வியாழன், 8 செப்டம்பர், 2016

நாவல் மரபணு சடுதி மோட்டார் செயல்பாடு முற்போக்கு இழப்பு ஏற்படும்

ஐ எச் சுட்டி ஆய்வு குழந்தை நரம்புக்கோளாறினை ஒரு அரிய வடிவம் பொறுப்பு நுட்பத்தை விளக்கும்.

ஆராய்ச்சி அறிவியல் சைகைக்காட்டல் உள்ளது. (முழு அணுகல் உள்ளடக்கம் தடுப்பு)


 · 
ஐந்து பெரிது,
ஆறு சிறிது
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
👇
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
-கவிஞர் வைரமுத்து
கிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவர் இந்து சமய கடவுளாவார். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர கேசவன், கோவிந்தன், கோபாலன் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தங்கை, ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் வீடு திரும்பும் போது கம்சனுக்கு ஓர் அசரீரி கேட்டது. ரூசூ39;கம்சா, உன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறதுரூசூ34; என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்சன் தேவகியைக் கொன்று விட்டால் தன் உயிருக்கு பிரச்சனை இல்லை என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது வசுதேவன் கம்சனிடம் வேண்டி இவளை கொல்ல வேண்டாம், நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். எனினும் அவர்கள் இருவரையும் சிறை வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.


எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.


தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு. அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி, அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர். கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது, அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது.


கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை. கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின. ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான். இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமனையும், இவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் மல்யுத்த வீரர்கள் இவர்களால் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணருடன் மோத முயன்றான். இறுதியில் இவர் கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

nelluvai vaikunda ekadasi festival 2010 (2).avi

nelluvai vaikunda ekadasi festival 2010 (3).avi

Sree Dhanwanthari Temple Nelluvai 3

The Arya Vaidya Pharmacy