதை , பெரிய தத்துவ மேதைகளும் அறிஞர்களும் மட்டுமே படிக்கவேண்டும் என்ற தவறான கருத்து நம்மிடம் பரவியுள்ளது.சடங்குகளில் காட்டும் ஆர்வத்தை நமது மதக் கோட்பாடுகளில் உள்ள உண்மைகளை அறிந்துகொள்ளக் காட்டத் தவறிவிட்டோம்.
கீதையில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, என்ன செய்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்த்துத் தெளிவு கொள்ளவேண்டும் என்பதே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது.பாவம் செய்தவனும் தனது அறிவில் தெளிவு பெற்று, பாவங்களில் இருந்து மீண்டு வரலாம் என்கிறது..... சந்நியாசம் என்பது பொறுப்புகளில் இருந்து தப்பித்துச் செல்வது அல்ல. பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கூறுகிறது.



கீதையைப் படிப்பவர்கள், அது ஒரு மத நூல் மட்டுமல்ல, சிறந்த மனோதத்துவ நூல் என்றும் புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையைச் சம நிலையுடன் நோக்கவும், குழப்பம் இல்லாமல் மனம் தடுமாறாமல், மனத் தெளிவுடன் வாழவும் கீதை அருமையான வழிகளைச் சொல்லுகிறது.அந்தக் கருத்துக்களை நான் எளிமைப் படுத்தி இங்கே கூற விரும்புகிறேன். அனைவரும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்..

கீதோபதேசத்தின் காரணம்.

வேதங்கள் அநாதியானவை அவற்றின் காலம் இன்னதென்று இதுவரையில் யாருமே வரயறுத்துச் சொன்னதில்லை.

வேதங்களைச் செய்தவர் யார்?

யாருக்குமே தெரியாது..........ஒருவேளை ரிஷிகள் வேதத்தை இயற்றியிருப்பார்களோ...அப்படியானால் அந்த ரிஷிகளின் காலம் என்ன?

என்ன ஆதாரம் நம்மிடம் இருக்கிறது? ரிஷிகள் நமக்கு இந்த வேதங்களைக் கூறியபோதிலும், அவர்கள் தானாக இவைகளைப் படைக்கவில்லை. அவர்கள் நிஷ்டையில் இருந்தபோது, இந்த வேதங்கள் அவர்களது காதில் தானாக ஒலித்தவை.ரிஷிகளின் தவத்தால் ஏற்பட்ட ஞானம், மனவலிமை அவர்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்தது.

இறைவனை நாதப் பிரும்மம் என்று கூறுகிறோம். நாத வடிவங்களால் ரிஷிகளுக்கு இந்த வேதங்கள் அருளப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே வேதங்கள் நிலையான என்றும் அழியாத உண்மைமையின் வடிவம் ஆகும்.

வேதங்களைச் சுலபமாக அனைவராலும் புரிந்துகொள்ள இயலாது.வேதங்களின் விளக்கமாக உப-நிஷதங்கள் தோன்றின.இந்த உப நிஷதங்கள், குரு-சீடன் பேசிக்கொள்வதுபோல அமைந்தவைலைந்த உபநிஷதங்கள் அருத்துக்கள் அனைத்தும் உள்ளடக்கி கீதை நமக்குக் கிடைத்துள்ளது.பகவத் கீதையின் முழுமையை, உண்மையை, அது கூறும் கருத்தை எவனொருவன் புரிந்து கொள்கிறானோ, அவந்தான் இந்து மதத்தின் மூலக் கருத்தைப் புரிந்துகொண்டவனாவான்.......வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டவனாவான்.

மற்ற மதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு இந்து மதத்துக்கு உள்ளது.பிற மதங்கள் வாழ்க்கை நெறிகளைப் பற்ரிப் பேசுகின்றன.மனித வாழ்க்கை மேம்பாடு அடையும் வழிமுறைகளைக் கூறுகின்றன.

ஆனால் இந்துமதம் பிரபஞ்ச ரகசியத்தை விளக்க முயற்சிக்கிறது.படைப்பின் காரண காரியத்தைவிளக்கி அதன்வழியே வாழ்க்கை நெறியை வகுத்துக் காட்டுகிறது.மிகவும் சிக்கலான ஒன்றை, புதிர்போலத் தோன்றும் ஒன்றை, எளிமையாக்கி உணர்த்த இந்து சாஸ்திரங்கள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சிகளின் கருத்துப் பெட்டகமே கீதை.

வேதங்கள், ரிஷிகளுக்கு அருளப்பட்டன என்று பார்த்தோம். அவை அமைதி நிரம்பிய வனங்களில், தனிமையின் ரிஷிகள் இருந்தபோது அறுளப்பட்டவை.ஆனால் கீதையின் உபதேசத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட களம் முற்றிலும் மாறுபட்டது.போர்க்களத்தில்தான் கீதை உபதேசிக்கப்பட்டது...இருபுறங்களிலும் போர்ப்படைகள் அணிவகுத்து நிற்க போர் முரசு ஒலித்து போர்ப் பிரகடணம் செய்யப்போகும் நிலையில் கீதோபதேசம் ஆரம்பம் ஆகிறது.

கீதையில் உபதேசிக்கப்படும் கருத்துக்களைப் போலவே, கீதை உபதேசிக்கப்பட்ட இடமும் காலமும் முக்கியமானவை.

கீதையை உபதேசிப்பவர் யார்?.................... கிருஷ்ணபரமாத்மா.

உபதேசத்தைக் கேட்டுக்கொள்பவன்......போர்க்கலையில் வல்லவனான அர்ச்சுனன்.

போர் செய்வதா வேண்டாமா....என்று தடுமாற்ரம் அடைந்து கையில் பிடித்த காண்டீபத்தை நழுவவிடும் நிலையில் இருந்த அர்ச்சுனனின் மன மயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்த பரமாத்மா கீதையை உபதேசிக்கிறார்...அமைதியான சூழ்நிலையிலே உருவான வேதங்களின் கருத்துக்களுக்கு போர்க்களத்திலே விளக்கம் கிடைக்கிறது.இது முரன்பாடாகத் தோன்றினாலும் , இந்த முரன்பாடே கீதையின் தனிச் சிறப்பும் அழகும் ஆகும்.

அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் அவனுக்கு மட்டும் ஏற்படும் குழப்பம் அல்ல. வாழ்க்கை என்னும் போர்க்களத்திலே அனைவருக்கும் ஏற்படக்கூடிய குழப்பம் என்றுதான் கொள்ளவேண்டும்.அர்சுனனுக்கு உபதேசம் செய்து அவனுடைய குழப்பத்தை மட்டும் கிருஷ்னபிரான்

தீர்த்து வைக்கவில்லை.அதன்மூலம் மனித இனத்துக்கு ஏற்படும் அத்துனைக் குழப்பங்களுக்கும் வழிகாட்டி தெளிய வைக்கிறார்.

எது நல்லது, எது கெட்டது என்று புரியாமல் தவிக்கும் மானிட இனத்தின் பிரதிநிதியாகக் காட்சியளிக்கிறான் அர்ச்சுனன்.அவனது சந்தேகத்தைத் தீர்த்துவைத்து, தர்மத்தின் பக்கம் நின்று மனிதைனம் செயல்படவேண்டிய வழிமுஐகளை அற்புதமாக கீதையின் மூலம் விளக்குகிறார் கிருஷ்னர்.

தர்மத்தின் தன்மை, வாழ்க்கையின் பொருள், மரணத்தின் அவசியம் ஆகியவற்றை தள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதே கீதை.எனவேதான் அதர்மம் தலைதூக்கி ஆர்ப்பரிக்க, தர்மம் அதை வெல்லும் வகையில் எதிர் நிற்க...,மரணஓசை எங்கும் ஓங்காரக் கூச்சலிடும் போர்க்களம் கீதோபதேசத்துக்கு நிலைக்களனகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனித வாழ்க்கையே ஒரு முடிவில்லாத போராட்டம். உயிர்கள் எதைப் பெற விரும்பினாலும் அதற்காக அவை போராடித்தான் ஆகவேண்டும்.ஒரு உயிரை எதிர்த்து இன்னொரு உயிர் போராடித்தான் ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி.போராட்டத்தில் தோற்றுப் போகும் இனங்கள் காலப் போக்கில் அழிந்துவிடுகின்றன.அதுபோலவே வாழ்க்கைப் போராட்டத்தில் போராடத் தெரியாத மனிதனும் தனது

வாழ்க்கையில் தோல்வி அடைகிறான்.போராட்டம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.

போராட்டம் எதற்காக நடைபெறவேண்டும்?

ஏன் நடைபெறவேண்டும்?

எப்படி நடைபெறவேண்டும்?

இவை அனைத்தையும் கீதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவு படுத்துகிறது..

போர்க்களத்தில் சங்கநாதம் முழங்குகிறது. போர் முரசு ஒலிக்கிறது..ஆனால் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டவேண்டிய அர்ச்சுனன் குழப்பமுடன் நிற்கிறான். ஏன்?

அவனுக்கு எதிரில், ஞானபண்டிதரும், மகா புருஷரும், அவனுடைய பாட்டனாரும் ஆன பீஷ்மர் நிற்கிறார்.அவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணர் நிற்கிறார்.அவனுடைய பங்காளிகள் நிற்கிறார்கள்.அவன் மதித்துப் போற்றும், மாவீரன் கர்னன் போன்ற வீரர்கள் நிற்கிறார்கள்.இவர்கள் அனைவரையும் கொன்று குவிக்கவேண்டியது அவசியம்தானா என்று அர்ச்சுனன் நினைக்கிறான்..அவர்கள்மேல் இரக்கப்படுகிறான்.குருவையும், சகோதரர்களையும் போரில் கொன்று தான் வெற்றி அடைவதால் கிடைக்கப் போகும் லாபம் என்ன என்று எண்ணிப்பார்க்கிறான்.அதன் முடிவாகப் போரே வேண்டாம் என்று வில்லை நழுவவிட்டு களத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் அவனுக்குள் வலுக்கிறது.பெரும் பாவச் செயலை தான் செய்ய இருந்ததை நினைத்து மனம் பதைக்கிறான்..அவனது கரங்கள் நடுங்கிச் சோர்வடைகின்றன.நாக்கு உலர்ந்துபோகிறது....எதிரிகளைக் கண்டதுமே வில்லை இறுகப் பற்றும் அவனது கரங்கள் முதல் முறையாக வில்லை நழுவ விடுகிறது.

இவர்களைக் கொன்று தான் வாழ்வதால் என்ன பயன் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான்.

"இவர்களைக் கொன்றுவிடுவதால் மூன்று உலகங்களில் முடி சூட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தாலும் , என் எதிரே நிற்கும் எனது உறவினர்களையும் குருமார்களையும் கொன்று குவிக்க நான் சம்மதிக்கமாட்டேன்.இதனால் பாவத்தைத் தவிர எனக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்று சரமாரியாக எழுந்த வினாக்களை கிருஷ்ணபரமாத்தா புன்முறுவலுடன் எதிர் கொள்கிறார்.

"இயற்கையே ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்பதை நீ அறியவேண்டும் அர்ச்சுனா. அப்படிக் கொலைக்களமான உலகில் வந்தபின்பு, கொலையைச் செய்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.அது அஹிம்சை அல்ல.அறநெறியும் அல்ல.அதர்மத்தை அழிக்க தர்மம் நின்றுதான் ஆகவேண்டும்" என்று அர்ச்சுன னுக்கு தர்மம் என்றால் என்ன என்று தெளிவாக்குகிறார்.,

அர்ச்சுனனைப் போர் புரியத் தூண்டும் அவர் அவனை உண்மையில் ஒரு கொலைகாரனாகவா ஆக்குகிறார்? நிச்சயமாக இல்லை.

கொலைக்களமாகக் காட்சிதரும் உலகத்தில், தனக்கென்று உண்டான கடமைகளைச் செய்து மட்டுமே தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே பரமாத்மா தெளிவு படுத்துகிறார்.
 
  பக்தி யோகம்

மனத் தளர்ச்சி அடைந்து தயங்கி நின்ற அர்ச்சுனனைப் பார்த்த கிருஷ்ணபிரான், " வீரர்களுக்குப் பொருந்தாதபடி வீரனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் சோர்வு உனக்கு எப்படி உண்டானது?.போர் உடை தரித்து ஆயுதபாணியாக நிற்கும் வீரனுக்கு இப்படிக் கலக்கம் வரலாமா?.சந்தர்ப்பங்களை உருவாக்கி அதற்கு அதிபதியாக இருக்கவேண்டிய வீரன் இப்படிக் கோழையாக நிற்கலாமா?இழிவான உள்ளச் சோர்வைக் கைவிட்டு துடித்து எழு." என்றார்.

அதற்கு அர்ச்சுனன், " எனது பாட்டனாரான பீஷ்மரை எதிர்த்து நான் எப்படிப் போரிடுவது?எனது குருவான துரோணருக்கு எதிராக எனது காண்டீபத்தை நான் வளைக்க முடியுமா?" என்றெல்லாம் புலம்பினான்.

"அர்ச்சுனா....இங்குதான் நீ மாபெரும் தவறு செய்கிறாய்.!எதிரே நிற்பவர் யார் என்று பார்க்காதே.. வீரன் தனது கடமையைச் செய்யும்போது

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக்கூடது.அதர்மத்துக்கு துணையாக அவர்கள் கெளரவர்கள் பக்கம் நிற்கும்போதே, அவர்களை கொல்ல உனக்கு சகல உரிமையும் கிடைத்துவிடுகிறது.நீ குறிப்பிடும் பீஷ்மரும் துரோணரும் வீரர்கள்தான். அங்கே பார் அவர்கள் வீரனுக்குரிய கடமையினைச் செய்ய தயாராக உன் எதிரே நிற்கிறார்கள்.அதனால் நீ உனது கடமையைச் செய்" என்றார் கிருஷ்ணபிரான்.

அர்ச்சுனனும், கிருஷ்ணனை வணங்கி, " பரமாத்மாவே...நான் உன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன்.

எனது கடமைகள் என்ன என்று எனக்கு எடுத்துரைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான்.

அபோதுதான் கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு கீதையை உபதேசம் செய்கிறார்.

"யாருக்காக நீ துயரப்படத் தேவையில்லையோ, அவர்களுக்காக துயரம் அடைகிறாய்.ஞானிகள் வாழ்பவர்களுக்காகவோ இறந்தவர்களுக்காவோ துயரமே அடைவதில்லை.உன்னால் பீஷ்மர், துரோணர் என்ற இரு மனித வடிவங்களைத்தான் பார்க்க முடிகிறது.அந்த வடிவங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆத்மாக்கள் ஏறியுள்ள வாகனங்கள்தான் என்பதை அறிவாயா??

.நான்,நீ, இந்த அரசர்கள் அனைவருமே எவருமே முன்பு இல்லாமல் இருந்ததில்லை. இந்த உடல்கள் அழிந்துவிடுகின்ற காரணத்தால், நாம் இல்லாமல் போனதும் இல்லை.ஆன்மா ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு உடலை தனது வாகனமாகக் கொள்கிறது.அந்த உடலின் மூலமாக சில அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறது.ஆத்மா குடிகொள்ளும் உடலுக்குத்தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை.

இந்த சுலோகத்தில் பகவான் ஆத்மாவின் அழியாத் தன்மையைக் கூறுகிறார்.

ஹிந்து மதம் மறு பிறவியில் நம்பிக்கை கொண்டது.ஆத்மா அழிவற்றது என்னும்போதுதான் மறுபிறப்பு சாத்தியம் ஆகிறது.

சில சமயங்களில் ஐந்து வயதுக் குழந்தை ராக சுத்தமாகப் பாடுவதைப் பார்க்கலாம்.10 வயதுச் சிறுமி எவ்வளவு கஷ்டமான கணக்கிற்கும் நொடியில் விடை கூறுவதைக் காண்கிறோம்.5 வயதுக் குழந்தை ராகப் பயிற்சி பெற்று இம்மியளவும் பிசகாமல் பாடுவது இயலாத காரியம்..

10 வயதுக் குழந்தை கணிதத்தைப் படித்து மேதாவியாக விளங்குவதும் இயலாத காரியம்தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் விளக்கம் என்ன???ஆத்மாவின் அழியாத்தன்மை, மறுபிறப்பு இவற்றைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

ஐம்புலனும் உடலோடு சம்பத்தப்பட்டதினால், குளிர்,வெப்பம், இன்பம் துன்பம் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றன.அது ஆத்மாவுக்கு உரியது அல்ல.அதனால்தான் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்ட ஞானிகள் எதனாலுமே கலக்கம் அடைவதில்லை.

இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக யார் கருத்தில் கொள்கிறார்களோ அவர்களே ஞானியாகியாகிறார்கள்.இன்ப துன்பங்களினால்

பாதிக்கப்படாமல் வாழ்வது என்றால், ஒருவன் மரக்கட்டைபோல் இருக்கவேண்டும் என்று பொருள் அல்ல.

"எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வது வேறு.

உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் வாழ்வது என்பது வேறு" இந்த உண்மையை உணர்பவன் ஆத்ம சொரூபத்தில் கலந்துவிடுகிறான்.

உலகமெல்லாம் பரவிய பொருள் அழிவற்றது. அழியாப் பொருளை அழிக்க யாராலும் முடியாது.

அழிவற்ற மெய்தான் உலகெங்கும் வியாபித்து நிற்கிறது

உதாரணத்துக்கு களிமண்ணை எடுத்துக்கொள்வோம்.அதைப் பயன்படுத்திப் பானை செய்கிறோம். குடம் செய்கிறோம்.

கூஜா செய்கிறோம்.தட்டு, பொம்மை என்று விதம் விதமாகச் செய்கிறோம்.செய்யப்பட்ட பொருள் ஒவ்வொன்றையும் தோற்றத்தைக் கொண்டு விதம் விதமான பெயரிட்டு அழைக்கிறோம்.இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஆதாரமான பொருள் களிமண்தானே?

மண்ணில் இருந்து அவை உருப்பெறுகிறது. அழியும்பேந்து மண்ணுடன் கலந்துவிடுகிறது.

இதில் மண் மட்டுமே மெய். மற்றதெல்லாம் பொய்.

ஆகவே இந்தப் பிரபஞ்சத் தோற்றத்துக்கும் ஆதாரமாக அழியாத மெய்ப்பொருள் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது.

இதையெல்லாம் அர்ச்சுனனுக்குக் கூறிய கிருஷ்ணபிரான், உடல்களை அழிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மத்தை நிலைநாட்டு

என்கிறார். அர்ச்சுனன் பீஷ்மரது உடலை அது பீஷ்மர் என்று எண்ணுவது தவறல்லவா? அவன் பீஷ்மரின் உடலை மட்டும்தான் அழிக்கப் போகிறான். பிஷ்மரை அல்ல!! ஏனென்றால் ஆத்மா அழிவது இல்லை

ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

துன்பம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளை ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு அந்தச் செயலை செய்யவேண்டும்.அதனால் நீ எந்தவித இழப்பையும் அடையமாட்டாய்.

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பது அறிவுப் பூர்வமானது.

லாபத்தையும் நட்டத்தையும் ஒன்றாகக் கொள்வது மனது பூர்வமானது.

வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்ப்பது தேகப் பூர்வமானது.

இந்த மூன்றில் இரண்டு குணங்களை பெற்றாலே அவன் கர்மயோகி ஆகிவிடுகிறான்.

கடலில் செல்லும் ஒருவன் அலைகளே இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்டது கடலின் குணம்.அந்தக் குணத்தை ஏற்றுக்கொள்பவன்தான் கடலில் பயணம் செய்யமுடியும்.

அதுபோலதான், வாழ்க்கையிலும். இன்பம் துன்பம் வெற்றி தோல்வி, என்னும் அலைகள் இல்லாமல் வாழ்வென்பதே கிடையாது.

அலைகளுக்குப் பயந்துவிடக் கூடாது. அதே சமயம் அலைகளால் அடித்துச் சென்றுவிடாமல் துணிச்சலாக வாழவும் வேண்டும்.

இத்தகைய வாழ்க்கையை ஒருவன் பெறவேண்டுமானால், அவன் தன்னைப் பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

கடமை எது என்று ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் பிறகு எப்படிச் செயல்படுவது என்பதில் குழப்பம் இருக்காது.

எந்த ஒன்றிலும் பர்றில்லாமல் அவன் கடமையைச் செய்தால் அவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

புதன், 16 நவம்பர், 2016

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.
தொன்று தொட்டே நம் மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.
சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன.
மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.
தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.
சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் :
*சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்.
*சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும்.
*ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.httsp;//www.danvantarinadi.com.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உடல்நலம் தரும் சூரிய நமஸ்காரம்

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும். நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
உடல் பொலிவடையும்:
சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில்
அறியலாம்.
தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது. சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும். சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம்.
அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.www.danvantarinadi.com.

புதன், 12 அக்டோபர், 2016

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!



தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

www.danvantarinadi.com

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம்.
வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.
அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.
இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது.

ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம். தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.



தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்: கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
தீபாவளி பண்டிகையின் வரலாறு தீபாவளிப் பண்டிகையின் வரலாறு தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.
தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.
தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.

இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.
முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.
அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.
தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக
கருதுவதில்லை . இருப்பினும் மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள்தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர் .
பெயர்க் காரணம்
‘ தீபம் ‘ என்றால் ஒளி , விளக்கு .’ ஆவளி ‘ என்றால் வரிசை . வரிசையாய்
விளக்கேற்றி , இருள் நீக்கி , ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம் . ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம் , பொறாமை , தலைக்கணம்
போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும் . ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும் .

தோற்ற மரபு
இந்துக்களின் தீபாவளி
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை , புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர் .
இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது  பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
புராணக் கதைகளின் படி
நரகாசுரனின் நிஜப்பெயர்: நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஸ்கந்தபுராணத்தின் படி , சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
தீபாவளியின் பெருமை: 
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது.
உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
சீக்கியர்களின் தீபாவளி
1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .
சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர் . இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.
வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.
சகோதரிகளுக்கு பரிசு: 
தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.
தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் .
அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .
பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் .
தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு .
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு
காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில்
பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக
கருதப்படுவதேயாகும் .
அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் ” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

புதன், 5 அக்டோபர், 2016

நியாய தராசில் - ராவணன்

 உலக அரங்கில் பேசப்படும் இயக்குனர் மணிரத்னம் இயக்கதில் 'ராவணன்'. தமிழ் ரசிகர்களை முழுக்க முழுக்க ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கும் படம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. இது படம் பார்த்த அனைவருக்கும் தெளிவாவே  விளங்கியிருக்கும். அப்படி என்ன ஏமாற்றம்? தமிழுக்கு நியாயம் செய்வதை விட இந்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணி.  இது இராமாயணம் அல்ல, ராவணன் என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் புனைபெயர் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார் இயக்குனர்.

வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். வீரா, ஊர் மக்களைப் பொருத்த அளவில் அவன் காவல் தெய்வம். சட்டத்தின் பார்வையில் தீவிரவாதி. அதனால் அதிரடிப்படை அவனைத் தேடி வருகிறது. ஆனால் வீரா தீவிரவாதி என்று சொல்லப்படுவதற்கு ஒரு நியாயமான காரணம் கூட திரையில் காட்சியாக வரவில்லை. டி.ஜி.பி தேவின் மனைவியை (மனைவி ராகினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன்) வீரா கடத்தி சென்ற பிறகே வீரா குற்றவாளியாக கருதப்படுகிறான். அந்தக் குற்றத்திற்காகத் தான் சட சடவென குண்டுகள் தெரிக்க வீராவை சுட்டுத் தள்ளுகிறார் தேவ். அப்படியானால் வீரா முதலில் தேடப்பட்டு வருவதற்கான காரணம்???


படத்தில் காட்டப்படும் மலைப் பகுதிகள் திருநெல்வேலியை சார்ந்தவை என சொல்லப்படுகிறது. ஆனால், அம்மக்கள் எதை சார்ந்தவர்கள், அவர்கள் கலாச்சாரம், அவர்கள் வாழ்க்கை முறை எதுவுமே படத்தில் காட்சியாக காட்டப்படவில்லை. அவர்கள்  பிரச்சனை தான் என்ன? வீராவை எதற்காக அவர்கள் நம்புகிறார்கள், எதுவுமே படத்தில் இல்லை. 

              

வீராவின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ஃப்லாஷ் பேக்கில் வரும் ப்ரியாமணிக்கு அரண்மனையில் திருமணம்  நடக்கிறது. என்னடா இது? சரி அதை விடுங்கள், திருமணத்தின் போது வீட்டுக்குள் அரவாணிகளின் ஆட்டம். தமிழ் நாட்டில் இப்படி ஒரு திருமணமா? இது போன்ற காட்சிகளில் மிகவும் தெளிவாகவே புரிகிறது... தமிழ் ராவணன் இந்தி ராவணின் போட்டோ காப்பி என்று! 

வீராவாக வரும் ராவணன், தான் ஒரு ’எச்சக்கை’ என்று தானே சொல்கிறான். தன்னைத் தானே அவன் அப்படி இகழக் காரணம்? காவல் தெய்வமாக கருதப்படும் வீரா ’எச்சக்கையா’? அதுவும் அதை அவன் வாயாலேயே சொல்வதா?  இராமாயணத்தில் இராவணன் தன்னைத் தானே இகழ்ந்துகொண்டதாக எதுவும் இல்லையே.  ஒரு காட்சியில் உடைந்துபோன கடவுள் சிலை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கடவுளிடம் சென்று காப்பாற்றும்படி கேட்கிறாள் ராகினி. அப்போது தன் கணவனைப் பற்றி வீராவிடம் சொல்லும் ராகினி. தன் கணவன் ஒரு கடவுள் மாதிரி என்று சொல்ல, உடனே வீரா மிகவும் ஆக்ரோஷமான குரலில், கடவுளா? நான் பிசாசு, அனைத்தையும் விடப் பெரியவன் என்று கத்துகிறான்.அப்படியானல் கடவுளை எதிர்க்கிறவனா இராவணன்.  அப்படியானால் இராவணன் சிவபெருமான் பக்தன் என்பதும் அவன் பல  பூஜைகளை ஆதரித்தவன் என்பதும் மணிரத்தினதிற்கு தெரியாமல் போனதா?? 

இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும், இவை அனைத்தும் சினிமாவிற்கான சமரசங்கள் என்று எடுத்துக் கொள்வோம். டெக்னிகல் விஷயத்திற்கு வருவோம். இராவணன் படத்தைப் பொருத்த அளவில் பல ’செட்டு’கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ’செட்டு’தான் என்று பார்க்கும் ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். இதுவே படத்தின் முதல் பலவீனம். படத்தில் இயல்பு தொலைந்து, வண்ணம் பூசப்பட்ட அட்டை சுவருகளாய் காணப்படுகிறது.

                 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சத்தமாகவோ, மௌனமாகவோ எதையோ ஒன்றை செய்துகொண்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். விக்ரம் மலைமேல் இருந்து சரிந்து விழும்போது துவங்கும் ’உசுரே போகுது’ பாடல்...  மெய் சிலிர்க்குது. ஆனால், ’காட்டு சிரிக்கி’  போன்ற பாடல்கள் வீணடிக்கப்படிருப்பதே இங்கு வேதனை. அதில் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூடவே வைரமுத்துவின் வரிகளும் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. 

சுஹாசினி மணிரத்னத்தின் வசனங்கள், சில காட்சிகளில் சாதாரண தமிழில் இருக்கிறது, அடுத்தக் காட்சியில் வட்டார வழக்காக மாறிவிடுகிறது. சில வசனங்கள் புரிந்தாலும் அது எதற்காக வருகிறது என்பது புரியவில்லை.

படத்தின் காட்சிக் கோர்ப்புகள் கத்தரி போட்ட கதர் துணி மாதிரி சிதறிக்கிடந்தன. பிரபு, ப்ரியாமணி, கார்த்திக், ஏன் விக்ரம்,  ஐஸ்வர்யா ராய் அனைவரின் கதாப்பாத்திர படைப்பிலும் ஒரு அழுத்தமான பதிவு இல்லாமல் போனது என்பதே உண்மை. இந்த நடிகர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதே இதில் இன்னொரு உண்மை. ராவணன் படத்தின் மூலம் விக்ரமிற்கு  கிடைத்த ஒரே பலன் இந்திக்கு ஒரு எண்ட்ரி மட்டுமே.  ஆனால், இவை அனைத்தையும் சரிசெய்யும் வகையில் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் கேமரா வித்தைகள். கேமரா வித்தைகளுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

இராவணன் இறக்கும் போது வரும் பாடல் இது, நான் வருவேன்... மீண்டும் வருவேன்... உனை நான் தொடர்வேன், உயிரால் தொடுவேன்... இதற்கான அர்தத்தை மணி அடுத்த படத்தில் சொல்வாரோ!

விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா? : மறைக்கப்பட்ட உண்மை!

இது ஒரு புதிய தொடர் பதிவு : “அறிந்ததும் மறந்ததும்” என்ற தலைப்பில் நாம் அறிந்த அறிவியல் விஞ்ஞானத்தையும் அதை சார்ந்த நம்ப முடியாத ஆனால் உண்மையாக இருக்க கூடியதுமான விடையங்களைப்பற்றி பேச உள்ளேன்/ளோம். ஏற்கனவே ஏலியன்ஸ், லெமூரியா பதிவுகளில் இவ் விடையங்களை தொட்டிருந்தேன். ஆனால் இங்கு தெளிவாக பேசலாம். இப் பேச்சு “நம் அறிவில்” பற்றி பலர் சிந்திக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். :)
விமானம்,
அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம்.
பறவை வாணில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியக்க செய்தனர்.
இது இருக்கட்டும் அனைவரும் அறிந்த தகவல் தான், ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் புகைப்பட ஆதாரங்கள் இருக்கவில்லை. மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டினார், ஆனால் தரையிறக்கும் போது விமத்திற்குள்ளானதில் விமானம் முற்றாக சேதமடைந்தது. மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டனர்/ இது பலரும் அறியாத ஒரு வரலாற்றுதகவல்.
ஆனால், நாம் இங்கு பார்க்க நினைப்பது அது அல்ல…
நம் இராமாயணத்தில் விமானங்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இராவணன் பயண்படுத்திய புட்பக/புஷ்பக விமானத்தை கருதலாம். மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் சாதனம் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளதிற்கு இது ஒரு உதாரணம். ஆனால், சான்றுகள் / படிவுகள் என்று பார்த்தால் இந்த உதாரணத்தின் பெறுமதி இன்றைய திகதி வரைக்கும் பூச்சியம் தான். அதனால், நாம் இராமாயணத்தை கொண்டு விமான தொழில் நுட்பத்தை பற்றி விவாதிப்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனால், விவாதிப்பதற்கு எகிப்து இருக்கிறது!
எகிப்து சுமார் 10000 – 5000 ஆண்டுகளுக்கு முட்பட்ட ஒரு ராச்சியத்தின் எச்சங்களை கொண்டு இன்றும் உலகின் தொழில் நுட்பத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு மர்ம பூமி என்று சொல்லலாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் அதன் அமானுட தொழில் நுட்பத்திற்காக இன்றுவரை ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அப்படி எகிப்தை ஆராய்ந்த போது அச்சு அசலாக இன்றைய விமானத்தை ஒத்த பல உருவங்கள் / பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ( இங்கு இருக்கும் படங்களில் நீங்கள் காண்பது எகிப்திய அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உருவங்களையே.)

இந்த உருவங்கள் நிச்சயமாக உங்களிடையே பல கேள்விகளை உருவாக்கும். விமானத்தை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் கண்டுபிடித்து கொண்டாடினோம். ஆனால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனரே அது எப்படி? அந்த அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருந்தால் பிற்காலத்தில் அது ஏன் அழிந்தது? என்ற பல கேள்விகள் எழும்.

சிலர் நினைக்கலாம், பெரிய அளவில் விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை வெறும் உருவ பொம்மைகள் தானே, அது அவர்களின் கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம் என்று.
ஆனால், அந்த சின்ன உருவங்களை கவணமாக பார்த்தோமானால் மேலும் வியப்பு காத்திருக்கிறது. ஆம், அதன் செட்டைகள் மற்றும் பின்புற அமைப்பு என்பன இன்றைய விமான அமைப்பை 100% ஒத்துள்ளது. ( காற்றில் விமானம் தளம்பாது பயணிக்க உதவும் பின் புற அமைப்பைக்கூட அந்த பொம்மையில் வடித்துள்ளார்கள். ஏன்? எப்படி? )
இதுவும் திருப்தியான சான்றாக இல்லை என்பவர்கள்… கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள். இவை பூமியின் பல்வேறு இடங்களில் மலை முகடுகள் தரைகளை மட்டமாக்கி உருவாக்கப்பட்ட பண்டைய விமான ஓடுதளங்கள்!
நாம் நவீன விமானத்திற்கான ஓடு தளங்களை எப்படி உருவாக்கியுள்ளோமோ, அதே போல் உண்மையை சொன்னால் எம்மை விட ஒரு படி மேலே மிகப்பிரமாண்டமான முறையில் அவர்கள் இந்த ஓடு தளங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இன்றைய இந்த “அறிந்ததும் மறந்ததும்” தகவல் இதோடு நிக்கட்டும்.
இதற்கும் “எம் அறிவியல்” இற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நிச்சயம் நீங்கள் “லெமூரியா” பதிவை வாசிக்க வேண்டும். அப்போது தான் எகிப்து உருவாகியது எப்படி? அதற்கு மூலகாரணம் யார் என்பதை அறிந்து வியப்பீர்கள். :)
மீண்டும் அடுத்த வாரம் இதன் தொடர்ச்சி உடனும்  வேறு ஒரு தெரியாத தகவலுடனும் சந்திப்போம்!
உங்கள் விவாத கருத்துக்கள் நிச்சயம் இந்த ஆக்கத்தை செம்மையாக்கும். :) நான் விட்ட பிழைகளை திருத்தி வாசிப்போருக்கு சிறந்த தகவலை வளங்கும். :)
“விமான சாஸ்திர” இதைப்பற்றி தகவல் தெரிந்தோர் பகிர்ந்துகொள்ளவும் நன்றி

தமிழர்களின் வர்மக்கலை ஒரு அதிசயம்