புதன், 5 அக்டோபர், 2016

சங்கத்தமிழரின் வணிக வளம்

அது 1836ம் ஆண்டு.
கப்ரன் (ஜேம்ஸ்) குக் என்ற ஐரோப்பியர் அங்கு கால் பதித்து 66 ஆண்டுகள் ஆகியிருந்தன.
நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவோரி ப+ர்வீகக்குடியினர் வாழும் கிராமம்.
அந்தக்கிராமத்துக்கு ‘வில்லியம் கொலின்சே’ என்ற கிறிஸ்தவ திருச்சபை ஊழியர் வருகிறார். அங்கு கண்ட ஒரு காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உலோகப் பாவனையை அதிகம் அறிந்திராத அந்தப் பழங்குடி மக்கள் ஒரு வெண்கலப் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாத்திரத்திற்கும் அவர்களது வாழ்வியலுக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை அவர் உணர்கிறார். அந்தப் பாத்திரத்தைப் பற்றி அவர்களிடம் கேட்கிறார். அவர்கள் தமது மூதாதையர் வழியே அந்தப் பாத்திரம் வந்ததாகச் சொல்கிறார்கள். கொலின்சே வேறொரு இரும்புப் பாத்திரத்தைக் கொடுத்து அந்த வெண்கலப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
கொலின்சே அந்தப் பாத்திரத்தை ஆராய்ந்தபோது அது ஒரு வணிகக் கப்பலினுடைய மணி என்பது தெரியவருகிறது. அந்த மணியில் அந்தப் பிரதேசத்துக்குத் தொடர்பில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவ்வாறாயின் அங்கு ஐரோப்பியருக்கு முன்பே யாரோ வந்து போயிருக்க வேண்டும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மணி நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களுக்கும் அதிலிருந்த எழுத்துகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆய்வாளர்கள் அது ஒர் இந்திய மொழி என்பதை எழுத்து வடிவத்திலிருந்து கண்டறிகிறார்கள். அந்தப் படத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.
இந்தியாவில் அதைப் பார்த்ததும் அது என்ன மொழி என்பது தெரியவருகிறது. அத்தோடு அந்த எழுத்துகள் எழுதப்பட்டிருந்த விதத்திலிருந்து அது கி.பி 1450ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதையும் அறிகிறார்கள். இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த மொழியைப் பேசுபவர்கள் கப்ரன் குக் கால் பதிப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரேயே நிய+சிலாந்துக்குப் போயிருக்க வேண்டும்.
அந்த மொழி “தமிழ்” அதில் எழுதப்பட்டிருந்த வசனம் “முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி” என்பதாகும்.
பெருஞ்சிறப்புக்குரியதான தமிழரது கடல் வணிகம் நீண்டகாலத்திற்கு முன்பே கிழக்கே மாவோரி மக்களுடனும் தொடர்புபட்டிருந்தமையி;ன் சான்றாக இம் மணியைக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர். மாவோரி மக்கள் பேசும் மொழிக்கும் தமிழுக்கும் பலவித தொடர்புகள் இருப்பதாக டெய்லர் என்னும் மற்றுமொரு துறவியார் குறிப்பிட்டிருக்கின்றார் என ந.சி. கந்தையாபிள்ளை தமது நூலொன்றில் எழுதியிருக்கின்றார்.
இது போன்ற தமிழரது கடல் கடந்த வணிகச் சான்றுகள் பல அண்மைக்காலத்திலே கிடைத்துள்ளன. அவற்றை அறிவதற்கு முன்பாக பண்டைக்காலத் தமிழரது வணிக மேலாண்மையைச் சற்றே விரிவாக நோக்குவோம்.
அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் தன்னறைவு கண்ட ஒரு சமூகத்தின்  அடுத்த நிலை வளர்ச்சியானது வணிகத்தை நோக்கி நகர்ந்ததாக இருக்கலாம் என்பதற்கமைய தமிழர் வரலாறு பல்வேறு வணிகச் சிறப்புகளைத் தாங்கி நிற்கின்றது. பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுதல், கொடுத்து வாங்குதல் என்ற பண்புநலன்களின் அடிப்படையில் தோற்றங்கொண்ட வாணிப இயல்பைத் தமிழ் இலக்கியங்கள் போற்றி நிற்கின்றன.
பொருள் ஈட்டுவது என்ற குறிக்கோள் மட்டுமின்றி, உலக நன்மைக்காகவே வணிகம் நடைபெற்றதாக முன்னோர் கருதினர். பல இடங்களில் விளையும் பொருட்களை ஓரிடத்தில் சேர்த்து அவை கிடைக்காத வேறிடங்களுக்கு அனுப்பி யாவரும் வறுமையற்றிருக்க வணிகர் வழி தேடினர். அத்தகைய வணிகரின் பண்பைப் பண்டைய இலக்கியங்களிலே காணலாம்.
“நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்நெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் மொப்பநாடிக்
கொள்வதூஉ மிகைகொள்ளாது
கொடுப்பதூங் குறைபடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”
‘சமன்செய்யும் கோல் போல் நடுநிலை தவறாத நெஞ்சோடு, குற்றங்களுக்கு அஞ்சி கனிவாகப் பேசி, உறவினர், பிறர் என வேறுபாடின்றி ஒப்ப நோக்கி, பெறுவதை அதிகமாகப் பெறாமலும் கொடுப்பதைக் குறைவின்றிக் கொடுப்பதாயும் பல்பண்டங்களையும் பகிர்ந்து கொடுப்போரே நல்வணிகர்’ என்கிறது பட்டினப்பாலை.
திவாகரம் என்னும் நிகண்டு வணிகர் இயல்பை மேலும் சிறப்புறக் கூறுகின்றது.
“தனிமை யாதல் முனிவி லனாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவதஞ் சாமை
ஈட்டல் பகுத்தல் என்றிவை யெட்டும்
வாட்டம் இல்லா வணிகர தியற்குணம்”
தமிழர் சிறப்பாகப் போற்றிய அறுவகைத் தொழில்களான உழவு வணிகம், நெசவு, தச்சு, மட்பாண்டஞ் செய்தல், கொல்லர் என்பவற்றுள் வணிகம் உழவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெறுவதைக் காணலாம்.
வள்ளுவரும்,
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்”  என்கின்றார்.
“இருவகையா னிசைசான்ற
இருகுடிப் பெருந்தொழுவர்” என்ற மதுரைக்காஞ்சி எனும் இலக்கிய வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “ உலகத்துத் தொழில்களில் மேலாகச்; சொல்லும் உழவு, வணிகம் என்ற இரண்டு கூற்றாலே…” என்கின்றார்.
பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் கடல் கடந்த வணிகத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்கின்றது. பெரும் மரக்கலங்களைக் கட்டுவோர் ‘கலம்புணர் கம்மியர்’ என இலக்கியங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்ட வணிகத்தொழில் உள்நாட்டிலும், கடல் கடந்தும் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களும், வெளிநாட்டார் குறிப்புகளும், செப்பேடுகள், கல்வெட்டுகள் எனபனவும், அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளும் ஆழ்கடல் கண்டுபிடிப்புகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
கடல் கடந்த வணிகம்
இயேசு பிறப்பதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் மேற்குத் திசையில் பபிலோனியா, எகிப்து, பாலஸ்தினியம், மெசபத்தோமியா, உரோமாபுரி, கிரேக்கம் போன்ற நாடுகளுடனும், கிழக்கே சீனம் சாவகம், ஜாவா போன்றவற்றுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.
ஏலம், இலவங்கம், மிளகு போன்ற தமிழகத்துப் பொருட்கள் பிற நாடுகளில் பெரும் விலைக்கு வாங்கப்பட்டன. கி.மு.1490இல் யூதர்களின் தலைவராகிய மோஈசன் தமது வழிபாட்டின் போது ஏலக்காயைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
மேற்காசிய நாடுகளான பபிலோனியா, மெசப்பத்தோமியா போற்றவற்றோடு தமிழர் நெருக்கமான வணிகத் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பபிலோனியாவில் நிப்பூர் இடத்தில் நாணயம் பரிமாறப்பட்டு வணிகம் நடந்நதாகவும், களிமண் தட்டுகளில் வரவு செலவுக் கணக்குகள் பதியப்பட்டிருந்தததாகவும், அதில் தமிழ் வணிகக் கணக்குகளும் இடம் பெற்றிருப்பதாகவும் முனைவர் அ. தட்சணாமூர்த்தி குறிப்பிடுகிகின்றார்.
கி. மு எட்டாம் நூற்றாண்டில் இசுரேல் நாட்டை ஆட்சி செய்த சொலமன் என்னும் மன்னனது கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை, அகில் தோகை, குரங்கு, தங்கம், வெள்ளி போன்ற பல அரிய  பொருட்களை இக்கப்பல்கள் கொண்டு வந்தன என்ற செய்தி பைபிளின் பழைய ஏற்பாட்டில் முதலாம் அரசர் ஆகமத்தில் 10ம் அதிகாரத்தில்  குறிக்கப்பட்டுள்ளது. எபிரேபிய மொழியில் காணப்படுகின்ற குரங்கினைக்(கவி); குறிக்கும் ‘கபிம்’, தோகையைக் குறிக்கும் ‘துகிம்’, அகிலினது நறுமணத்தைக் குறிக்கும் ‘ஆல்மக்’ என்ற என்ற சொற்கள் தமிழில் இருந்து சென்றவையே என்று கூறும் டாக்டர் கே. கே. பிள்ளை இப் பரிசுப் பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையே எனத் தென்னிந்திய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சொலமனைக் காணச் சென்ற தென் அரேபிய அரசியான சோபா என்பவள் கையுறையாக ஏகப்பட்ட வாசனைப் பொருட்களை  எடுத்துச் சென்றதாக பைபிள் மேலும் கூறுகின்றது. இந்த வாசனைப்பொருட்கள் யாவும் தமிழகத்திலிருந்து சென்றவையே முனைவர் அ. தட்சணாமூர்த்தி பண்பாடும் நாகரிகமும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
Pசipடரள என்ற கப்பற் பயணவழி நூலை மீள்பதிப்புச் செய்த றுடைகசநன ர்யசஎநல ளுஉhழகக  என்பவர் “கிரேக்க மக்கள் அநாகரிகத்திலிருந்து விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. பாரசீக வளைகுடாவுக்கு வடக்கே இந்நாடுகள் ஒன்றோடு ஒன்று பண்டமாற்றுச் செய்துகொண்டன” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ. தட்சணாமூர்த்தி தன நூலில் ஆமலும் குறிப்பிடுகின்றார்.
தமிழகத்திற்கும் சுமேரியருக்குமான வணிகத் தொடர்புகள் குறித்தும் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ன. சுமேரியரின் தலைநகரின் பெயர் ‘ஊர்’ ஆகும். அங்கே காணப்படுகின்ற சிதைவுகளில் சேரநாட்டுத் தேக்கு மரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. மூவாயிரத்திற்கு முன்னர் அழிவுற்றமையால் இம்;மரத்துண்டுகள் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கருதுகின்றனர்.
தமிழர் எகிப்தியரோடு கொண்டிருந்த வணிகம் மிகவும் தொன்மையானது. கி.பி 15ம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய கல்வெட்டொன்றில் இலவங்கப்பட்டை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இது சேரநாட்டுப் பொருள் என்பதில் ஐயமில்லை. எகிப்திய மன்னர் மெல்லிய மசுலின் துணி வகைகளையும் கருங்காலிக்கட்டைகளையும் இலவங்கம் பட்டைகளையும் தமிழகத்திலிருந்து பெற்றதாகத் தென்னிந்திய வரலாறு என்னும் நூல் கூறுகின்றது.
கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்டும் தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட சிதைந்த களஞ்சியச் சாடி ஒன்று எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த எழுத்துகள் கி;.மு. முதலாம் நூற்றாண்டுக்குரிய தமிழ் லிபி எழுத்துகளே’ என ஐராவதம் மகாதேவன் உறுதியிட்டுக் கூறியுள்ளார். இந்த எழுத்துகள் ‘பானை ஓரி’ என்ற பொருள் தருகின்றது. ஓரி என்பது உரியைக் குறிக்கும் என்பர். இது போன்ற இரு சாடிகள் 30 ஆண்டுகளுக்கு முன்பும் செங்கடலின் கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சாடிகள் தமிழர் வணிகத்தொடர்புகளுக்குப் பெருஞ்சான்றாகத் திகழ்கின்றன.
தமிழகம் வந்த எகிப்தியர் கரிகாலன் கட்டிய கல்லணையைக் கண்டு வியந்ததாகவும், கரிகாலனின் பொறியியலாளரே நைல்நதிக்குக் குறுக்கே அணை கட்ட உதவியதாகவும், சிக்காக்கோ பல்கலைக்கழகக் குறிப்புகளை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டு வரும் கூரியர் இதழின் முன்னாள் ஆசிரியர் மணவை முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். நைல் ஆற்றின் துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியாவில் நூற்றுக்கணக்கான இந்தியர் குடியேறியிருந்தனர் என்ற செய்தியையும் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் தெரிவிக்கின்றது.
தென்னாபிக்காவுக்கும் தமிழருக்குமாக பண்டைய வணிகத் தொடர்புகள் குறித்துத் தற்போது வெளிவரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன. தென்னாபிக்க வரலாற்றாசிரியர் னுச. ர்சழஅnமை என்பார் பண்டைய ஆபிரிக்க வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்த போதும் நிறவெறி ஆட்சியின் முடிவுக்குப் பின்னரே அவற்றை வெளியிட முடிந்தது என்கின்றார். இவர் வெளிப்படுத்தும் பல உண்மைகள் ஆபிரிக்கா குறித்து நிலவிவந்த பல கருத்துகளைத் தகர்த்து வருகின்றன.
அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கும் கடற்பயணக்காட்சி தென்னிந்தியர்களின் வருகையை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். தங்கம், தந்தம் போன்றவற்றைத் தமிழ் வணிகர் மொசாம்பிக், சிம்பாவே போன்ற இடங்களில் இருந்து பெற்றதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்து அவற்றைக் குடைந்து தங்கம் பெறுவதற்காகத் தமிழர் தனித்துவமான குடியிருப்புகளை ஏற்படுத்தி அங்கு தங்கியிருந்தனர் எனவும் இவர் தெரிவிக்கின்றார். hவவி:ஃஃதழாடெடிசயனகநைடன.உழஅ என்ற இணைத்தளம் இச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றது.
கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர் மேலைநாடுகளோடு வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். எனினும் கி.மு. 500 க்குப் பின்னரே ஐரோப்பியரோடான வணிக உறவுகள் ஏற்பட்டன. தமிழக வணிகர் பொருட்களை மேற்காசியாவரை எடுத்துச் செல்ல, கிரேக்கர்களே அவற்றை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர். தென்னிந்தியப் பொருட்கள் பலவற்றின் பெயர்கள் இன்றும் கிரேக்க மொழியி;ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் கடற்பயண வழிகளைக் கண்டறிந்த கிரேக்கர் தமிழகத்திற்கு வந்து பொருட்களைக் கொள்வனவு செய்யத் தொடங்;கினர். பொருளாதாரம் மட்டுமன்றி இரு தரப்பாருக்கும் இடையே அரசியல் உறவுகளும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
தமிழகப்பொருட்கள் பற்றி உரோமர் கிரேக்கர்களிடமே தெரிந்துகொண்டனர். கிரேக்க மன்னன் ஒகஸ்டஸ் கி.பி. 30இல் எகிப்தை வெற்றிகொண்டான். அதன் பின்னரே தமிழகத்தோடான வணிகத் தொடர்பை உரோமர்கள் ஏற்படுத்தினர். ஒகஸ்டஸ் காலத்தைச் சார்ந்தவரான ‘ஸ்டிராபோ’ என்பார் கி.பி. 60இல் எழுதிய பெரிப்புளுஸ் என்னும் பயணவழிநூல் தமிழக வணிகத் தொடர்புகளை மிக விரிவாகக் கூறுகின்றது. பிளைனி கி.பி. 70இல் எழுதிய ‘இயற்கை வரலாறு’, தொலமி எழுதிய ‘பூகோள விவரணம்’ போன்ற நூல்களும் தமிழகத்திற்கும் ஐரோப்பியருக்கும் இடையே நடைபெற்ற வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
அரிக்கமேடு என்னுமிடத்தில் இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பல பொருட்களோடு, கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்களும் இவ்வணிகத் தொடர்புகளை உறுதிசெய்கின்றன.
அரேபிய, கிரேக்கக் கப்பல்கள் முசிறி என்னும் துறைமுகத்தில் நிறைந்து நின்றதாகப் பெரிப்புளுஸ் தெரிவிக்கின்றது. பாண்டிய மன்னனின் தூதுவர் ஒகஸ்டஸ் மன்னிடத்தே சென்றதாகவும், உரோமக் குடியிருப்புகள் மதுரையில் அமைந்திருந்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கின்றார். உரோம வணிகத்தின் விளைவாக ஆண்டுதோறும் 6 இலட்சம் பவுண் தங்கம் தமிழகத்திற்குக் கிடைத்ததாகக் குறி;ப்புகள் கூறுகின்றன. கி.பி 68க்குப் ‘பின்வெஸ்பேசியன்’ என்னும் மன்னன் உரோமிற்கு அரசனானான் எனவும், அவன் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்ததன் விளைவாகத் தமிழகத்தோடான வணிகம் வீழ்ச்சியடைந்ததாகவும் முனைவர் தட்சணாமூர்த்தி எழுதுகின்றார். கி.பி. 3க்குப் பின் வெளியான உரோம நாயணங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. 4ம் நூற்றாண்டுக்குப் பின்னான நாணயங்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பியர்களைத் தமிழர் ‘யவனர்’ என்றே இலக்கியங்களில் குறித்துள்ளனர்.
இவ்வாறான வெளிநாட்டார் குறிப்புகளோடு ஒத்திசைந்து பல்வகைச் சான்றுகளை வெளிப்படுத்துகின்றன சங்க இலக்கியங்கள்.
வெளிநாட்டார் பொன்னோடு வந்து மிளகோடு சென்ற செய்தியை,
“யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” என அகநானூறு தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் பொன் பெருகுவதற்குக் காரணமான சிறந்த பண்டங்களை பெரிய மரக்கலங்களில் ஏற்றிச் சென்றனர் என்ற செய்தியை,
“பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்” எனக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி.
யவனர் குளிர்மையான மது வகையறாக்களை எடுத்து வந்தனர் என்னும் செய்தியை,
“யவனர் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுக்க” எனப் புறநானூறு கூறுகின்றது.
மேலாடை அணிந்து ஐரோப்பியர் காவல் காத்த செய்தியை,
“மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கவர் யவனர்” என மற்றுமொரு புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.
மேலை நாடுகளைப் போன்றே கீழைநாடுகளுடனும் தமிழர் பெருவணிகம் நடத்தினர். சீனாவுடனான வணிகம் குறித்துப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகளு;ககு முன்பே சீன வணிகம் வளர்ச்சி பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கி;மு. 7ம்நூற்றாண்டில் தமிழகத்துப் பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டிருப்தாகவும், சீனப் பொருட்களான சீனப்பட்டும், சீனியும் தமிழகத்திற்கு வந்தன என்றும் முனைவர் தட்சணாமூர்த்தி கூறுகின்றார். சீனாவில் இருந்து வந்தமையினாலேயே சக்கரைக்குச் சீனி என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கூறுவர். கி.மு. 2ம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயங்கள் தாலிக்கோட்டை என்னும் கிராமத்திலும், ‘ஒலயக் குன்னம்’ என்னும் ஊரிலும் அதிகளவில் கிடைத்துள்ளன. தமிழர் கீழைத்தேய நாடுகளிற் பொருட்களைப் பெற்று வந்து மேலைநாடுகளுக்கு அனுப்பினர் என்ற குறிப்புகளும் உண்டு.
சாவகம், ஜாவா, வடபோர்னியா போன்ற அக்காலக் கீழைத்தேய நாடுகளுடன் பெருவணிகம் நடைபெற்றுள்ளது. பிலிப்பைன் தீவுகளில் கி.மு 1000 காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பழமையான தமிழர் கோடாரிகள், ஈட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கும் வடநாட்டுக்கும் இடையேயான வணிகம் கி.மு மூன்றாம் நூற்றாணடிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றது. மெகதனிஸ் என்பார் பாண்டிய நாட்டு முத்துகளைப் போற்றியிருக்கின்றார். கௌடில்யரின் அர்த்தசாத்திரம் என்னும் நூல் தாமிர வருணி, பாண்டிய கவாடம் போன்ற இடங்களின் முத்துக்கள் பற்றியும், மதுரை பருத்தி ஆடைகள் பற்றியும் பேசியுள்ளது.
வடநாட்டார் கடல்கடந்து வணிகம் செய்வதை வேதங்கள் அனுமதிக்கவில்லை. ஆரியரின் கடல் வணிகத்தைப் போதாயனர் என்பார் கண்டித்துள்ளார். சாணக்கியர் என்பார் தமிழர் விலையுயர்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுளள்ளார். தமிழக மரக்கலங்கள் மேற்கு கிழக்குக் கரையோரங்கள் வழியாக வடக்கு நோக்கிச் சென்றன.
பண்டைத் தமிழரது வெளிநாட்டு வணிகம் சங்ககாலத்தில் பெருஞ்சிறப்புற்றிருந்ததை மேற்கூறப்பட்டுள்ள சான்றுகள் வழியாக நாம் அறியலாம். தமிழர் மேற்கு, கிழக்கு, வடக்கு என முத்திசைகளுக்கும் சென்று வணிகத்தில் வரலாறு படைத்துள்ளனர். பிறநாட்டாரைக் கவர்ந்த தமிழகப் பொருட்களாக முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு, மிளகு, இலவங்கம், ஏலம் போன்றவை விளங்கின. தங்கம், குதிரை, இரும்பு, கம்பளி போன்றவற்றைத் தமிழகம் பெற்றுக்கொண்டது.
துறைமுகங்கள்.
தமிழகத்தின் பண்டைய துறைமுகங்கள் பற்றிய செய்திகள் பலவாறாக் கிடைக்கின்றன. மேற்குக்கரையோரமான சேரநாட்டுத் துறைமுகங்களாக நயவு, முசிறி, தொண்டி, பொற்காடு என்பவை திகழ்ந்துள்ளன. தெற்கே குமரியும், கிழக்கே கொற்கை, காவிரிப்பூம் பட்டினம், எயிற்பட்டினம், அழகன்குளம், அரிக்கமேடு, மருங்கூர்பட்டணம் மசுலிப் பட்டினம், மரக்காணம் போன்றவை திகழ்ந்துள்ளன. ஈழத்தில் மாந்தை பெருந் துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது.
காவிரி;பபூம் பட்டடினத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நிகழ்ந்தன. அது எவ்வாறு இருந்ததெனில், மலையில் பெய்த நீர் கடலில் கலப்பது போலவும், வான் கொண்ட நீர் மலையில் பொழிவதைப் போன்றும் இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகின்றது.
துறைமுகங்கள் தோறும் பண்டகசாலைகள் இருந்திருக்கின்றன. அப்பண்டக சாலைகளில் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்கள் மீது அரச அலுவர்கள் முத்திரையிட்டிருக்கின்றனர். அங்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை,
“அளந்தறியாப் பல்பண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கியும்
மலிநிறைந்த மலிபண்டம்” எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
துறைமுகங்கள் அருகே  பொருட்கள் பொதிகளாகக் கட்டப்ப்டடு அடுக்கப்பட்டிருந்தன.  அவற்றின் மேல் நாய்களும் ஆட்டுக்கடாக்களும்  ஏறிக்குதி;த்து விளையாடின. இது  மலைச்சரிவுகளில் வருடை மான்கள் துள்ளி விளையாடுவதை ஒத்திருப்பதாக மற்றுமொரு பாடலில் பட்டடினப்பாலை தெரிவிக்கின்றது.
“பொதிமூட்டைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தான் எற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில்”
பாண்டிய அரசின் ஆட்சி;க்குட்பட்ட கொற்கைத் துறைமுகம் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. முத்து, சங்கு விளைகின்ற இடமாகவும் இது திகழ்ந்தது என அகநானூறு கூறுகின்றது.
வெளிநாட்டார் குறிப்புகளில் பெரிதும் இடம் பெற்ற முசிறித்துறையில் மேற்கு நாடுகளுடனான வணிகம் பெருமளவில் நடைபெற்றிருக்கின்றது. வெளிநாட்டார் வணிகத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடற்கொள்ளையரை அடக்கி ‘கடற்பிறக்கோட்டிய’ என்னும் பட்டத்தைப் பெற்றான் செங்குட்டுவன். சேரநாட்டு மலைவளங்களில் பெருமளவில் மிளகு விளைந்தது. ஐரோப்பியர்களால் பெரிதும் விரும்பப்பட்ட மிளகே இங்கு முதன்மையான ஏற்றுமதிப் பொருளாகியது.
இத்துறையில் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வணிகம் பற்றிப் புறநானூறு (பாடல் 343) விரிவாகக் கூறுகின்றது. பொன்னும், இரத்தினமும், மென்மையான புடவைகளும், சித்திர வேலைப்பாடமைந்த  ஆடைகளும், பவளமும், செம்பும், ஈயமும், கோதுமையும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகப் ‘பெரிப்புளுஸ்’ நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கியம் ‘எயிற்பட்டினம்’ என்ற கடற்கரைப் பட்டினம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஒய்மாநாட்டு நல்லியங்கோடன் இதனை ஆண்டதாக இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகின்றார். இதன் பின்னராக துறைமுக வரலாறுகளில் எயிற்பட்டனம் காணப்பெறவில்லை.
அண்மையில் அரவிந்த் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர் புதுச்சேரிக்கு அருகே கடலில் நீண்ட மதில் போன்ற ஒன்றைக் கண்டுள்ளார். தொடர்ந்து, பெருங்கடற் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வரும் ஒரிசா பாலுவிற்குத் தெரிவிக்க, அவர் குறிப்பிட்ட பகுதியில் கடல் ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆய்வுகளின் முடிவில் இது பழங்கால எயிற்பட்டினமாக இருக்கலாம் என ஒரிசா பாலு தெரிவித்திருக்கின்றார். எயில் என்பது மதில் எனப் பொருள் படும்.  மரங்கலங்கள் உள்ளே பாதுகாப்பாக வருவதற்காகவோ அல்லது கடற்கோள் போன்ற பேரழிவுகளைத் தடுப்பதற்காகவோ இம்மதில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்.
கடற்கோளினால் கொள்ளப்பட்ட இப்பட்டினம் குறி;த்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழத்தில் பெரும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடம் மாந்தை துறைமுகப் பகுதியாகும். வங்கம் மலிந்து நி;ன்ற மாதோட்டப் பகுதி ஈழ வணிகத்தின் வாசலாகும். பல வரலாற்றுக் குறிப்புகளில் மாந்தைத் துறைமுகத் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்போது இன்னொரு காட்சியைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் வடமேற்கில்  கொடுமணல் என்றொரு நகரம். அங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாணிக்கக்கற்களைப் பட்டை தீட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அருகிலிருந்த தொழிற்சாலைகளில் இன்னும் பலர் செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை உருக்கி பல்வேறு பொருட்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் நூல் நூற்று ஆடைகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். யானைத் தந்தத்திலான அணிகலன்களை ஒரு பகுதியினர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் சங்குகள் அழகாக அறுபட்டு எழில் மிக்க வளையல்களாகிக்கொண்டிருக்கின்றன.
இன்னொரு பகுதியில் தமிழ் வணிகர்கள் வேறு நாடுகளிலிருந்து வந்த வணிகர்களுடன் எந்த இலக்கணப் பிழையுமற்ற மொழியில் வர்த்தக ஒப்பந்தங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உருவாக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு ஏற்றுமதிக்காக வண்டிகளில் ஏற்றப்படுகின்றன. ஒரு வணிக நகரத்துக்குரிய சுறுசுறுப்புடன் கொடுமணல் நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இது நடந்தது அண்மையில் அல்ல. 2500 வருடங்களுக்கு முன்பு. இது நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து ஒரு பேரரசாகவல்ல ஒரு நாடாகவே உருவாகியிருக்கவில்லை. ஐரோப்பாவின் பெரும்பகுதியில் காட்டுமிராண்டிகளே வாழ்ந்துகொண்டிருந்தனர். இப்போது வல்லரசாக இருக்கின்ற பல நாடுகளில் இரும்பின் பாவனை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் உருவாவதற்கு இன்னும் இயேசுநாதரே பிறந்திருக்கவில்லை.
பெருவியப்பை ஏற்படுத்திய இச்செய்திக்கு களமான கொடுமணல் நகரம் மண்ணுக்குக் கீழிருந்து மீண்டும் கண்டறியப்பட்டது 2013இல்தான்.
அங்கு தொன்மையான பொருட்கள்  சில கிடைக்கின்றன எனச் செய்;தி வரவே,  பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கா. ராஜன் தலைமையில் ஓரு குழு கொடுமணல் ஆய்வில் ஈடுபட்டது. அங்கே 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தொழிற்கூடம் இயங்கியதற்கான சான்றுகளும் ஓரு ஈமச்சின்னமும் கண்டறியப்பட்டன.
விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு உருக்கப்பட்தற்கான தொழிங்கூடங்களும் இனங்காணப்பட்டன. நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கறுத்து வளையல் செய்யப்பட்ட சான்றுகளும், யானைத் தந்தத்தாலான  அணிகலன்களும் கிடைத்துள்ளன. 500க்கு மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. அதிந்தை, ஆதன் சுமணன், பன்னன் பாகன் போன்ற பெயர்கள் அங்கு காணப்பட்டுள்ளன.
கண்டறியப்பட்ட பொருட்கள் நில கரியமிலக் காலக்கணிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அவை கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு வணிகம் ஓங்கியிருந்த காலத்தே ஏற்றுமதிக்காகவும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகவும் உயர்ந்த அணிகலன்கள் இங்கே உருவாக்கப்ட்டுள்ளதாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
சேரரின் தலைநகரான கரூரையும் முசிறித் துறைமுகத்தையும் இணைக்கும் பெருவழியில் இது அமைந்துள்ளது. இது ‘கொங்கப் பெருவழி’ என அழைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வழியில் கிடைக்கப்பெற்ற ஏராளமான வெள்ளி, தங்க, உரோம நாயணங்கள் இத்தொழிற்கூட வாணிபத்தை உறுதிப்படுத்துகின்றன.
பதிற்றுப்பத்து என்னும் இலக்கியத்தில் கபிலர் “கொடுமணல்பட்ட….. நன்கலம்” என்றும், அரிசில்கிழார் “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” என்றும் கொடுமணல் எனும் ஊர்ச் சிறப்பைக் குறிப்பிடுகின்றனர்.
ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைப் பெருமளவில் கொண்டிருந்த தமிழகம் ஏற்றுமதிக்குரிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களையும் கொண்டிருத்தல் இயல்பு. அவ்வாறான தொழிற்கூடங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆங்காங்;கே இலக்கியங்களில் காணப்பட்டாலும் தனித்துவத் தலைப்பாக இது நோக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.
தமிழக நாளிதழான தினமலர் மே17, 2013 இதழில் இவ்வாய்வு குறித்துக் கட்டுரை வெளிளிட்டுள்ளது.
தமிழர் வணிகத்தில் நாணயங்கள்.
உலகலாவிய பண்டைய வணிகத்தில் தனியிடம் பெற்றிருந்த தமிழகம் நாணயப் பயன்பாட்டிலும் சிறப்புற்றிருக்கின்றது. உள்நாட்டு வணிகம் பெருமளவு பண்டமாற்று முறையில் தொடர்ந்தாலும் வெளிநாட்டு வணிகங்கள் பெரும்பாலும் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. மூவேந்தர்களும் தனித்தனியாகத் தம் இலச்சனைகள் பொறித்த நாணயங்களைப் பயன்படுத்தினர். குறுநில மன்னர் சிலரும் நாணயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். முதன்முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர் பாண்டியர் ஆவர். அதில் பெருவழுதி என பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
சோழர் நாணயங்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
இவ்வேந்தர் நாணயசாலைகள் வைத்துத் தாமே நாணயங்களை வார்த்துள்ளனர். செப்பு போன்ற உலோகங்களை உருக்கி சதுர, வட்ட வடிவில் நாணயங்களை வார்ப்பதோடு, முத்திரைகளையும் எழுத்துகளையும் பொறிக்கத் தெரிந்து கொண்டிருந்தனர்.
கிரேக்க, உரோம, சீன நாணயங்கள் பெருமளவில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அதே போன்று தமிழக நாணயங்கள் பிறநாடுகளிலும் கிடைத்துள்ளன.
வடநாட்டார் பயன்படுத்திய நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்தமை பற்றிய சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை.
நிறைவில்…
உலகின் பெரும்பாலான பகுதிகள் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிராத காலப்பகுதிகளில், வளர்ச்சி பெற்றிருந்த நாடுகள் அனைத்தோடும் தமிழகம் வாணிபம் செய்திருக்கின்றது. கடலையும் பயண வழிகளையும் நன்கறிந்த தமிழர் காற்றின் துணை கொண்டே பெருங்கடல்களைக் கடந்தனர்.
வணிகர்ளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. சிறந்த வணிகர்கள் அரசர்களால் ‘எட்டி’ என பட்டமளி;த்து மதிப்பளிக்கப்பட்டனர்.
உலகளவிலான பண்டைய வணிக வரலாற்றில் தமிழகத்தின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது. கிழக்கு நாடுகளுக்கும்  மேற்கு நாடுகளுக்கும் இடையே சிறப்பான கடல் வழிப்பாதைகளைக் கொண்டிலங்கிய தமிழகம் உலகம் தழுவிய வணிகத்தில் உச்சம் தொட்டிருந்தது எனலாம்.
இஸ்லாமிய – கிறி;த்தவப் போர் தொடங்கிய பின்னர் பாரசீக வளைகுடாப் பாதைகள் பாதுகாப்பற்றுப் போயின. இதனால் ஐரோப்பியரது தமிழக வணிகம் துண்டிக்கப்படவே, ஐரோப்பியர் தமிழகத்திற்கான புதிய கடற்பாதைகளைத் தேடினர். தமிழகத்தோடான வணிகம் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தது. எனவேதான் கொலம்பஸ் மேற்கு வழியாகவும், கொடகஸ்காமா கிழக்கு வழியாகவும் இந்தியாவைத் தேடிப் புறப்பட்டனர். ஐரோப்பியர் இந்தியா எனக் கருதியது தென்னிந்தியாவையே என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
மேற்கு நாடுகளுடான வணிகம் துண்டிக்கப்பட்டமையைத் தொடர்ந்து தமிழர் கீழைத்தேய நாடுகள் மீது பேரார்வம் காட்டினர். கீழைத்தேய நாடுகள் மீதான சோழப் படையெடுப்புகளும் இதையே உறுதி செய்கின்றன.
வாழ்வியலில் பெருவளர்ச்சி கண்ட இனத்தோராற்றான் இத்தகைய வணிக வளர்ச்சியைப் பெற முடியும். சிறந்த அரசியல் அறமும் சமூக வளமும் இயைபுற்றிருக்கும் காலத்தில்தான் பொருளாதாரம் உயர்வு பெறும். அவ்வாறான உயர்ந்த உலகத் தரம்மிக்க வாழ்வை என் முன்னோர் கொண்டிருந்தனர் என்பது பெருமைக்குரிய வரலாற்றுண்மையாகும்.

குமரிக்கண்டம்: உண்மையா?

நாம் இதுவரை அங்கோர்வாட் உள்ளடங்கிய தென்கிழக்காசிய குமர் நாகரீகம், ஈரான், காஷ்மீர் உள்ளடங்கிய சுமேரிய நாகரீகம்,மெசொபடோமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், மாயன் மற்றும் இன்காநாகரீகங்களைப்பற்றி குறிப்பிடத்தக்க வகையில் தமிழரோடு, தமிழோடு தொடர்புள்ளதை விவாதித்துள்ளோம்.
இனி  இவை எல்லாவற்றுக்கும் மூலமும் தொடக்கமுமாய் இருந்த தமிழரின் பூர்வீகம் பற்றித் தேடுவோம்.
எந்தச்சூழ்நிலையிலும் இந்தக்கட்டுரைகள், தமிழரின் பழம்பெருமை பேசி நிகழ் காலத்தை மறக்கச்செய்யவோ,
வீண் பெருமை அரிப்புக்குத் தீனி போடுவதோ அல்ல.
உலகின் எல்லா இனங்களும் தங்களது வரலாற்றை மறக்காதவை, அவற்றை பாதுகாப்பவை,  தமிழினம் தவிர.
தமிழினம் மட்டுமே தன் அழிவில் பெருமை கொள்கிறது. எனக்குத் டமில் வராது என தமிங்கிலம் பேசுவதை ஒரு இயல்பான பரிணாமமாக கருதுவது ஒரு குழு.  தாய் மொழி தெரியாததை பெருமையோடு அறிக்கையிடும் கேவலம் எனக்குத்தெரிந்து தமிழர்களிடம்(?)தான் இருக்கு. மொழி என்பது தொடர்புகொள்ள ஒரு வழி தானே எதுவாயிருந்தால் என்ன என இன்னொரு குழு. தமிழில் பேசினாலே தீவிரவாதியாய் பார்ப்பது இன்னொரு குழு, தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழருக்கெதிராய் பேசும் தினமலர், சோ போன்ற குழுக்கள் இன்னொரு பக்கம்.
தமிழரின் வரலாற்றை மறைத்து திரித்து அழித்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வந்திருக்கும் ஆரியக்கூட்டம், இன்றும் கூட
பூம்புகார் கடலாய்வு நடத்தி பாதியில் மூடியது,
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை முடிந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் வெளியிடாமல் மறைப்பது,
சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, சமஸ்க்ரிதமா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என்ற முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. சொல்வது,
என தன் முகத்தை தெளிவாகவே காட்டுகிறது.
இதற்கு சரியான பதிலை, வரலாற்றுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவேண்டிய தமிழன் எப்படி இருக்கிறான்?
டாஸ்மாக் தமிழன், ரசிகர் மன்றத் தமிழன், கடலைத்தமிழன், எதையும் கலாய்க்கும் தமிழன், வெட்டிபேச்சு பேசியே காலம்போக்கும் தமிழன், தமிழ், தமிழனுக்கெதிராகவே பேசித்திரியும் எட்டப்பத்தமிழன், சாதியத்தமிழன், தமிங்கிலத்தமிழன், 9-5 அலுவல் தமிழன், இந்தியத்தமிழன், இவர்களை மறைமுக ஆரியக்கூட்டம் எனலாம்.
அவர்கள் அங்கிருந்து செய்ய வேண்டிய வேலையை, உள்ளிருந்தே செய்பவர்கள் (பல நேரங்களில் அறியாமலேயே).
பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம், ஆயிரக்கணக்கில் சித்தர்களும், அறிஞர்களும், கணியர்களும் உருவாக்கிய, வானியல், இலக்கியம், மருத்துவம், கட்டடக்கலை, விவசாயம், மற்றும் தமிழ்த்தாத்தா வ.வே.சு. சேகரித்த ஓலைச்சுவடிகள், பாவாணர் கண்டுபிடித்த வேர்ச்சொல் விளக்கவுரைகள் இன்னும் பிற வீனாகப் போய்விடக்கூடாதல்லவா.
தமிழர் வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாய் அல்ல, அறிவியல் பூர்வமாய் அணுகுவோம். உண்மை எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்போம். தெரிந்த உண்மையை பகிர்வோம், அறிவிப்போம், அதன் மூலம் தமிழரின் சுமரியாதையை, தன்னம்பிக்கையை மீட்போம். தமிழால் பன்னெடுங்காலமாய் முடிந்தது, இன்றும் முடியும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழி வேலைவாய்ப்பு, தமிழ்வழி அரசாங்கம், தமிழ்வழி தமிழர் மேம்பாடு என ஆங்காங்கே சிறு சிறு முயற்சிகளாய்.
அந்த வகையில் மிகச்சிறிய ஓர் அறிவியல்பூர்வ ஆய்வுத் தேடல் முயற்சிதான் இது.
குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா?
ஒரு சிறிய சூழல் அறிமுகம்:
நமது பூமியின் மேல்புறம் 72 % கடல்நீரால் சூழப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இந்தப் பெருங்கடல்களில் 5 % மட்டுமே அறிந்து கொள்ள  முடிந்துள்ளது. மீதி 95 % இந்த 21 ம் நூற்றாண்டிலும் அறியப்பட இயலாத புதிர்தான். காண்க:
பூமியின் நிலமட்டத்திலிருந்து பூமியின் மையத்திற்கு உள்ள தூரம் 6371 கி.மீ.
பூமியின் ஒரு பக்கம் நுழைந்து மறுபக்கம் வரவேண்டுமென்றால் 12,742 கி.மீ. (6371 x 2).
அதாவது அதுதான் பூமியின் குறுக்களவு அல்லது விட்டம்.
இந்த 6371 கி.மீ. வரை மையம் கொண்டுள்ள பூமியின் நில உட்பகுதியில் கடலின் அதிகபட்ச ஆழம் வெறும் 11 கி.மீ. மட்டுமே. கால்பந்தின்மேல் ஒரு குன்டூசியை மெதுவாகப் போட்டால் கால் பந்தில் என்ன பள்ளம் உண்டாகுமோ அவ்வளவுதான் கடல் ஆழம். அந்த ஆழமான இடத்தின் பெயர் மரியானா படுகுழி (Mariana Trench ) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கருகில் உள்ளது.
இந்த மரியானா படுகுழிக்குள் எவரெஸ்ட் சிகரத்தை (9கி.மீ. உயரம்) வைத்தால் சிகரத்திற்குமேல் 2 கி.மீ.  உயரத்திற்கு கடல் நீர் இருக்கும்.
1) கடல் அகழ்வாய்வில் குமரி நாடு:
இப்ப இந்தியாவிற்கு வருவோம். தெற்கே இந்தியப்பெருங்கடலில் (அதிகபட்ச ஆழம் (Sunda Trench) சுண்டா படுகுழி 8 கி. மீ. அல்லது 7,725 மீட்டர், சராசரி ஆழம் 4 கி. மீ.) உள்ள நீரையெல்லாம் அகற்றினால், (உடனே மத்த கடலேருந்து தண்ணீ வந்துரும்னு சொல்லாதீங்க) தரை எப்படி இருக்கும். குமரிக்கண்டம்னு சொல்லப்படும் பகுதி எவ்வளவு பெருசா இருக்கும். அதையும்தான் பார்க்கலாமே. கடல் நீர் அகற்றப்பட்ட இந்தியப்பெருங்கடல் தரை.
இந்தியப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4 கி. மீ. ஆக இருந்தாலும் பல இடங்களில் 2 கி.மீ. க்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரியை ஒட்டி 300 கி. மீ. தூரம் வரை கடலின் ஆழம் அரை கி. மீ. தான்.
இந்தப்பகுதியில் குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் பகுதியில் எத்தனை தமிழ் நாடுகள் இருந்தன என்றால் மொத்தம் 49 நாடுகள்:
1. ஏழ்தெங்க நாடு,
2. ஏழ்மதுரை நாடு,
3. ஏழ்குணகாரை நாடு,
4. ஏழ்பின்பாலை நாடு,
5. ஏழ்குன்றநாடு,
6. ஏழ்குணகாரை நாடு,
7. ஏழ்குறும்பனை நாடு
இவற்றின் அறிவியல் தன்மை பற்றி விளக்குகிறார் திரு. தென்காசி சுப்பிரமணியன்
இவை ஒன்றும் அறிவியல் தன்மை அற்றது அல்ல. ஏழ்குணகாரை நாடு – கரை என்பதால் கீழக்குக்கடல் பகுதியில் இவை இருந்திருக்கும்.
ஏழ் குன்ற நாடு – குன்றம் என்பது மலையை சுற்றியுள்ள நாடுகள். குமரியில் மேரு என்றதொரு மலை இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்க.
இந்தியப்பெருங்கடலுக்குள் இரு பெரும் மலைத்தொடர்கள் இருப்பதைப்படத்தில் காணலாம். மேலே உள்ள படத்திலும் இது தெரியும்.
இந்த மலைத்தொடரில் எப்படி நாடுகள் இருந்திருக்கும் என்று நம்பாதவர்களுக்கு, படத்தில் உள்ள மேற்குப்புற மலைத்தொடரில் தான், நம்ம ஊரு லட்ச தீவுகள், மினிகாய் தீவுகள், மாலைத்தீவு என்று தமிழ்ப்பெயரிலேயே உள்ள தீவுக்கூட்டம், அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படை கொண்ட டியூகோ கார்சிகா தீவு என இத்தனை நாடுகளும் உண்டு.   தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 66 மீட்டர். ஜப்பானின் சுனாமி உயரம் அதிகபட்சம் 3 மீட்டர். கி. மு. 10,000 ல் ஏற்பட்ட கடல் கோளின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்தது 120 மீட்டர். காண்க நாசா அறிக்கை: 1 அல்லது 2 முறை அல்ல, 3 முறை (500 மீட்டர்). கடல் மட்டம் 400 அடி (120 மீட்டர்) உயர்ந்த பின்னும் மேற்சொன்ன தீவு நாடுகள் இங்கு இருக்கிறது என்றால், 120 மீட்டர் குறைந்தால் எவ்வளவு பெரிய நாடுகள் கிடைக்கும்.
மாலைத்தீவுகளை செய்மதியிலிருந்து (satellite) எடுத்த புகைப்படத்தில் காணலாம்.
இந்த மாலைத்தீவின் தலைநகரம் மாலை (Male) ஒரே ஒரு சின்ன தீவு. சுனாமியில் எப்படி தப்பிச்சதுன்னு தெரியலையே. உசிலம்பட்டியாவது கொஞ்சம் பெரிசா இருக்கும் போல.
ஏழ் மதுர நாடுகள் – தென்மதுரை குமரியின் கடைத் தலைநகரம் என்பதால் இந்நகர் சுற்றி அமைந்த நாடுகள் இவை.

ஏழ்தெங்க நாடு – தென்னை மரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும். ஏழ் குறும்பனை நாடு – மேற்சொன்ன தென்னை போலவே பனையும் தென்னகத்திலே அதிகம். ஏழ் பனை நாடு யாழ்ப்பானத்தைக் குறிக்கும் என்கிறார் இராம கி.
பனை மரம் தெற்கத்திய நாடுகளின் மரம். தெற்கே செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகரிப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.
“கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.”
குணகரை தெங்க பனை இவை எல்லாம் திசை குறித்திருக்க, பாலை நாடுகள் மட்டும் முன் பின் எனக்கூறுவானேன். அவற்றையும் குணப்பாலை குடப்பாலை தென்பாலை வடபாலை அல்லது நடுப்பாலை என கூறாமல் விட்டதன் அர்த்தம் என்ன? இங்கு தான் நாம் இக்குமரி நில நடுக்கோடு தாண்டி பரந்திருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
ஆக இங்கு முன் பின் பாலை நாடுகள் எனக்கூறியது
சூரியனின் மகர ரேகை பயண காலத்தில் ஒரு ஏழு  நாடுகள் வறட்சி கண்டு அவை முன்பாலை எனவும்,
சூரியனின் கடக ரேகை பயண காலத்தில் மற்றொரு ஏழு நாடுகள் வறட்சி கண்டு அவை பின்பாலை எனவும் கூறப்பட்டிருக்கலாம்.
குமரி முனைக்குத் தெற்கே 5,300 கி.மீ. தொலைவில் பிரான்ஸ் நாடு எடுத்துக்கொண்ட ஆம்ஸ்டர்டம் தீவில் (குறியீடு காட்டும் தீவு) நடத்தப்படும் ஆராய்ச்சி, தொல் தமிழர் தொடர்பான மேலும் பல தகவல்கள் தரும் என்கிறார் இது தொடர்பான கடலாய்வு செய்துவரும் திரு. பாலு அவர்கள். காண்க: தீவு பற்றிய தகவலுக்கு: 2) சங்கத் தமிழ் இலக்கியக் குறிப்புகளில் குமரி நாடு:
  • 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள்எழுதிய சிலப்பதிகாரத்தில் “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறுகின்றது.
  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)
  • “தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்குஅடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
    “குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி” (புறம் 6:67)
  • “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட” (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர். காண்க :
இந்தக் குமரிக்கண்டத்தில்
பஃறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கோடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன!
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
கோடு என்றால் மலை என்று பொருள். குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற மலை இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. வட தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்கோடு என்பதும் மலை உள்ள ஒரு ஊர்.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில்
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
1. தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், 39 மன்னர்கள் வழிநடத்த இணைந்து நடத்தப்பட்டுள்ளது.
இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
2. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
3. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. காண்க:

 3) ஆடு மேய்ச்சான் பாறை:
குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது. ஆடு மேய்ச்சான் பாறை 
படத்தை உருப்பெருக்கிக்காண:
இன்னும் அருகில் சென்று பார்த்தால்: (படத்தில் இருப்பவர் கடலியல் ஆய்வாளர் திரு. பாலு )
4) தமிழகத்தின் கடலில் மூழ்கிய நிலப்பகுதி:
கன்னியாகுமரிக்குத் தெற்கே 300 கி.மீ தொலைவு வரை கடலில் மூழ்கிக் கிடக்கும் தமிழர் நிலம்.
எவரும் கூகுள் நிலப்படத்தில் (Google Earth) பார்க்கலாம்.
5) பூம்புகார் சமீபத்திய ஆய்வில்  கிரஹாம்: காண்க: 
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்து தமிழர்களின் சிந்தனைக்கு:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. உண்மையில்  துவாரகை என்பதும் என்பதும் தமிழர் வாழ்ந்த பகுதி தான். அதுபற்றி பின்னர் பகிர்வோம்.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
1. பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2001-02ல் ஆய்வு மேற்கொண்டார்.
2. அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.
3. பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).
காண்க: மலையமான்: நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010.
4. மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. அந்தக் கடலில் மூழ்கியுள்ள மகாபலிபுரம் கோயில் உச்சிப்பகுதி:

பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது நிறைவேறினால் தொல் தமிழரின் தொன்மை தெளிவாகும்.
5. “Underworld: The mysterious origins of civilization” என்ற நூலில் பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் (Graham Hancock) தன் பட்டறிவை பகிர்ந்துள்ளார். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும் என்றார். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும், அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.
6. இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.
7. மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது.
8. பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.
9. பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது.
10. அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.
“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர்.
கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.
அப்படியென்றால், 11,500 ஆண்டுகளுக்கு  முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது.
12. 1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.
15000-14000 ஆண்டு முன்பும்,
12000-11000 ஆண்டு முன்பும்,
8000-7000 ஆண்டு முன்பும்
முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது.
13. துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்?

6) தமிழகத்தில் உள்ள மிக முக்கிய தொல்லிடங்கள் 

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. காண்க:
அணைத்து இடங்களையும் விளக்கினால் ஆயுள் முடிந்துவிடும்.
மிக முக்கிய 3 இடங்கள் மட்டும்:
1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்
2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு
3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்
 1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்


உண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் காலம் கி. மு. 10,000.காண்க:  பல தொல்லியல் சான்றுகளை ஐரோப்பியர் கொண்டு சென்றுவிட்டனர்.  முதன்  முதலில் இங்கு ஆய்வு நடத்தியவர், ஜெர்மானிய Zuckerman என்பவர். 1876 ல் கண்டுபிடித்த அவர் பலவற்றை தனது ஜெர்மன் நாட்டிற்கு எடுத்து சென்று பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். Louis Lapique என்ற பிரெஞ்சு நாட்டவரும் 1904 ல் ஆய்வு செய்ய வந்து நமது தமிழ் மக்கள் 10,000 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களை பாரீசுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இழப்பதே தமிழன் வரலாறாகிவிட்டது. இன்னும் இருப்பதையாவது பாதுகாப்போம்.
 
ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 8000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள், தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் அப்போதைய கல்வி நிலையைக்  காட்டுகிறது.
2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு
முதலாம் நூற்றாண்டு வரை ரோமானியர்களோடு கடல் வணிகம் செய்த மிகப்பெரிய துறைமுக நகரம் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. இதையும் ஐரோப்பியர்தான் வந்து கண்டுபிடித்து சொல்லவேண்டி இருந்திருக்கிறது.
Excavations at Arikamedu, the once flourishing port town near Pondicherry (now renamed as Puducherry), for the first time provided datable evidences to confirm trade links with Rome that arched back to the first century CE and helped construct a proper chronology of south Indian history.The credit for establishing Arikamedu’s significance is often attributed to British archaeologist Mortimer Wheeler and his 1945 round of excavations.
3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்
இவைகளோடு ஒரு பின்னிணைப்பு 2000 ஆண்டுக்கு முந்தைய திருபெரும்புதூர் இரும்பு தொழிற்சாலை
7) தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில்  18 மீட்டர் கடல் நீர் குறைந்தால் போதும் கிடைக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள். வாடகை சைக்கிளில் இலங்கை சென்று விடலாம். 20 கி. மீ. தூரம் தானே.
மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 21 தீவுகள் இருக்கின்றன. இவை பழைய தமிழகம் கடலில்   மூழ்கியது போக மீதமுள்ள பகுதிகள்.
மேலும் தனுஷ்கோடியிலிருந்து ஈழ தலைமன்னாருக்கு தரைவழித்தொடர்பே இருப்பதைக்காணலாம். இதை ராமர் பாலம், ஆடம்ஸ் பிரிட்ஜ் என எப்படி சொன்னாலும் அது இணைந்திருந்த தமிழ்-ஈழ நாட்டின் நிகழ்கால சாட்சியம்.
கீழ்க்காணும் அந்த மண் திட்டுப்பாலத்தின் நீளம் 30 கி. மீட்டர். காண்க:
சேது கால்வாய் என்று வெட்ட நினைப்பது இந்த மண் திட்டைத்தான். கப்பல் செல்ல வழி ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
1. உண்மையில் கால்வாய் வெட்டப்பட்டாலும் அவ்வழியே பெரிய கப்பல் செல்ல வழியில்லை.
2. வெட்ட வெட்ட கடல் திரும்பத்திரும்ப மண்ணை கொண்டுவரும். மண் அகற்றுபவர்களுக்கு நல்ல வருமானம். திரும்பத் திரும்ப சாலை போடும் வகையில் அரைகொறை சாலை போடுவாங்கள்ளே அது மாதிரிதான்.
3. கப்பல் நிறுவனம் வைத்திருப்பவர் தி.மு.க. T.N. பாலு. காசு கொட்டும் தொழிலைக் கைப்பற்ற நினைக்கிறார்கள், அவ்வளவு தான்.

8) தனுஷ்கோடி
1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுஷ்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது. இந்தியப்பெருங்கடலில் 12,000 வருடங்களுக்கு முன் நிலப்பரப்பு மூழ்கியதை நம்பாதவர்கள் 50 வருடங்களுக்கு முன் மூழ்கிய தனுஷ்கோடியையாவது நம்புங்க.
தனுஷ்கோடியின் இன்றைய நிலை.
இதே தனுஷ்கோடி 1964 க்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா ? தனுஷ்கோடி ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்ற ஒரு துறைமுக நகரம். தென்னந்தோப்புகளோடு இருந்த ஒரு ஊர். படத்தைப் பார்த்தாவது நம்புங்க.
காணும் தொடர்வண்டியின் பெயர் போட் மெயில் (Boat Mail).
அந்த போட் மெயில் 1964 கடும்புயலில் பயணிகளோடு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது. எஞ்சியது இதுதான்.
9)  கடலாய்வுகள்
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை
1. 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது.
2. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கடலாய்வு செய்தது.
3. இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது.
அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன  மத்திய மாநில அரசுகளால்.
சிறிதளவே செய்யப்பட்ட கடலாய்வு பூம்பூகார் நகரத்தின் பழைமையை கி. மு. 9,500 என்று சொல்லும் போது, குமரிக் கண்டத்தில் கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும்.
இத்தோடு முடிவதில்லை நமது தேடல். ஏன் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதி மட்டும் தான் கடலில் மூழ்கியதா? இல்லையே. அந்த மூழ்கிய உலகின் பிற நாட்டு பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள்  ஆச்சரியமானவை.

காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 )

www.danvantarinadi.com

sambandar appar meet


காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

IMG_4415
அஷ்டாங்க மைத்துனம்

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச

-விருத்த வசிஷ்டர்

பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.
appar2
கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.

பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய  நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.

பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.

ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில்  – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!

இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்? கப்பலா? விமானமா?

இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்?

tamluk
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1303; தேதி: 22 செப்டம்பர் 2014
மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது ஒன்பதாவது கட்டுரை.
இராவணன் ஆண்ட இலங்கை இப்போதைய ஸ்ரீலங்கா இல்லை என்றும் அது கோதாவரி முகத்வாரத்தில் இருந்த நதியிடைத் தீவு என்றும் , அக்காலத்தில் பறக்கும் புஷ்பக விமானம் இருந்ததற்கு தடயம், சாட்சியம் இல்லை என்றும் வெளிநாட்டு அறிஞர்களும், மார்கசீய வரலாற்று அறிஞர்களும் கதைத்த ஒரு காலம் உண்டு. ராமாயணம், மஹாபாரதம் ஆகியனவற்றை “வர்க்கப் போராட்ட வருணனைகள்” என்று அவர்கள் நகைத்த காலமும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிவு போதாமையே இது போன்ற அரைகுறை ஆய்வுகளுக்குக் காரணம்.
சிலப்பதிகார தமிழ் காவியத்தில் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு) என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டத்தில் இருந்து கடல் ச்சூழ்ந்த இலன்கையே நாம் அறிந்த இலங்கை, ஆற்றிடை திட்டு அல்ல என்பது விளங்கும். அது மட்டுமல்ல ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இப்போதைய ஸ்ரீல்ங்காவை ராமனோடும் ராவணனோடும் தொடர்பு படுத்திப் பாடியுள்ளனர். எனினும் இவை எல்லாம் பழங்கதைகள். இப்போது உலகமே ஒப்புக்கொண்ட உண்மை- இன்றைய ஸ்ரீலங்காதான் அன்றைய ராமாயண இலங்கை.
தொல்முதுகோடி என்று தனுஷ்கோடி பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உண்டு. ராமசேது என்னும் கடற்பாலம் இருந்ததற்கான தடயங்களை ‘நாஸா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் படம் மூலம் நிரூபித்துள்ளது.
ஒன்றுவிட்ட சகோதரனான குபேரனிடமிருந்து ராவணன் புஷ்பக விமானத்தைப் பறித்தான். இது எண்ணத்தால் — பெட்ரோலால் அல்ல — பறக்கச் செய்யும் விமானம். இதுபற்றி நியூ சைன் டி ஸ்ட் பத்திரிக்கையில் வந்த ஒரு விஞ்ஞான கட்டுரையை நான் எழுதி இருக்கிறேன். அதில் முழு விவரம் காண்க.
patna
புஷ்பக விமானத்தை நம்ப மறுக்கும் அறிவியல் புத்தி ஜீவிகளுக்கு மஹாவம்சம் சில அரிய பயணக் குறிப்புகளைப் படைக்கிறது.
இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். இந்த ரகசியம் கரிகால் சோழனுக்கும் தெரிந்திருந்ததால் அவன் கடலுக்கு அப்பால் உள்ள தீவுகளை வெல்ல முடிந்தது.
நளியிரு முந் நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ
— – புறநானூறு, பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது.
வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்தி கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மத யானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! – என்று உரைகாரர்கள் இதற்குப் பொருள் எழுதியுள்ளனர்.
அவன் வழியில் “ஞாலம் நடுங்கவரும் கப்பல்களுடன்” சென்று ராஜராஜ சோழனும் மாயிருடிங்கம் (பிலிப்பைன்ஸ்), மாபூப்பாளம் (போர்னியோ) மாநக்கவாரம் (நிகோபர் தீவு முதல் இந்தோ நேஷியா வரை)— முதலிய பல தீவுகளை வென்றான்.
இலங்கை – வட இந்திய கடற்பயணத்துக்கு ஒரே வாரம் போதும் என்கிறது மஹாவம்சம் (அத்தியாயம் 11):
தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளருக்கு பிரியமானான்) என்ற இலங்கை மன்னன், அதே பெயருள்ள அசோகச் சக்ரவர்த்திக்குப் பரிசுப் பொருட்களுடன் தூதர் குழு ஒன்றை அனுப்புகிறான். அவர்கள் இலங்கையில் உள்ள ஜம்புகோளத்தில் கப்பல் ஏறி ஏழு தினங்களில் தாம்ரலிப்தியை அடைகின்றனர். இது மேற்குவங்கத்தில் மிதுனபுரி அருகே உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்று. இன்று தாம்லுக் என்ற சிறிய ஊராக இருக்கிறது. எப்படி பூம்புகார், குமரிக்கோடு, தனுஷ்கோடி, துவாரகா முதலிய ஊர்களை சுனாமிப் பேரலைகள் விழுங்கினவோ அப்படியே இந்த ஊர் துறைமுகத்தையும் கடல் விழுங்கிவிட்டது.
ship
இலங்கைக்கு புத்தர் வாழ்ந்த காலத்தில் வந்த வங்காளதேச அரசன் விஜயனும் இங்கேயிருந்துதான வந்தான். முதலில் யக்ஷிணி (குபேர) வம்சப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டு பின்னர் பாண்டியநாட்டுத் தமிழ் பெண்ணைக் கல்யாணம் முடித்தான. துரதிருஷ்டவசமாக குழந்தைகள் பிறக்கவில்லை!
தாம்ரலிப்திக்குச் சென்ற இலங்கைக் குழு அடுத்த ஏழே நாட்களில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா (பாடலிபுத்ரம்) நகரை அடைந்துவிட்டது. மாமன்னன் அசோகன் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஐந்து மாதங்களுக்கு ராஜ உபசாரம் செய்கிறான். பின்னர் அசோகன் அனுப்பிய நிறைய பரிசுப் பொருள்களுடன் அந்தக்குழு இலங்கைக்குத் திரும்புகிறது. இதற்கு 12 நாட்கள் ஆயின.
ஏன் ஐந்து மாதம் இலங்கைக் குழு அங்கே தங்கியது? பருவக் காற்றின் போக்கை அறிந்த நம்மூர் மாலுமிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்டால் இதனை நாட்களில் சென்றுவிடலாம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆகையால் போனவுடன் திரும்பிவர இயலாது. கொஞ்சம் காலம் தங்கிவிட்டு காற்று எதிர்த் திசையில் வீசும் போது திரும்பவேண்டும்.
tamluk board
அத்தியாயம் 18-ல் அசோகன் அனுப்பிய போதி மரம், ஒரு பெரிய குழுவுடன் இலங்கைக்கு வந்த செய்தி கூறப்படுகிறது. அதை வாங்குவதற்காச் சென்றவர், ஐப்பசி மாதம் சுக்லபக்ஷம் த்விதியை திதியில் (வளர்பிறை இரண்டா நாள்) ஜம்புகோளத்தில் புறப்பட்ட அதே நாளன்று புஷ்பபுரத்துக்குப் (பாட்னா) போய்ச்சேர்ந்தார் என்னும் மஹாவம்ச கூற்றை நம்புவது கடினம். ஒருவேளை அதே சுக்ல பக்ஷ த்விதீயை — ஆனால் வேறு ஒரு மாதமாக — ஆக இருக்கலாம். மஹா வம்ச ஒரிஜினலைப் பிற்காலத்தில் எழுதியோர் விட்ட தவறாக இருக்கலாம் இது என்பது என் கருத்து. அல்லது இதை மந்திர –தந்திர –அற்புத– அதிசய வகைச் செய்திகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
அத்தியாயம் 19-ல், சாலை மார்கம் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பாட்னாவில் கங்கை நதியில் போதிமரத்தை ஏற்றிவிட்ட, அசோகன், விந்தியமலையைக் கடந்து ஒரே வாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தாம்ரலிப்திக்கு வந்துவிடுகிறான். இதிலிருந்து அக்காலத்தில் விந்திய மலை வழியாக நல்ல சாலை மார்க்கம் இருந்தது புலப்படும். இது அகத்தியர் அமைத்த பாதை. அதைப் புரணங்கள், “அகஸ்தியர் விந்திய மலையை கர்வ பங்கம்” செய்தார் என்று புகலும்/ புகழும்!
peryplus_first_century_AD_1000px
ஆக மேற்கூறிய குறிப்புகளைக் காண்கையில் அக்காலத்தில் கப்பல் வழி, சாலை வழிப் போக்குவரத்து மிக நன்றாக இருந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். வெள்ளைகாரன் வந்த பின்னால்தான் இந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தன என்று கூறுவோரின் வாயை அடைக்க இதுவே போதும். வால்மீகியும் பரதன் — ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் இருந்து வந்த வழியை விரிவாகக் கொடுத்துள்ளதை ராமாயணத்தில் படித்து அறிக!!
புஷ்பக விமானத்தை நம்பாதோரும் இந்தக் குறிப்புகளை ஏற்கத்தான் வேண்டும். ஆக கைலாச மலையை ராவணன் அசைத்தான் – சிவபெருமானிடம் நல்ல அடி வாங்கினான் என்று ஞான சமபந்தப் பெருமான பதிகத்துக்கு பதிகம் பாடுவதும் உண்மையே.
அரபு நாட்டு ஷேக்குகள், அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட, அட்டூழியங்களையும் பாப காரியங்களையும் பண்ணுவதற்கு பம்பாய்க்கும், ஹைதராபத்துக்கும் வந்து செல்லுவது போல அக்காலத்தில் ராவணனும் அவன தங்கை சூர்ப்பநகையும் சமூக விரோதச் செயல்களில் இறங்க மத்திய இந்தியாவில் இருந்த தண்டகாரண்யம், இமயமலையில் உள்ள கைலாசம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். ராவணனால் விரட்டப்பட்ட குபேரன், இமயமலை திபெத் பகுதியில் குடியேறினான். அக்கலத்திலும் இந்தியா அகதிகளை ஏற்றுக் கொண்டதற்கு இதுவும் ஒரு சான்று.
Silk_Route_China_
பருவக்காற்றைக் கண்டுபிடித்தவன் தமிழனா? கிரேக்கனா? என்ற எனது பழைய கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன். பருவக்காற்று ரகசியத்தை ஒரு இந்திய அசடு (மண்டு), எகிப்தில் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள ஒரு மாலுமியிடம் உளறிவீட்டான். அதன் பின்னர் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், பிரிட்டிஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள் இந்தியாவைச் சூறையாட வழிவகை ஏற்பட்டது. — ((காண்க: தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், ச.சுவாமிநாதன், நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஆண்டு 2009; இதே புத்தகத்தை நிலாசாரல்.காம் ஈ-புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது)) —

உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தி தமிழினம்.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்