சனி, 10 செப்டம்பர், 2016

பெண் குழந்தையின் தமிழ் பெயர்கள்



2771. அகல்விழி 2810. அருள்மொழித்தேவி 2849. அழகுதெய்வாணை
2772. அகநகை 2811. அருளரசி 2850. அழகுநங்கை
2773. அகமுடைநங்கை 2812. அருளம்மை 2851. அழகியபெரியவள்
2774. அகவழகி 2813. அருளம்மா 2852. அறம்
2775. அங்கயற்கண்ணி 2814. அருள் 2853. அறம் வளர்த்தாள்
2776. அஞ்சம்மாள் 2815. அருள்விழி 2854. அறம் வளர்த்த நாயகி
2777. அஞ்சலை 2816. அருள்மங்கை 2855. அறச்செல்வி
2778. அஞ்சளையம்மா 2817. அருள்மணி 2856. அறப்பாவை
2779. அஞ்சொலி 2818. அருள்நெறி 2857. அறவல்லி
2780. அடைக்கலம் 2819. அருள்வடிவு 2858. அறிவுக்கரசி
2781. அணிசடை 2820. அருட்கொடி 2859. அறிவுக்கனி
2782. அணிமாலை 2821. அருளழகி 2860. அறிவுச்சுடர்
2783. அம்மங்கை 2822. அருளாழி 2861. அறிவுமணி
2784. அம்மணி 2823. அருளி 2862. அறிவுநிதி
2785. அம்மாக்கண்ணு 2824. அருட்செல்வி 2863. அறிவுமதி
2786. அம்மாக்குட்டி 2825. அருவி 2864. அறிவுடைநங்கை
2787. அமிழ்தம் 2826. அருமைச்செல்வி 2865. அறிவழகி
2788. அமிழ்தமொழி 2827. அருமையரசி 2866. அறிவுடையரசி
2789. அமிழ்தரசு 2828. அருமைநாயகி 2867. அறிவுக்கொடி
2790. அமிழ்தவல்லி 2829. அல்லி 2868. அறிவொளி
2791. அமுதம் 2830. அல்லியரசி 2869. அன்பு
2792. அமுதா 2831. அல்லிக்கொடி 2870. அன்புப்பழம்
2793. அமுதவாணி 2832. அல்லியங்கோதை 2871. அன்புமணி
2794. அமுதவல்லி 2833. அல்லிவிழி 2872. அன்புச்செல்வி
2795. அமுதசுரபி 2834. அலர்மேல்மங்கை 2873. அன்பரசி
2796. அமுதரசி 2835. அலர்மேல்வல்லி 2874. அன்பழகி
2797. அமுது 2836. அலர்மேலு 2875. அன்புக்கொடி
2798. அமுதினி 2837. அலைவாய்மொழி 2876. அன்புமொழி
2799. அமைதி 2838. அவ்வை 2877. அன்னம்
2800. அமைதோளி 2839. அழகி 2878. அன்னம்மா
2801. அரங்கநாயகி 2840. அழகரசி 2879. அன்னக்கிளி
2802. அரசி 2841. அழகம்மை 2880. அன்னக்கொடி
2803. அரசக்கனி 2842. அழகம்மாள் 2881. அன்னத்தாய்
2804. அரசநாயகி 2843. அழகுடைச்செல்வி 2882. அன்னப்பழம்
2805. அரசர்க்கரசி 2844. அழகுடைநங்கை 2883. அன்னமணி
2806. அரியநாயகி 2845. அழகுமணி
2807. அருஞ்செல்வி 2846. அழகுநிலா
2808. அருண்மொழி 2847. அழகுமுத்து
2809. அருள்மொழி 2848. அழகுமுத்துமணி





2884. ஆடலரசி 2892. ஆதிமுத்து 2900. ஆழ்வார் திருமங்கை
2885. ஆடவல்லாள் 2893. ஆதிமணி 2901. ஆழ்வார் நங்கை
2886. ஆடலழகி 2894. ஆயிரக்கண்ணு 2902. ஆழ்வார் நாயகி
2887. ஆடற்செல்வி 2895. ஆராவமுது 2903. ஆழ்வாரம்மை
2888. ஆண்டாள் 2896. ஆராயி 2904. ஆறுமுகத்தாய்
2889. ஆதி 2897. ஆவுடை நாயகி 2905. ஆறுமுகவல்லி
2890. ஆதிமந்தி 2898. ஆவுடை நங்கை
2891. ஆதிரை 2899. ஆவுடையம்மா





2906. இசை 2928. இயற்கைஒளி 2950. இளநகை
2907. இசைச்செல்வி 2929. இயற்றமிழ் செல்வி 2951. இளநங்கை
2908. இசைஞானி 2930. இலக்கியம் 2952. இளமங்கை
2909. இசையமுது 2931. இளங்கண்ணி 2953. இளையவல்லி
2910. இசையரசி 2932. இளங்கன்னி 2954. இறைவி
2911. இசைவாணி 2933. இளங்கிளி 2955. இறைஎழிலி
2912. இசையழகி 2934. இளங்குமரி 2956. இறையரசி
2913. இந்திரை 2935. இளங்குயில் 2957. இறைமுதல்வி
2914. இந்திரதேவி 2936. இளஞ்சித்திரை 2958. இறைநங்கை
2915. இமயமடந்தை 2937. இளஞ்செல்வி 2959. இன்பக்குரல்
2916. இயலரசி 2938. இளநிலா 2960. இன்பக்கிளி
2917. இயற்கை 2939. இளம்பிறைக்கண்ணி 2961. இன்பவல்லி
2918. இயற்கையரசி 2940. இளமதி 2962. இன்பக்கனி
2919. இயற்கைச்செல்வி 2941. இளமயில் 2963. இன்மொழி
2920. இயற்கைநங்கை 2942. இளம்பிறை 2964. இன்முல்லை
2921. இயற்கைதேவி 2943. இளநாச்சி 2965. இன்னமுது
2922. இயற்கைமகள் 2944. இளந்தத்தை 2966. இனியள்
2923. இயற்கைமுதல்வி 2945. இளந்தென்றல்
2924. இயற்கைவாணி 2946. இளந்தேவி
2925. இயற்கைமங்கை 2947. இளவரசி
2926. இயற்கைவல்லி 2948. இளவழகி
2927. இயற்கைமணி 2949. இளவெயினி





2967. ஈகவரசி 2972. ஈழவாணி
2968. ஈகையரசி 2973. ஈழத்தரசி 2977. ஈழமதி
2969. ஈதலரசி 2974. ஈழமணி 2978. ஈழநிதி
2970. ஈழச்செல்வி 2975. ஈழமுத்து 2979. ஈழக்கதிர்
2971. ஈழமின்னல் 2976. ஈழஎழில்





2984. உலகமுதல்வி 2988. உலகமதி 2996. உயிர்த்துணை
2985. உலகநாயகி 2989. உலகநிதி 2997. உயர்வரசி
2986. உலகநங்கை 2994. உமையரசி 2998. ஊக்கச்செல்வி
2987. உலகிறைவி 2995. உமையாள் 2999. ஊழிமுதல்வி





3000. எண்டோள்வல்லி 3004. எழில்வடிவு 3008. எழிலோவியம்
3001. எல்லம்மா 3005. எழில்முதல்வி 3009. எழிற்செல்வி
3002. எழில் 3006. எழிலம்மை
3003. எழில்நிலா 3007. எழிலரசி





3010. ஏலம்மாள் 3018. ஏழிசைநங்கை 3026. ஏழிசைவல்லி
3011. ஏலவார் குழலி 3019. ஏழிசைப்பாவை 3027. ஏழிசைவாணி
3012. ஏழிசை இறைவி 3020. ஏழிசைமகள் 3028. ஏழிசைமுத்து
3013. ஏழிசை எழிலி 3021. ஏழிசைமங்கை 3029. ஏழிசைச்சுடர்
3014. ஏழிசை ஒளி 3022. ஏழிசைமணி 3030. ஏழிசைநிதி
3015. ஏழிசைச் செல்வி 3023. ஏழிசைமுதல்வி 3031. ஏழிசைமதி
3016. ஏழிசை தங்கை 3024. ஏழிசையரசி
3017. ஏழிசைத்தேவி 3025. ஏழிசையழகி





3032. ஐயை 3033. ஐயம்மாள் 3034. ஐவணம்





3035. ஒண்டமிழரசி 3060. ஒலிநிலா 3052. ஒலியரசி
3036. ஒப்பிலழகி 3061. ஒலிமகள் 3053. ஒலியலழகி
3037. ஒப்பிலாமணி 3062. ஒலிமங்கை 3054. ஒலிவல்லி
3038. ஒப்பிலாமொழி 3063. ஒலிமலர் 3055. ஒலிவாணி
3039. ஒப்பிலாநங்கை 3064. ஒலிமணி 3056. ஒலிஇறைவி
3040. ஒப்பிலாஅழகி 3065. ஒலிமுதல்வி 3057. ஒலிக்கொடி
3041. ஒருமாமணி 3066. ஒளிவடிவு 3058. ஒலிச்செல்வி
3042. ஒலிஇறைவி 3067. ஒலிவல்லி 3059. ஒலித்தேவி
3043. ஒலிஎழிலி 3035. ஒண்டமிழரசி 3060. ஒலிநிலா
3044. ஒலிச்செல்வி 3036. ஒப்பிலழகி 3061. ஒலிமகள்
3045. ஒலித்தங்கை 3037. ஒப்பிலாமணி 3062. ஒலிமங்கை
3046. ஒலித்தேவி 3038. ஒப்பிலாமொழி 3063. ஒலிமலர்
3047. ஒலிநங்கை 3039. ஒப்பிலாநங்கை 3064. ஒலிமணி
3048. ஒலிப்பாவை 3040. ஒப்பிலாஅழகி 3065. ஒலிமுதல்வி
3049. ஒலிமகள் 3041. ஒருமாமணி 3066. ஒளிவடிவு
3050. ஒலிமணி 3042. ஒலிஇறைவி 3067. ஒலிவல்லி
3051. ஒலிமுகிலி 3043. ஒலிஎழிலி
3052. ஒலியரசி 3044. ஒலிச்செல்வி
3053. ஒலியலழகி 3045. ஒலித்தங்கை
3054. ஒலிவல்லி 3046. ஒலித்தேவி
3055. ஒலிவாணி 3047. ஒலிநங்கை
3056. ஒலிஇறைவி 3048. ஒலிப்பாவை
3057. ஒலிக்கொடி 3049. ஒலிமகள்
3058. ஒலிச்செல்வி 3050. ஒலிமணி
3059. ஒலித்தேவி 3051. ஒலிமுகிலி





3068. ஓவியம் 3070. ஓவியச்செல்வி 3072. அவ்வை
3069. ஓவியர் 3071. ஓவியப்பாவை 3073. அவ்வையாரம்மா





3074. கடல் அரசி 3091. கதிர்ச்செல்வி 3108. கலையரசி
3075. கடல் அழகி 3092. கதிர்மதி 3109. கலைவாணி
3076. கடற்கண்ணி 3093. கதிர்நிதி 3110. கலையழகி
3077. கடல்வாணி 3094. கதிர்நகை 3111. கலைமகள்
3078. கடற்கனி 3095. கதிரொளி 3112. கலைமலர்
3079. கண்ணம்மை 3096. கப்பற்செல்வி 3113. கலைமணி
3080. கண்ணம்மா 3097. கயற்விழி 3114. கலைமான்
3081. கண்ணகி 3098. கயற்கண்ணி 3115. கன்னல்
3082. கண்ணழகி 3099. கயற்கொடி 3116. கன்னல்செல்வி
3083. கண்ணாத்தாள் 3100. கயமலர்க்கண்ணி 3117. கன்னல்மொழி
3084. கண்ணிமை 3101. கருங்குழலி 3118. கன்னியம்மா
3085. கண்ணியம்மை 3102. கரும்பாயி 3119. கனிமொழி
3086. கண்ணுக்கினியாள் 3103. கருத்தழகி
3087. கண்மணி 3104. கருத்தகிளி
3088. கதிர் 3105. கருத்தம்மை
3089. கதிர்மணி 3106. கருத்தம்மா
3090. கதிர்வாணி 3107. கருமாரி





3120. காக்கைபாடினி 3126. கார்குழலி 3131. காவிரி
3121. காசியம்மாள் 3127. கார்முகிலி 3132. காவேரி
3122. காத்தாயி 3128. கார்முகில் 3133. காளியம்மை
3123. காந்திமதி 3129. காவற்பெண்டு 3134. காளியம்மா
3124. காமக்கண்ணி 3130. காவியங்கண்ணி
3125. காயாம்பூ






3135. கிள்ளைமொழி 3137. கிளியம்மா 3139. கிளியேந்தி
3136. கிளிக்கண்ணு 3138. கிளிமொழி





3140. குஞ்சம்மை 3170. குமரிமுத்து 3200. குறள்மொழி
3141. குஞ்சம்மா 3171. குமரிவல்லி 3201. குறளமுது
3142. குட்டி 3172. குமரியரசி 3202. குறிஞ்சி
3143. குட்டியம்மா 3173. குமரிமாலை 3203. குறிஞ்சிஇறைவி
3144. குடியரசு 3174. குமரிவாணி 3204. குறிஞ்சிஎழிலி
3145. குடியரசி 3175. குமரிநிதி 3205. குறிஞ்சிச்செல்வி
3146. குணமாலை 3176. குமரிமதி 3206. குறிஞ்சிநங்கை
3147. குணவழகி 3177. குமரிமணி 3207. குறிஞ்சித்தங்கை
3148. குணமொழி 3178. குமரிப்பாவை 3208. குறிஞ்சித்தேவி
3149. குணநாயகி 3179. குமரிமாணிக்கம் 3209. குறிஞ்சிப்பாவை
3150. குணவல்லி 3180. குமுதம் 3210. குறிஞ்சிமகள்
3151. குணச்செல்வி 3181. குமுதினி 3211. குறிஞ்சிமங்கை
3152. குணவாணி 3182. குமுதவல்லி 3212. குறிஞ்சிமணி
3153. குணமதி 3183. குமுதவாயாள் 3213. குறிஞ்சிமலர்
3154. குணநிதி 3184. குயில் 3214. குறிஞ்சிமுகிலி
3155. குணக்கொடி 3185. குயிலி 3215. குறிஞ்சிமுதல்வி
3156. குணவரசி 3186. குயில்மொழி 3216. குறிஞ்சியரசி
3157. குணமணி 3187. குருவம்மா 3217. குறிஞ்சியழகி
3158. குணமொழி 3188. குருமாணிக்கம் 3218. குறிஞ்சிவல்லி
3159. குணப்பாவை 3189. குலக்கொடி 3219. குறிஞ்சிவாணி
3160. குணமாணிக்கம் 3190. குலக்கொழுந்து
3161. குணக்கண்ணி 3191. குலமாணிக்கம்
3162. குணவொளி 3192. குலவாணி
3163. குணமுத்து 3193. குலமுத்து
3164. குப்பாயி 3194. குலமணி
3165. குப்பம்மாள் 3195. குலநிதி
3166. குமரி 3196. குலமதி
3167. குமரியம்மா 3197. குழலி
3168. குமரிக்கொடி 3198. குழல்வாய்
3169. குமரிச்செல்வி 3199. குழல்வாய்மொழி





3220. கூந்தலழகி 3221. கூந்தல்பிறை





3222. கொங்கச்செல்வி 3231. கொன்றைவாணி 3240. கொன்றைமுத்து
3223. கொல்லிப்பாவை 3232. கொன்றைசூடி 3241. கொன்றைநிதி
3224. கொழுந்து 3233. கொன்றையரசி 3242. கொன்றைமதி
3225. கொழுந்தம்மாள் 3234. கொன்றைமகள் 3243.கொன்றைமாணிக்கம்
3226. கொளஞ்சியம்மை 3235. கொன்றைப்பாவை 3244. கொன்றைமொழி
3227. கொளஞ்சியம்மா 3236. கொன்றைநங்கை 3245.கொற்றவைச்செல்வி
3228. கொற்றவை 3237.கொன்றைகொண்டான்
3229. கொன்றை 3238. கொன்றைஎழிலி
3230.கொன்றைச்செல்வி 3239. கொன்றைமணி


3246. கோதை 3250. கோமதி 3254. கோவழகி
3247. கோதைநாயகி 3251. கோமதி நாயகி 3255. கோப்பெரும்பெண்டு
3248. கோதையம்மாள் 3252. கோலவிழி
3249. கோமகள் 3253. கோவரசி





3256. சங்கு 3260. சடையம்மா 3264. சரிவார்குழவி
3257. சங்கிலி 3261. சடைச்சி 3265. சண்பகம்
3258. சங்கிலிநாச்சியார் 3262. சடையன்செல்வி 3266. சண்பகவல்லி
3259. சடை 3263. சந்தச்செல்வி





3267. சாவினி






3268. சிட்டு 3288. சித்திரப்பாவை 3308. சிலம்புமலர்
3269. சிந்தாமணி 3289. சிவக்கொழுந்து 3309. சிலம்புவல்லி
3270. சிந்தாதேவி 3290. சிவகாமவல்லி 3310. சிலம்புநிதி
3271. சிந்து 3291. சிவசங்கு 3311. சிலம்புமதி
3272. சித்திரை 3292. சிவமாலை 3312. சிலையழகி
3273. சித்திரைச்செல்வி 3293. சிவந்தி 3313. சிறைச்செல்வி
3274. சித்திரைவாணி 3294. சிவவடிவு 3314. சிறைவாணி
3275. சித்திரைமணி 3295. சிலம்பரசி 3315. சிறைமுத்து
3276. சித்திரைமுத்து 3296. சிலம்பாயி 3316. சிறைமணி
3277. சித்திரைநாயகி 3297. சிலம்புச்செல்வி 3317. சிறைநாயகி
3278. சித்திரையழகி 3298. சிலம்பொலி 3318. சிறைமாலை
3279. சித்திரைநங்கை 3299. சிலம்பவாணி 3319. சிறைப்பாவை
3280. சித்திரைமகள் 3300. சிலம்புத்தேவி 3320. சின்னம்மை
3281. சித்திரைதேவி 3301. சிலம்புநங்கை 3321. சின்னம்மாள்
3282. சித்திரைப்பாவை 3302. சிலம்புமங்கை 3322. சின்னத்தாய்
3283. சித்திரைமங்கை 3303. சிலம்புப்பாவை 3323. சின்னமணி
3284. சித்திரைவிழி 3304. சிலம்புமகள் 3324. சின்னமுத்து
3285. சித்திரைமதி 3305. சிலம்புமணி
3286. சித்திரைநிதி 3306. சிலம்புமுத்து
3287. சித்திரைவல்லி 3307. சிலம்பம்மை





3325. சுடர் 3333. சுடர்ப்பாவை 3341. சுடர்நாயகி
3326. சுடர்மணி 3334. சுடர்மதி 3342. சுடர்விழி
3327. சுடர்முத்து 3335. சுடர்நிதி 3343. சுடர்மாலை
3328. சுடர்வாணி 3336. சுடர்மலர் 3344. சுடர்க்கொடி
3329. சுடர்தேவி 3337. சுடராயி 3345. சுரும்பார்குழலி
3330. சுடர்செல்வி 3338. சுடரொளி
3331. சுடர்த்தாய் 3339. சுடர்தொடி
3332. சுடர்மகள் 3340. சுடர்குழலி





3346. சூடாமணி 3348. சூடிக்கொடுத்தாள்
3347. சூடாமலர் 3349. சூளாமணி





3350. செங்கண்ணி 3392. செந்தமிழ்க்குழலி 3434. செந்தாமரைவாணி
3351. செங்கனி 3393. செந்தமிழ்ப்பொழில் 3435. செந்தாமரைக்கொடி
3352. செங்கனிவாய் 3394. செந்தமிழ்ச்சோலை 3436. செந்தாமரைநாயகி
3353. செங்கனிமொழி 3395. செந்தமிழ்க்கோதை 3437. செந்தாமரைவிழி
3354. செங்கனிவாயாள் 3396. செந்தமிழமுது 3438. செந்தாமரைமொழி
3355. செங்காந்தாள் 3397. செந்தமிளொளி 3439. செந்தாமரையம்மா
3356. செங்கொடி 3398. செந்தமிழ்மகள் 3440. செந்தாமரைதேவி
3357. செங்கொடிச்செல்வி 3399. செந்தமிழ்க்குமரி 3441. செந்தாழை
3358. செங்கொடிமுத்து 3400. செந்தமிழருவி 3442. செம்பியன்செல்வி
3359. செங்கொடிமணி 3401. செந்தமிழ்ச்சிலை 3443. செம்பியன்தேவி
3360. செங்கொடிமாலை 3402. செந்தமிழ்ப்பிரியாள் 3444. செம்பியன்மாதேவி
3361. செங்கொடிப்பாவை 3403. செந்தமிழ்க்கண்ணி 3445. செம்பியன்நாயகி
3362. செங்கொடிநிதி 3404. செந்தமிழ்முடியாள் 3446. செம்மலர்
3363. செங்கொடிமதி 3405. செந்தமிழ்நாச்சி 3447. செம்மலர்ச்செல்வி
3364. செந்தமிழ் 3406. செந்தமிழ்முல்லை 3448. செம்மலர்க்கொடி
3365. செந்தமிழ்ச்செல்வி 3407. செந்தமிழ்முதல்வி 3449. செம்மலர்க்கொழுந்து
3366. செந்தமிழரசி 3408. செந்தமிழ்ப்பிறை 3450. செம்மலர்மணி
3367. செந்தமிழ்நாயகி 3409. செந்தமிழலகு 3451. செம்மலர்ச்சுடர்
3368. செந்தமிழ்மணி 3410. செந்தமிலோவியம் 3452. செம்மலர்நிதி
3369. செந்தமிழ்முத்து 3411. செந்திற்செல்வி 3453. செம்மலர்மதி
3370. செந்தமிழ்நிதி 3412. செந்திரு 3454. செம்மலர்ப்பூ
3371. செந்தமிழ்மதி 3413. செந்தில்வடிவு 3455. செம்மலர்மாலை
3372. செந்தமிழ்வல்லி 3414. செந்தில்நாயகி 3456. செம்மனச்செல்வி
3373. செந்தமிழ்ப்பாவை 3415. செந்தில்மணி 3457. செம்மொழி
3374. செந்தமிழ்நங்கை 3416. செந்தில்முத்து 3458. செய்தாக்கொழுந்து
3375. செந்தமிழ்மங்கை 3417. செந்தில்சுடர் 3459. செல்லக்கிளி
3376. செந்தமிழ்க்கொடி 3418. செந்தில்கொடி 3460. செல்லம்
3377. செந்தமிழ்த்தேவி 3419. செந்தில்மதி 3461. செல்லம்மா
3378. செந்தமிழ்க்கொழுந்து 3420. செந்தில்நிதி 3462. செல்லம்மாள்
3379. செந்தமிழ்ச்சுடர் 3421. செந்திலரசி 3463. செல்லத்தரசி
3380. செந்தமிழ்க்கிளி 3422. செந்தில்வல்லி 3464. செல்லத்தாய்
3381. செந்தமிழ்மலர் 3423. செந்திற்பாவை 3465. செல்லக்கண்ணி
3382. செந்தமிழ்க்கலை 3424. செந்திற்கொழுந்து 3466. செல்லி
3383. செந்தமிழ்க்கனி 3425. செந்தில்மலர் 3467. செல்வி
3384. செந்தமிழ்ப்பழம் 3426. செந்தில்வாணி 3468. செல்வக்கொடி
3385. செந்தமிழ்வாணி 3427. செந்தாமரை 3469. செல்லக்கோடி
3386. செந்தமிழ்த்தாய் 3428. செந்தாமரைச்செல்வி 3470. செல்வநாயகி
3387. செந்தமிழ்ப்பூ 3429. செந்தாமரைக்கண்ணி 3471. செவ்வந்தி
3388. செந்தமிழ்மொழி 3430. செந்தாமரைச்சுடர் 3472. செவ்வல்லி
3389. செந்தமிழ்விழி 3431. செந்தாமரை மணி 3473. செவ்விழி
3390. செந்தமிழ்மாலை 3432. செந்தாமரைவல்லி
3391. செந்தமிழ்வடிவு 3433. செந்தாமரையரசி





3474. சேரன்செல்வி 3475. சேரமாதேவி





3476. ஞானம் 3483. ஞானமணி 3490. ஞானக்கொழுந்து
3477. ஞானச்செல்வி 3484. ஞானக்கொடி 3491. ஞானமுகில்
3478. ஞானப்பழம் 3485. ஞானப்பழம் 3492. ஞானஎழில்
3479. ஞானமலர் 3486. ஞானக்கனி 3493. ஞானக்கலை
3480. ஞானவடிவு 3487. ஞானத்தரசி 3494. ஞானப்பிறை
3481. ஞானி 3488. ஞானமொழி
3482. ஞானப்பூ 3489. ஞானவல்லி





3495. தங்கம் 3530. தமிழ்ப்புனல் 3565. தமிழமுது
3496. தங்கம்மா 3531. தமிழ்ப்பொழில் 3566. தமிழின்பம்
3497. தங்கமாலை 3532. தமிழ்மகள் 3567. தமிழினி
3498. தங்கவல்லி 3533. தமிழ்மங்கை 3568. தவக்கனி
3499. தங்கவடிவு 3534. தமிழ்க்கொழுந்து 3569. தவமணி
3500. தங்கப்பழம் 3535. தமிழ்ப்பழம் 3570. தவச்செல்வி
3501. தங்கநிதி 3536. தமிழ்க்கனி 3571. தவக்கொடி
3502. தங்கக்கொடி 3537. தமிழ்மொழி 3572. தவமாலை
3503. தங்கமணி 3538. தமிழ்விழி 3573. தவநிதி
3504. தங்கச்சுடர் 3539. தமிழ்நிதி 3574. தவமதி
3505. தங்கவாணி 3540. தமிழ்மதி 3575. தவக்கலை
3506. தங்கச்செல்வி 3541. தமிழெலில் 3576. தவக்கனி
3507. தங்கயெழில் 3542. தமிழ்வாணி 3577. தவமொழி
3508. தங்கமுகில் 3543. தமிழ்க்கொடி 3578. தவமலர்
3509. தஞ்சைவாணி 3544. தமிழ்ச்சுடர் 3579. தவக்கொழுந்து
3510. தஞ்சைவடிவு 3545. தமிழ்வல்லி 3580. தன்மானம்
3511. தஞ்சைக்கொடி 3546. தமிழ்மாலை 3581. தனிக்கொடி
3512. தடங்கண்ணி 3547. தமிழ்க்கண்ணி
3513. தண்ணொளி 3548. தமிழ்மணி
3514. தண்மதி 3549. தமிழ்ப்பாவை
3515. தணிகைச்செல்வி 3550. தமிழ்முத்து
3516. தணிகைக்கொடி 3551. தமிழ்க்கிளி
3517. தணிகைவடிவு 3552. தமிழ்மலர்
3518. தணிகைமணி 3553. தமிழ்க்கோதை
3519. தமிழ்இறைவி 3554. தமிழ்க்குமரி
3520. தமிழ்எழிலி 3555. தமிழ்தேவி
3521. தமிழ்க்கலை 3556. தமிழ்முத்து
3522. தமிழ்ச்செல்வி 3557. தமிழ்ப்பிறை
3523. தமிழ்ச்சோலை 3558. தமிழ்முல்லை
3524. தமிழ்த்தங்கை 3559. தமிழோவியம்
3525. தமிழ்நங்கை 3560. தமிழ்க்குழவி
3526. தமிழ்த்தென்றல் 3561. தமிழ்ப்பிரியாள்
3527. தமிழ்த்தேவி 3562. தமிழ்ஒளி
3528. தமிழ்ப்பாவை 3563. தமிழரசி
3529. தமிழ்க்கூத்தி 3564. தமிழழகி





3582. தாமரை 3586. தாமரைவாணி 3590. தாயம்மா
3583. தாமரைச்செல்வி 3587. தாமரைநாயகி 3591. தாயாரம்மா
3584. தாமரைக்கண்ணி 3588. தாமரைதேவி 3592. தாழ்குழலி
3585. தாமரைமலர் 3589. தாயம்மை





3601. திருமகன் 3606. திருமொழி 3611. தில்லைவாணி
3602. திருமணி 3607. திருவளர்செல்வி 3612. தில்லைவடிவு
3603. திருவரசி 3608. திருவருள் 3613. தில்லையம்மா
3604. திருமலர் 3609. திருவிடச்செல்வி
3605. திருமாமணி 3610. தில்லை





3614. துணைமாலை 3616. துளசிமணி 3618. துளசியம்மாள்
3615. துளசி 3617. துளசிமாலை





3619. தூயவள் 3621. தூயமலர்
3620. தூயமணி 3622. தூயச்சுடர்





3623. தெய்வச்சிலை 3628. தென்செல்வி 3633. தென்றல்
3624. தெய்வயானை 3629. தென்கொடி 3634.தென்னவன்செல்வி
3625. தெய்வானை 3630. தென்மலர் 3635. தென்னவன்தேவி
3626. தென்குமரி 3631. தென்மாலை
3627. தென்முத்து 3632. தென்குமரி





3636. தேன்மொழி 3639. தேவமணி 3642. தேவி
3637. தேன்குழலி 3640. தேவசுடர் 3643. தேன்தமிழ்
3638. தேனருவி 3641. தேவமலர் 3644. தேனம்மா

தை
3645. தைமகள் 3647. தையல்நாயகி 3649. தையல்முத்து
3646. தைப்பாவை 3648. தையம்மா 3650. தையல் மாணிக்கம்
3651. நஞ்சம்மாள் 3655. நடவரசி 3659. நற்குணதேவி
3652. நந்தாமணி 3656. நப்பசலை 3660. நன்முல்லை
3653. நடனச்செல்வி 3657. நப்பின்னை 3661. நன்னாகை
3654. நடனமணி 3658. நல்லம்மா
நா
3662. நாகம்மை 3666. நாகமுத்து 3670. நாககுழலி
3663. நாகம்மா 3667. நாகமணி 3671. நாச்சியார்
3664. நாகவல்லி 3668. நாகக்கொடி 3672. நாமகள்
3665. நாகச்செல்வி 3669. நாகதேவி 3673. நாவுக்கரசி
நி
3674. நிலமணி 3676. நிலவழகி 3678. நிறைமதி
3675. நிலவரசி 3677. நிலாமணி 3679. நிறைமொழி
நீ
3680. நீலமணி 3682. நீலமேனி 3684. நீலவிழி
3681. நீலக்குழலி 3683. நீலவல்லி 3685. நீலம்மை
நெ
3686. நெல்லையம்மை 3687. நெல்லைச்செல்வி 3688. நேயமணி
3689. பகவதி 3695. பட்டம்மை 3701. பவளமல்லி
3690. பகுத்தறிவு 3696. பட்டம்மா 3702. பவளக்கொடி
3691. பச்சைக்கிளி 3697. பட்டு 3703. பழநி
3692. பச்சையம்மை 3698. பனிமொழி 3704. பழநிவடிவு
3693. பசுங்கிளி 3699. பண்ணின் நேர்மொழி 3705. பழநியம்மை
3694. பசுங்கொடி 3700. பரவைநாச்சி
பா
3706. பாகம்பிரியாள் 3711. பாப்பா 3716. பாவரசி
3707. பாண்டிமாதேவி 3712. பாப்பாள் 3717. பாவை
3708. பாண்டிமுத்து 3713. பாமகள் 3718. பாமகள்
3709. பாண்டியம்மாள் 3714. பால்மொழி
3710. பாப்பம்மை 3715. பாலம்மை
பி
3719. பிச்சையம்மாள் 3721. பிறைக்கண்ணி
3720. பிரியாநங்கை 3722. பிறைநிலா
பீ
3723. பீலிவளை
பு
3724. புகழ்ச்செல்வி 3741. புகழ்முத்து 3758. புதுமைவல்லி
3725. புகழ்வாணி 3742. புகழருவி 3759. புதுமைமணி
3726. புகழ்க்கொடி 3743. புகழ்ப்பாவை 3760. புதுமைக்கொழுந்து
3727. புகழ்மாலை 3744. புகழ்நாயகி 3761. புதுமைவாணி
3728. புகழ்மொழி 3745. புகழ்தமிழ் 3762. புதுமைநிதி
3729. புகழ்வல்லி 3746. புகழ்மாலை 3763. புதுமைமதி
3730. புகழ்க்கொழுந்து 3747. புகழ்மங்கை 3764. புதுமைமுத்து
3731. புகழ்க்குழலி 3748. புகழ்நங்கை 3765. புதுமலர்ச்செல்வி
3732. புகழ்த்தேவி 3749. புகழ்க்குமரி 3766. புலிக்கொடி
3733. புகழ்வடிவு 3750. புகழொளி 3767. புலித்தேவி
3734. புகழ்மேனி 3751. புகழ்க்கண்ணி 3768. புலியரசி
3735. புகழ்மணி 3752. புகழமுது 3769. புலிச்செல்வி
3736. புகழ்நிதி 3753. புகழ்விழி 3770. புலிப்பாவை
3737. புகழ்மதி 3754. புதுமை
3738. புகழரசி 3755. புதுமைச்செல்வி
3739. புகழ்மாணிக்கம் 3756. புதுமைக்கொடி
3740. புகழ்நகை 3757. புதுமைமொழி
பூ
3771. பூங்கண்ணி 3777. பூங்கோதை 3783. பூவரசி
3772. பூங்கதிர் 3778. பூம்பாவை 3784. பூவல்லி
3773. பூங்காவனம் 3779. பூமகள் 3785. பூவழகி
3774. பூங்கிளி 3780. பூமயில் 3786. பூவிழி
3775. பூங்குழலி 3781. பூமாலை
3776. பூங்கொடி 3782. பூவரசு
பெ
3787. பெரியநாயகி 3790. பெருங்கோப்பெண்டு 3793. பேச்சி
3788. பெரியநாச்சியார் 3791. பெருஞ்சித்திரை 3794. பேச்சிமுத்து
3789. பெருங்கண்ணி 3792. பெருஞ்செல்வி 3795. பேச்சியம்மாள்
பை
3796. பைங்கிளி 3797. பைந்தமிழ்ச்செல்வி
பொ
3798. பொற்குழலி 3805. பொன்மாலை 3812. பொன்னம்மை
3799. பொற்கொடி 3806. பொன்முடி 3813. பொன்னம்மாள்
3800. பொற்செல்வி 3807. பொன்முத்து 3814. பொன்னி
3801. பொன்கிளி 3808. பொன்மொழி 3815. பொன்னியம்மா
3802. பொன்மகள் 3809. பொன்வல்லி 3816. பொன்னுத்தாய்
3803. பொன்மணி 3810. பொன்னரசி
3804. பொன்மயில் 3811. பொன்னழகி
3817. மங்கம்மா 3834. மணிமேகலை 3851. மலர்குழலி
3818. மங்கலம் 3835. மணிநகை 3852. மலர்க்கொடி
3819. மங்கலநாயகி 3836. மணியரசி 3853. மலர்மங்கை
3820. மங்கலவல்லி 3837. மணியழகி 3854. மலர்மதி
3821. மங்கை 3838. மணிவல்லி 3855. மலர்நிதி
3822. மங்கையற்கரசி 3839. மதியழகி 3856. மலர்விழி
3823. மஞ்சு 3840. மதியொளி 3857. மலைமகள்
3824. மஞ்சுளா 3841. மயில் 3858. மலைமணி
3825. மட்டுவார்குழலி 3842. மயிலம்மை 3859. மலையம்மை
3826. மணவழகி 3843. மயிலம்மா 3860. மலையம்மாள்
3827. மணி 3844. மரகதம் 3861. மலையரசி
3828. மணிக்கொடி 3845. மரகதவல்லி 3862. மலைவளர்மங்கை
3829. மணியொளி 3846. மருதம்மா 3863. மல்லம்மா
3830. மணிமலர் 3847. மருதவாணி 3864. மழையரசி
3831. மணிமங்கை 3848. மருதவல்லி 3865. மறைச்செல்வி
3832. மணிமாலை 3849. மல்லி
3833. மணிமொழி 3850. மல்லிகை
மா
3866. மாசாத்தி 3872. மாதரி 3878. மாரிமுத்தாள்
3867. மாணிக்கம் 3873. மாதவி 3879. மாரியம்மை
3868. மாலைமதி 3874. மாம்பழத்தி 3880. மான்விழி
3869. மாலைநிதி 3875. மாதேவி
3870. மாலையம்மா 3876. மாவடுக்கண்ணி
3871. மாதரசி 3877. மாரித்தாய்
மி
3881. மின்னல் 3884. மீனக்கண்ணி 3887. மீனாட்சி
3882. மின்னல்கொடி 3885. மீனக்கொடி
3883. மின்னொளி 3886. மீன்விழி
மு
3888. முக்கனி 3899. முத்தாலம்மை 3910. முருகம்மாள்
3889. முகில் 3900. முத்துக்கிளி 3911. முருகாயி
3890. முடத்தாமக்கண்ணி 3901. முத்துக்குமரி 3912. முரசொலி
3891. முண்டகக்கண்ணி 3902. முத்துச்செல்வி 3913. முல்லை
3892. முத்தம்மை 3903. முத்துநகை 3914. முல்லைக்கொடி
3893. முத்தம்மா 3904. முத்துநாயகி 3915. முல்லை நகை
3894. முத்தரசி 3905. முத்துமங்கை 3916. முல்லை நாயகி
3895. முத்தழகு 3906. முத்துநங்கை 3917. முனியம்மை
3896. முத்தழகி 3907. முத்துமணி 3918. முனியம்மாள்
3897. முத்தமிழ்ச்செல்வி 3908. முத்துமாலை 3919. முன்னேற்றம்
3898. முத்தமிழ்வல்லி 3909. முத்துமாரி
மெ
3920. மெய்யம்மை 3921. மெய்யம்மாள் 3922. மெய்யறிவு
மை
3923. மைவிழி
மொ
3924. மொய்குழல் 3925. மொய்குழலி
யா
3926. யாழ்மொழி 3936. யாழ்நகை 3946. யாழிசை
3927. யாழ்ச்செல்வி 3937. யாழ்நாயகி 3947. யாழ்வாணி
3928. யாழ்ப்பாவை 3938. யாழ்வல்லி 3948. யாழ்க்கலை
3929. யாழ்விழி 3939. யாழ்குமரி 3949. யாழ்மலர்
3930. யாழ்நிதி 3940. யாழ்தேவி 3950. யாழ்ப்பூ
3931. யாழ்மதி 3941. யாழ்மணி 3951. யாழ்மாலை
3932. யாழம்மா 3942. யாழரசி 3952. யாழ்மகள்
3933. யாழலகி 3943. யாழ்முத்து 3953. யாழ்மாணிக்கம்
3934. யாழ்நங்கை 3944. யாழ்பாடி 3954. யாழினி
3935. யாழ்மங்கை 3945. யாழொலி
3955. வஞ்சிக்கொடி 3963. வண்ணச்செல்வி 3971. வள்ளிக்கொடி
3956. வடிவம்மை 3964. வண்ணமாலை 3972. வள்ளிச்செல்வி
3957. வடிவம்மாள் 3965. வண்டார்குழலி 3973. வள்ளிமணி
3958. வடிவரசி 3966. வல்லரசி 3974. வள்ளிமுத்து
3959. வடிவழகி 3967. வல்லி 3975. வள்ளுவர்மொழி
3960. வடிவு 3968. வல்லிக்கொடி 3976. வளர்பிறை
3961. வடிவுக்கரசி 3969. வள்ளி 3977. வளர்மதி
3962. வடிவுடைநாயகி 3970. வள்ளிநாயகி
வா
3978. வாகைக்கொடி 3982. வாலம்மை 3986. வானம்பாடி
3979. வாணி 3983. வாலம்மாள் 3987.வானவன்மாதேவி
3980. வாழ்வரசி 3984. வான்மதி
3981. வார்குழலி 3985. வான்மலர்
வி
3988. விடுதலை 3989. விடுதலைவிரும்பி
வீ
3990. வீரம்மை 3992. வீரமாதேவி 3994. வீராயி
3991. வீரம்மா 3993. வீரக்கண்ணு
வெ
3995. வெண்ணியக்குயத்தி 4006. வெள்ளிக்கனி 4017. வெற்றிவாணி
3996. வெண்ணிலா 4007. வெள்ளையம்மா 4018. வெற்றிமலர்
3997. வெண்மணி 4008. வெற்றி 4019. வெற்றியம்மா
3998.வெண்டாமரைச்செல்வி 4009. வெற்றிச்செல்வி 4020. வெற்றிக்கண்ணு
3999. வெண்ணகை 4010. வெற்றியரசி 4021.வெற்றிக்கொழுந்து
4000. வெள்ளி 4011. வெற்றிமாலை 4022. வெற்றிமணி
4001. வெள்ளியம்மை 4012. வெற்றிமுத்து 4023. வெற்றிமங்கை
4002. வெள்ளியம்மா 4013. வெற்றிக்கனி 4024. வெற்றிநங்கை
4003. வெள்ளிவீதி 4014. வெற்றிமதி 4025. வெற்றிமாரி
4004. வெள்ளிமதி 4015. வெற்றிநிதி
4005. வெள்ளிநிதி 4016. வெற்றிக்கொடி
வே
4026. வேண்மாள் 4031. வேலாங்கண்ணி 4036. வேலம்மாள்
4027. வேம்பு 4032. வேல்நாச்சியார் 4037. வேலாயி
4028. வேப்பம்மாள் 4033. வேல்மயில் 4038. வேளாங்கண்ணி
4029. வேம்பாயி 4034. வேல்விழி
4030. வேம்பரசி 4035. வேலம்மை
வை
4039. வைகறை 4046. வைகறைமணி 4053. வையைமணி
4040. வைகறைச்செல்வி 4047.வைகறைக்கொடி 4054. வையைமகள்
4041. வைகறைப்பாவை 4048. வையமகள் 4055. வைரம்
4042. வைகறைவாணி 4049. வையை 4056. வைரமணி
4043. வைகறைமதி 4050 வையைச்செல்வி 4057. வைரமுத்து
4044. வைகறைநிதி 4051. வையைப்பாவை
4045. வைகறைதேவி 4052. வையைமுத்து

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

கேதார கெளரிவிரதம் - விளக்கம்:

கேதார கெளரிவிரதம் - விளக்கம்:
பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு கைலாய மலையின் சிகரத்தில் அமைந்துள்ள தேவசபையில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உமதேவி சமேதராய் விளங்கும் பரமசிவன் வீற்றிருக்கையில் பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானது சக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, ”அர்த்நாரீ” யாக ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.
"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி அம்பாள்” இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது ”பராசக்தி” எனப்போற்றப்படுகின்றது.
தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும், இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம்” பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.
கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உமதேவி சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க கிருதாசி, மேனகை முதலிய தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய அரம்பையானவள் அற்புதமான நடன விசேடங்களை நடித்துக்காட்டுகிறாள்.
அப்போது அந்தரங்க பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள். பார்வதக்குகை அச் சிரிப்பொலியால் கலகலவென எதிரொலிக்கின்றது. பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கௌரவித்து பாராட்டுகிறார்கள்.
இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்வேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர்.
ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் "பிருங்கி முனிகள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.
பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் அர்த்தபுஷ்டியான ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார். தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாத மேலும் கோபமுற்றவளாக எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.
ஆதலால் "நிற்க முடியாமல் போகக் கடவாய்' என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். இந்நிலையில் என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆச்சிரமத்தை அடைந்தார்.
இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை எனக் கூறி கைலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஓர் விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.
ஆனால் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியின் திருப்பாதங்கள் அவ்வனத்தில் பட்டதும், மரஞ் செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று தளிர்த்தன. மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹாரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆச்சிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.
முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! முக்கண்ணரின் தேவியே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவியே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.
அதற்கு பார்வதி தேவி "பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து மிகவும் நீண்ட தூரம் வந்து விட்டேன்” என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.
வால்மீகி முனிவர் பரமேஸ்வரியை தனது ஆச்சிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே (தற்போது தென் இந்தியாவில் உள்ள மாங்காட்டு அம்மன் ஆலயம்) வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.
தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் "கேதார கௌரி விரதம்" எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.
புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் என்பவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும் என்று கூறினார். சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் தேவி? எனக் கேட்டார். அப்போது "இமைப் பொழுதும் உமைப் பிரியாத வரம் வேண்டும் சுவாமி" என்றார். தந்தோம் தேவி என தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கைலாயம் சென்றார். இறைவி இவ் விரதத்தை அனுஷ்டித்தமையால் ஓர் உயிரும் ஓர் உடலுமாக இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகின்றன.
இவ்விரத முடிவில் 21 இழையினால் ஆன காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கையிற்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்டுதல் வேண்டும். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று, அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாங்கு வாழ்வோமாக! 

இராவணன் யார்?


இராவணன் யார்? என்ற கேள்வியுடன் இந்த பதிவை எழுதுகிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம்.

தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன்.
இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.

இராவணனைப் பற்றி தமிழில் இணையத்தில் தேடினால் வருவது எல்லாம் சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களும் தேவையற்ற பல தகவல்களும்தான். இதனில் இருந்து இராவணனை பற்றி எந்த அளவு தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இராவணனைப்பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

இராவணனின் அடுத்த பிறப்புதான் "புத்தர்" என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறது. இராவணனை கொன்றதை (சிங்கள மன்னனை) தமிழ் மக்கள் கொண்டாடுவதாகவும் அதைதான் தீபாவளி என்கிறார்கள் என்றும் சிங்கள தலைமுறைகளுக்கு வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது.

இராவணனை சிங்களவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கான அரசியலை பிறிதொரு பத்தியில் பேசுவோம்.

இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. 

சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புட்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு. இது குறித்து யாரிடனமாவது தரவுகள் இருப்பின் மறக்காமல் இங்கு பதிவு செய்யவும்.

 முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போக இராவணன் இராமனால் கொல்லப்படவில்லை என்றும் கோமா நிலையில் இருக்க கூடிய இராவணனின் உடல் சிவனொளிபாதமலையை அண்டிய அடந்த காட்டுப்பகுதியில் இருக்கலாம் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை.

இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.

இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

இங்கு சில இணைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தரம் படித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை பகிருங்கள். இந்த இணைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரலாறுகளை தேடும் ஆர்வலர்களை இங்கு கொண்டுவாருங்கள். நாங்கள் அறியத் தவறிய வரலாறுகளை இனியாவது தேடுவோம்